Page 1 of 391 1 2 3 4 5 11 51 101 ... LastLast
Results 1 to 12 of 4690

Thread: புதிரோ புதிர் எண்-571-05-06-2015

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,140
    Downloads
    9
    Uploads
    0

    புதிரோ புதிர் எண்-571-05-06-2015

    புதிரோ புதிர்

    1
    ஒருவன் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தான். அங்கே ஓரிடத்தில் ஒருவன் நின்றுகொண்டு, அவனை அழைத்து, " இதோ பார் நண்பா!.
    நான் " உனது மிகச் சரியான எடை என்ன" என்று "இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பேன். அப்படி எழுதிக் கொடுப்பது சரியானதாக இருந்தால், நீ எனக்கு நூறு ரூபாய் தரவேண்டும். தவறாக இருந்தால், நான் உனக்கு இருநூறு ரூபாய் கொடுக்கிறேன். சம்மதமா? என்றான்.
    அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவனை எடை போட்டுப் பார்க்க எந்தவித உபகரணமும் இல்லை. சவால் விட்டவன் என்னதான் உத்தேசமாகக் கூறினாலும் மிகச் சரியான எடையை அவனால் எப்படி எழுத இயலும். அதனால் தான் வெற்றி பெறுவது உறுதி என்று நினைத்துச் சம்மதித்தான். ஆனால் அவன் மிகச் சரியான விடையை எழுதிக் கொடுத்ததினால் 100 ருபாயை , பேச்சுப்படி கொடுத்துவிட்டுப் போனான்.
    கேள்வி:-
    எடை பார்க்க எந்த வித உபகரணமும் இல்லாமல் அவனால் எப்படி மிகச் சரியான விடையை எழுத முடிந்தது?

    2
    நீங்கள் ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளீர்கள்.
    அப்போது ஓட்டத்தில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்தவனை நீங்கள் முந்திச் சென்றுவிட்டீர்கள்.
    கேள்வி:-
    இப்போது நீங்கள் எத்தனையாவது இடத்தில் ஓடுகிறீர்கள்?

    3
    ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை.
    ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.
    ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.
    அது என்ன????
    Last edited by pgk53; 05-06-2015 at 12:19 PM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,270
    Downloads
    62
    Uploads
    3
    1. முதலாவது கடியா...?

    " உனது மிகச் சரியான எடை என்ன" என்று இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பேன் என்றுதானே சொன்னான். சொன்னவிதமே முதலில் சொன்ன வாக்கியத்தை எழுதிக்கொடுத்திருப்பான்.



    2. இது கொஞ்சம் குழப்பமான கேள்வி. முந்தியவன் எத்தனையாவது இடத்தில் இருக்கும் போது இக்கேள்வி கேட்கப்பட்டது?



    3. சவப்பெட்டி?
    Last edited by Iniyan; 28-04-2005 at 01:08 AM.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,235
    Downloads
    4
    Uploads
    0
    1) பாரதி சொன்னதுதான்
    2) இரண்டாவதாக
    3) சவப்பொட்டி
    அன்புடன்
    மணியா
    Last edited by Iniyan; 28-04-2005 at 01:08 AM.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    121,984
    Downloads
    4
    Uploads
    0
    சபாஷ் பாரதி& மணியா

    [கொஞ்சம் தெரிஞ்சா மாதிரி இருந்ததுக்கும் முந்திக்கிடீங்களேப்பா]
    Last edited by Iniyan; 28-04-2005 at 01:09 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,140
    Downloads
    9
    Uploads
    0
    ஒரு மாடிவீடு.முதல் மாடியில் உள்ள ஹாலில் மூன்று பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
    அதற்குறிய சுவிட்சுகள் கீழேயே மாடிப்படி ஏறும் இடத்தில் உள்ளன.
    நீங்கள் முதன்முறையாக அந்த வீட்டுக்குச் செல்கிறீர்கள்.
    உங்கள் திறமையை பரிசோதிப்பதற்காக உங்கள் நண்பர், ஒரு பென்சிலை உங்கள் கையில் கொடுத்து, மேலே மாடியில் உள்ள மூன்று பல்புகளில், எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கீழே அடையாளம் செய்யும்படி கூறுகிறார்.கூடவே ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார்.
    அதாவது, ஒரே ஒருமுறை மட்டுமே எந்த பல்ப் எரிகிறது என்பதைப் பார்க்க மாடிக்குப் போகலாம்.

    நீங்கள் எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்????
    Last edited by Iniyan; 28-04-2005 at 01:09 AM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,140
    Downloads
    9
    Uploads
    0
    ஒரு தகப்பனும் மகனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி, தந்தை அந்த இடத்திலேயே இறந்துபோகிறார். அந்தப் பையனுக்கு மிக பலமாக அடிபட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.அவனுக்கு உடனடியாக சிக்கலான ஆப்பரேஷன் செய்யவேண்டிய நிலை. மருத்துவரை அவசரமாக அழைத்து அந்தப் பையனுக்கு அப்பரேஷன் செய்யும்படி கூறுகிறார், தலைமை மருத்துவர்.ஆனால் மருத்துவரோ, அந்தப் பையனைப் பார்த்ததும், " ஐயோ மகனே.."...என்று அழுது தன்னால் தனது மகனுக்கு ஆப்பரேஷன் செய்ய இயலாது என்றும், வேறு மருத்துவரை அழைக்கும்படியும் வேண்டுகிறார்.
    கேள்வி:-
    தந்தைதான் இறந்துவிட்டாரே? இந்த மருத்துவர் ஏன் மகனே என்று அழைத்தார்?
    Last edited by Iniyan; 28-04-2005 at 01:09 AM.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,140
    Downloads
    9
    Uploads
    0
    1990ல் ஒருவருக்கு வயது 30.
    ஆனால் 1995ல் அவருக்கு வயது 25.
    இது எப்படிச் சாத்தியம்????
    Last edited by Iniyan; 28-04-2005 at 01:09 AM.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,235
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு தகப்பனும் மகனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி, தந்தை அந்த இடத்திலேயே இறந்துபோகிறார். அந்தப் பையனுக்கு மிக பலமாக அடிபட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.அவனுக்கு உடனடியாக சிக்கலான ஆப்பரேஷன் செய்யவேண்டிய நிலை. மருத்துவரை அவசரமாக அழைத்து அந்தப் பையனுக்கு அப்பரேஷன் செய்யும்படி கூறுகிறார், தலைமை மருத்துவர்.ஆனால் மருத்துவரோ, அந்தப் பையனைப் பார்த்ததும், " ஐயோ மகனே.."...என்று அழுது தன்னால் தனது மகனுக்கு ஆப்பரேஷன் செய்ய இயலாது என்றும், வேறு மருத்துவரை அழைக்கும்படியும் வேண்டுகிறார்.
    கேள்வி:-
    தந்தைதான் இறந்துவிட்டாரே? இந்த மருத்துவர் ஏன் மகனே என்று அழைத்தார்?
    அவர் அந்த பையனின் தாயார்.
    அன்புடன்
    மணியா
    Last edited by Iniyan; 28-04-2005 at 01:10 AM.

  9. #9
    இளம் புயல்
    Join Date
    04 Jan 2004
    Posts
    265
    Post Thanks / Like
    iCash Credits
    8,270
    Downloads
    0
    Uploads
    0

    Re: Ҿá Ҿ

    புதிரோ புதிர்

    2
    நீங்கள் ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளீர்கள்.
    அப்போது ஓட்டத்தில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்தவனை நீங்கள் முந்திச் சென்றுவிட்டீர்கள்.
    கேள்வி:-
    இப்போது நீங்கள் எத்தனையாவது இடத்தில் ஓடுகிறீர்கள்?
    இரண்டாவது இடத்தில்
    Last edited by Iniyan; 28-04-2005 at 01:10 AM.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,235
    Downloads
    4
    Uploads
    0
    1990ல் ஒருவருக்கு வயது 30.
    ஆனால் 1995ல் அவருக்கு வயது 25.
    இது எப்படிச் சாத்தியம்????
    அது கி.மு வாக இருந்தால் சாத்தியமே !!
    அன்புடன்
    மணியா
    Last edited by Iniyan; 28-04-2005 at 01:11 AM.

  11. #11
    இளம் புயல்
    Join Date
    04 Jan 2004
    Posts
    265
    Post Thanks / Like
    iCash Credits
    8,270
    Downloads
    0
    Uploads
    0
    1990ல் ஒருவருக்கு வயது 30.
    ஆனால் 1995ல் அவருக்கு வயது 25.
    இது எப்படிச் சாத்தியம்????
    கி.மு 1990 மற்றும் கி.மு. 1995- ஆ ?
    Last edited by விகடன்; 27-04-2008 at 05:27 AM.

  12. #12
    இளம் புயல்
    Join Date
    04 Jan 2004
    Posts
    265
    Post Thanks / Like
    iCash Credits
    8,270
    Downloads
    0
    Uploads
    0
    மணியன், எனது விடையை தந்துவிட்டு பார்த்தால், தாங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள்!
    Last edited by விகடன்; 27-04-2008 at 05:28 AM.

Page 1 of 391 1 2 3 4 5 11 51 101 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •