புதிர் எண்-316
ஒரு தேசிய நெடுஞ்சாலை அது.
பெரிய வாகன விபத்து நடந்துள்ளதாக தகவல் வரவே, காவல் துறையும், ஆம்புலன்ஸும் விரைந்து அங்கே போனார்கள்.
அங்கே இரண்டு லாரிகளும், ஆறு கார்களும் விபத்தில் சிக்கிக் கிடந்தது.
காவலர்கள் இரண்டு லாரிகளை ஓட்டிய டிரைவர்களை மட்டுமே அங்கே கண்டார்கள்.
அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதைக்கண்டு, உடனே அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
விபத்தில் சிக்கி கிடந்த ஆறு கார்களின் ஓட்டுனர்கள் ஏன் அங்கே இல்லை.
அவர்களுக்கு என்ன ஆனது??????????????/
ஏன்னா...
அந்த லாரிகள்தானே, அந்தக் கார்களை ஏற்றிச் சென்றன...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அக்னி அவர்கள் சொல்வது சரியென்றே எனக்கும் படுகிறது.
புதிர் எண்-317
ராமுவிடம் ஒரு லாரி இருந்தது.
அதில் கட்டிட வேலைக்குத் தேவையான மணல் ஏற்றிச் சென்று சப்ளை செய்வதுதான் அவனது தொழில்.
மறுநாள் காலை ஒரு லோடு மணல் சப்ளை செய்வதாக ராமு ஒப்புக்கொண்டிருந்தான்.
அன்று மாலை முதலே மேகம் கறுத்து, எந்த நேரமும் மழை வரலாம் என்பதுபோல் இருந்தது.
அதனால் ராமு மறுநாள் காலையில் சென்று லாரியில் மணல் நிரப்புவதற்குப் பதிலாக மாலையிலேயே சென்று மணல் ஏற்றிக்கொண்டான்.
தொலைதூரம் போகவேண்டியதினால் லாரியின் டீசல் டாங்கை நிறப்பிக்கொண்டான்.
பிறகு நேராக ஒரு எடைபார்க்கும் மேடை சென்று எடையைச் சோதித்தான்…
4 டன் எடை இருந்தது…
4 டன் எடைதான் அவனது லாரிக்கு அனுமதிக்கப்பட்ட அதிக பட்ச எடை. அதனால் ராமு திருப்தியுடன் லாரியை தனது வீட்டுக் காம்பவுண்டில் நிறுத்தி வைத்தான்.
உறங்கப்போகும் முன்பாக காம்பவுண்ட் கேட்டை ஞாபகமாகப் பூட்டி வைத்தான்.
இல்லையென்றால் யாராவது வந்து டீசலை திருடிவிடலாம் அல்லவா?
மறுநாள் காலை எழுந்தான்.
லாரியை கிளப்பிக்கொண்டு புறப்பட்டான்.
பிரதான சாலைக்கு வந்தடைந்தான்.
அங்கே ஒரு டிராபிக் போலீஸ் ராமுவின் லாரியை மடக்கினார்.
பக்கத்தில் இருந்த எடைபார்க்கும் மேடையில் எடை போடச் சொன்னார்.
ராமு எந்தக் கவலையும் இல்லாமல் எடை போடும் இடத்தில் நிறுத்தினான். ஆனால் எடையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
ஏனென்றால் எடை 4 டன்னைவிட அதிகமாகக் காட்டியது.
அதனால் போலீஸ் அவனுக்கு அபராதம் விதித்தார்.
நண்பர்களே ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை.
தான் முதல் நாள் சரியான எடை போட்டு நிறுத்திய லாரியில் மறுநாள் காலை எப்படி எடை அதிகம் ஆனது என்று இன்னுமும் குழம்பியபடி இருக்கின்றான்.
நீங்கள்தான் அவனுடைய குழப்பத்தைத் தீர்க்கவேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!
அன்று இரவு மழை பெய்ததால் மணல் மழையில் நனைந்தது. அதனால் மணலின் எடை கூடியது. அதை அறியாமல் 4 டன் என்ற நம்பிக்கையில் ராமு லாரியை ஓட்டிச் சென்றான்.
முதலில் ராமுவே எடையைப் பரிசீலித்தமையால், லாரியில் ராமு இருந்திருக்கமாட்டான். அதனால் அவனது எடை சேர்க்கப்பட்டிருக்காது.
அடுத்தநாள் எடை மேடையில் லாரியுடன் ராமுவும் இருந்தமையினால், அவனது எடையும் சேர்ந்து அதிகரித்துக் காணப்பட்டிருக்கும்.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ராமு எடை நிறுத்து விட்டு தொலை துாரம் செல்ல வேண்டுமென்பதால்
டீசலை நிரப்பினார்.... பின்பு பொலீசார் மடக்கிய ராமுவின் லாறியில்
டீசல் எடையையும் காட்டியதால் எடை அதிகமாக இருந்திருக்கும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks