ஆரென் அண்ணா நீங்கள் சொல்வது இதுதானே
3. அமைச்சரும் அரசரும் பண்ட மாற்று முறையில் அடிமைப் பெண்களை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டனர்.
ஆரென் அண்ணா நீங்கள் சொல்வது இதுதானே
3. அமைச்சரும் அரசரும் பண்ட மாற்று முறையில் அடிமைப் பெண்களை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டனர்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஆமாம் தாமரை அதேமாதிரிதான். ஆனால் இதை பண்டமாற்றுமுறை என்று சொல்லமுடியாது காரணம் எப்போது வேண்டுமோ அப்போது உபயோகிக்கலாம்.
எப்போது வேண்டுமோ அப்போது உபயோகிக்கலாம்.![]()
![]()
![]()
நண்பர் ஆரென் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாருங்கள் அடுத்த புதிருக்குப் போவோம்
புதிர் எண்-571
வடபழனியின் மைய பகுதியில் 200 குடியிருப்புகளை கொண்ட ஒரு பல அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் அடிக்கடி திருட்டுப் போய்க்கொண்டிருந்தது.
அதனால் அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் ஒருங்கினைந்து ஆலோசித்தார்கள்.
எப்படியாவது திருடனைக் கண்டுபிடித்துவிடவேண்டும். அப்போதுதான் அனைவரும் நிம்மதியாக இருக்க இயலும் என்று முடிவு செய்தார்கள்.
சென்னையில் தனிப்பட்ட துப்பறியும் துறையில் மிகவும் பிரசித்தி பெற்றவர் நமது துப்பறியும் சிங்கம் வீர்சிங் இவர் ஒரு கைதேர்ந்த நிபுணர் அவர் பல வழக்குகளில் திறமையாக செயல் பட்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து காவல் துறைக்கும் சிறந்த நண்பராக இருந்தார்.
அதனால் அந்த குடியிருப்பு வாசிகள் நமது துப்பறியும் சிங்கம் வீர்சிங்கை வரவழைத்து விஷயத்தைக் கூறி, கட்டிடத்தில் காலியாக இருந்த ப்ளாட் ஒன்றில் அவரைத் தங்க வைத்து குற்றவாளியை கண்டு பிடிக்கும் பொறுப்பை நம்பிக்கையோடு ஒப்படைத்தனர் .
வீர்சிங்கும் அங்கேயே தங்கிக்கொண்டு, பகலிலும் இரவிலும் யாராவது சந்தேகப்படும் விதமாக வருகிறார்களா????? என்று நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்.
கிட்டத்தட்ட 200 அபார்ட்மெண்டுகளுக்குமேல் அந்த குடியிருப்பில் இருந்ததினால், சட்டென்று எதையும் அவரால் முடிவு செய்ய இயலாமல் சற்று தடுமாறிக்கொண்டிருந்தார்.
இருந்தாலும் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை
நான்கு நாட்கள் அப்படியே ஓடிவிட்டது.
ஒருநாள் இரவு பத்து மணிக்குமேல் அவரது அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
யாரோ அழைக்கிறார்கள் என்று நினைத்த வீர்சிங் உடனே வந்து கதவைத் திறந்தார்.
எதிரே அவருக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
வீர்சிங்கின் கட்டுமஸ்தான உருவத்தைக் கண்டதும், மன்னிக்கவும் எனது அறை என்று நினைத்து, உங்கள் கதவைத் தட்டிவிட்டேன் என்றான்.
உடனே துப்பறியும் சிங்கம் வீர்சிங் நின்றவரை மேலும் கீழும் கவனமாகப் பார்த்துவிட்டு,கொஞ்சமும் தாமதிக்காமல் சீறி பாய்ந்து அவனைத் தாவிப் பிடித்து, கட்டிப்போட்டு, மற்றவர்களுக்குக் குரல் கொடுத்து, போலீஸை அழைத்து அவன் தான் திருடன் என்று ஒப்படைத்தார்.
அவனும் தனது குற்றத்தை ஒத்துக்கொண்டான்.போலீஸ் அவனை கைது செய்து இழுத்துச் சென்றது.திறமையாக செயல்பட்ட துப்பறியும் சிங்கம் வீர்சிங்கை அனைவரும் பாராட்டினர்கள்
இப்ப நம்ம புதிருக்கு வருவோம் !!
திறமைசாலிகளே !!!துப்பறியும் சிங்கம் வீர்சிங் எந்த தடயத்தை வைத்து அவன்தான் திருடன் என்று முடிவு செய்தார்???
சொந்த அறைக்குள்ளேயே கதவைத் தட்டி விட்டு வருபவர் ஜெண்டில்மேன்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இந்த புதிரை நீங்கள் ஏற்கனவே பதித்து விட்டீர்கள் அண்ணா.
அல்லிராணியும் அதற்கு பதில் சொல்லி விட்டார்
http://www.tamilmantram.com/vb/showt...l=1#post205556
இந்த திரிக்கு என்ன தான் ஆச்சு? பி ஜி கே அண்ணா எங்கு தான் சென்றார்?
சிந்திக்கவைக்கும் புதிர்களும் ஆச்சரியப்பட வைக்கும் பதில்களும் கலந்த இந்த திரி மிகவும் சிறப்பாக உள்ளது.
இந்த திரி செயலிழந்து விட்டதே!!
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks