Page 387 of 391 FirstFirst ... 287 337 377 383 384 385 386 387 388 389 390 391 LastLast
Results 4,633 to 4,644 of 4690

Thread: புதிரோ புதிர் எண்-571-05-06-2015

                  
   
   
  1. #4633
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண்-562

    ஒரு ஊரிலே மாணிக்கம் என்று ஒருவன் இருந்தான். ஓரளவு செல்வம் மிக்கவன். ஏழைகளுக்கு இரங்கும் கருணை உள்ளம் கொண்டவன். அதே ஊரிலே கருப்பன் என்று ஒருவனும் இருந்தான். அவன் பேராசை மிக்கவன். ஏழைகளுக்குக் கடன் கொடுத்துக் கந்து வட்டி வாங்குவது அவனுக்குக் கை வந்த கலை.அந்த ஊரில் இருந்தவர்கள் மாணிக்கத்தைப் புகழ்ந்து பாராட்டியும், கருப்பனை இகழ்ந்தும் பேசுவார்கள்

    மாணிக்கத்தின் புகழைக் கண்டு கருப்பன் மிகுந்த பொறாமை கொண்டான்.எப்படியாவது மாணிக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான்.

    ஒருநாள் மாணிக்கத்தைப் பார்க்க அவனது நண்பன் வந்திருந்தான்.அவனுக்கும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெரும் பணக்காரரின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாகவும், மணப்பரிசாக மணமகளுக்குக் கொடுக்க விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்று வாங்கவேண்டும் என்றும், திருமணச் செலவு நிறைய ஆகி ,அவனிடம் பணப்பற்றாக்குறை இருப்பதினால், மாணிக்கம் கொடுத்து உதவினால், ஒரு மாத காலத்துக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் கூறினான்.
    நண்பனுக்குத் திருமணம் கூடிவந்தது கேட்டு மாணிக்கம் மகிழ்ந்தான். ஆனால் அந்த சமயம் மாணிக்கத்திடம் கையிருப்பில் பணம் இல்லை. அவனுக்கும் ஒரு மாதத்துக்குள் பணம் வந்துவிடும். இருந்தாலும், நண்பன் கேட்கும்போது இல்லை என்று சொல்வது எப்படி என்று யோசித்து, மறுநாள் தருவதாகக் கூறினான்.
    அன்று மாலையே, கருப்பனிடம் சென்று ஒரு மாதகாலத்தில் திரும்பக் கொடுப்பதாகக் கூறி ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டான்.கருப்பனுக்கு ஒரே மகிழ்ச்சி. மாணிக்கம் தன்னிடம் மாட்டிக்கொண்டான் என்று நினைத்து, பணத்தைக் கொடுப்பதாகக் கூறினான்.ஆனால் ஒரு நிபந்தனை போட்டான். அதாவது அவனுக்கு வட்டி ஏதும் வேண்டாம் என்றும், சரியாக முப்பது நாளைக்குள் பணம் தர இயலாவிட்டால், மாணிக்கத்தின் உடலில் இருந்து அவன் விரும்பிய இடத்தில், ஒரு கிலோ சதையை வெட்டி எடுத்துக்கொள்ள சம்மதம் என்று மாணிக்கம் பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்றும் கூறினான்.
    மாணிக்கம் அதைப் பற்றி எதுவும் அதிகம் ஆலோசிக்காமல், எப்படியும் ஒரு மாதத்தில் பணம் வந்துவிடுமென்பதினால் சம்மதித்து பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் சென்று நண்பனுக்குக் கொடுத்தான்.நண்பனும் திருமணம் முடிந்து மனைவியை அழைத்துக்கொண்டு தேனிலவுப் பயணம் சென்று விட்டான்.
    ஒரு மாதம் சென்றது. எதிர்பாரதவிதமாக மாணிக்கத்தின் பணம் கைக்கு வந்து சேர தாமதம் ஆகிவிட்டது.நண்பனும் தேனிலவு முடிந்து இன்னும் திரும்பி வரவில்லை. அதனால் கருப்பனிடம் வாங்கிய பணத்தைக் கூறியபடி கொடுக்க இயலாமல், கருப்பனிடம் சென்று எப்படியும் இன்னும் பத்து நாட்களுக்குள் பணம் கொடுப்பதாகக் கூறினான் மாணிக்கம்.
    கருப்பன் இந்த சந்தர்ப்பத்துக்காத்தானே காத்திருந்தான். அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. " பத்திரத்தில் ஒத்துக்கொண்டபடி ஒரு கிலோ சதைதான் வேண்டும் அது இல்லாமல் நீ ஆயிரம் மடங்கு பணம் பத்து நாட்கள் கழித்துக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்" என்றான்......அது மட்டும் இல்லாமல் அந்த பஞ்சாயத்தில் போய் வழக்கும் தொடுத்தான்.
    பஞ்சாயத்து கூடியது. யார் என்ன சொன்னாலும் கருப்பன் ஒத்துக்கொள்ளவில்லை. தனக்கு ஒரு கிலோ சதைதான் வேண்டும் என்றான். அந்த பஞ்சாயத்து தலைவர் சிறந்த அறிவாளி.......சிறிது நேரம் ஆலோசனை செய்தார்..பிறகு கருப்பனின் கோரிக்கை நியாயமானதே என்றும், கருப்பன், மாணிக்கத்தின் உடலில் இருந்து ஒரு கிலோ சதையை அரிந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக்கூறினார்.அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
    கருப்பன் ஒரு கத்தியையையும் தராசையும் எடுத்துக்கொண்டு மாணிக்கத்தை நெருங்கி, எந்த இடத்தில் இருந்து சதையை அறுக்கலாம் என்று மாணிக்கத்தை ஏற இறங்கப் பார்த்தான்.
    அப்போது "ஒரு நிமிஷம் பொறு கருப்பா" என்றால் பஞ்சாயத்துத் தலைவர்.கருப்பன் என்ன என்று கேட்டபடி அவரைப் பார்த்தான்.
    அவர் கூறியதைக் கேட்டதும், தனக்கு மாணிக்கத்தின் உடலில் இருந்து சதை வேண்டாம்என்றும், தாமதம் ஆனாலும் பரவாயில்லை,தனது பணத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் என்றும் கூறினான்.............................................கருப்பன் ஏன் அப்படி திடீரென்று மாறினான்?????????????

  2. #4634
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    ரத்தம் வராமல் சதையை அறுக்க சொல்லி இருப்பார்

  3. #4635
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    Quote Originally Posted by dellas View Post
    கூறியதைக் கேட்டதும், தனக்கு மாணிக்கத்தின் உடலில் இருந்து சதை வேண்டாம்என்றும், தாமதம் ஆனாலும் பரவாயில்லை,தனது பணத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் என்றும் கூறினான்
    கருப்பன் பயந்திருக்கிறான். எனவே இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணி சொல்றேன்.

    "எந்த அளவுக்கு மாணிக்கம் உடம்புலேருந்து ரத்தம் வருதோ,,, அந்த அளவுக்கு உன் உடம்பிலிருந்து சதை / ரத்தம் எடுத்துக் கொள்ளப்படும் " ந்னு கருப்பன்கிட்டே சொல்லி இருப்பார்
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  4. #4636
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    இது "The Merchant of Venice" கதை தான?
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  5. #4637
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 May 2010
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    12,073
    Downloads
    0
    Uploads
    0
    புதிர் எண்-562
    கருப்பா... அவன் மீது ஒரு கிலோ சதையை எடுத்துக்கொள் மேலும் அவன் பணம் திருப்பி தந்தவுடன் அந்த ஒரு கிலோ சதையை மீண்டும் அவனது உடம்பில் ஒட்ட வைக்க வேண்டும் இல்லையேல் உனது உடம்பிலிருந்து ஒரு கிலோ சதையை அவனிடம் கொடுத்துவிடவேண்டும்.
    என்று கூறி இருப்பார்.

  6. #4638
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    அன்புள்ள மன்ற நண்பர்களே ....வணக்கம். ஒரு நீண்ட தவிர்க்க இயலாத பிரிவு....பணியிடத்தில் ஏற்பட்ட பெரும் மாறுதல் காரனமாக மன்றம் வர இயலாமல் போனது. அனைவரும் மன்னிக்க வேண்டுகின்றேன்.....இனி தொடர்ந்து உங்களைச் சந்திக்க முயற்சி செய்கின்றேன்.....வணக்கம்

  7. #4639
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண்-562க்குரிய நண்பர் டெல்லாஸ் அவர்களும் லென்ராம் அவர்களும் சரியான விடையை கூறியுள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த புதிருடன் நாளை உங்களைச் சந்திக்கின்றேன்.

  8. #4640
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    அன்பு நண்பர்களே,வணக்கம் பல.நீண்ட நாட்கள் கழித்து மறுபடியும் மன்றத்துக்கு வந்துள்ளேன். உங்கள் ஆதரவை எப்போதும்போல் அளித்து புதிர்களை படித்து இன்புற வேண்டுகின்றேன். வணக்கம்

  9. #4641
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண்-563

    ஒரு ஊரிலே ஒரு கணவனும் மனைவியும் மிகவும் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்திவந்தார்கள்.
    யார் கண் பட்டதோ தெரியவில்லை!.அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் தோன்றத் தொடங்கின.ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததினால் , அதுவே பெரிய சண்டையாக மாறத் தொடங்கியது.
    எப்படி இருந்தவர்கள் எப்படி மாறிவிட்டார்கள்??? என்று ஊரார் பேசத் தொடங்கினார்கள்

    .ஒருநாள் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட கோபத்தை அடக்க இயலாத கணவன் மனைவியைப் பார்த்து இனிமேல் நீயாக வந்துதான் என்னிடம் பேசவேண்டும். அப்படிப் பேசாவிட்டால் என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் பேசமாட்டேன்.இது உறுதி! என்று சொன்னான்.

    அதற்கு அவளும், நானாக வந்து உங்களிடம் பேசும் அளவுக்கு நான் மதிப்பு தாழ்ந்துபோகவில்லை.இனி நீங்களாக வந்து என்னிடம் பேசினால்தான் நான் உங்களுடன் பேசுவேன். இல்லாமல் நானாக வந்து பேசமாட்டேன்.� என்று கூறினாள்.
    அன்றிலிருந்து இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே வாழ்க்கையை நடத்திவந்தார்கள்.
    இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன.

    யாராவது ஒருவர் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து முன்வந்து பேசினால் போதும். இருவரும் பழையபடி மகிழ்வுடன் வாழலாமே� என்று இருவருமே நினைத்தார்கள். ஆனால் இருவரில் யாரும் தங்கள் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து முதலில் பேசத் தயாராக இல்லை.

    இருவரையும் ஒற்ருமைப் படுத்த நினைத்தார் ஒரு பெரியவர்.இருவரிடமும் நடந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார். இருவருமே விட்டுக்கொடுத்து கீழிறங்கிவரத் தயாராக இல்லை என்பதை உணர்ந்தார்.

    கொஞ்சம் சிந்தனை செய்தார். அவர்களில் இருவரில் ஒருவர் தான் கூறியபடி உறுதிமொழியைப் பின்பற்றவில்லை..என்பதை..உணர்ந்தார்.

    அதை அவர்களுக்கு உணர்த்தி நிரூபித்து இருவரையும் ஒற்றுமைப் படுத்தினார்.
    இப்போது..நீங்கள்..கூறுங்கள்.

    அந்தப் பெரியவர் எப்படி அவர்கள் உறுதிமொழியின்படி நடக்கவில்லை என்பதை நிரூபித்தார்?????????

  10. #4642
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    "அதற்கு அவளும், நானாக வந்து உங்களிடம் பேசும் அளவுக்கு நான் மதிப்பு தாழ்ந்துபோகவில்லை.இனி நீங்களாக வந்து என்னிடம் பேசினால்தான் நான் உங்களுடன் பேசுவேன். இல்லாமல் நானாக வந்து பேசமாட்டேன்.� என்று கூறினாள்."

    மனைவி பேசியாகி விட்டது. இனி கணவன் பேசலாம்.

  11. #4643
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Posts
    30
    Post Thanks / Like
    iCash Credits
    62,598
    Downloads
    12
    Uploads
    0
    இந்த பதில் மிகவும் சரியானது தான் நண்பரே....

  12. #4644
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    அன்ப்ர் டெல்லாஸ் அவர்களின் விடை மிகச் சரியானது....வாழ்த்துக்கள்.

Page 387 of 391 FirstFirst ... 287 337 377 383 384 385 386 387 388 389 390 391 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •