கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை (9 டிசம்பர் 2012).
காரைக்குடி கோட்டையூர் அருகே உள்ள வேளங்குடி கிராமத்தினர் அனைவரும் ஒன்று கூடி
நெல்லிமரத்திற்குக் கலியாணம் செய்து வைக்கின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும்
நடைபெறுகிறது. ஊர்மக்கள் அனைவரும் கலியாணத்தை ஒன்று கூடிக் கொண்டாடுகின்றனர்.
நெல்லிமரத்திற்கான கலியாணம் முடிந்தவுடன் “பிராமண போஜனம்“ நடைபெறும்.
பிராமணர் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு அறுசுவைக் கறியமது
செய்விக்கின்றனர். பிராமணர்கள் விருந்து உண்ட பின்னர் மற்ற நாட்டார்
நகரத்தார் எல்லோரும் பந்தியில் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுகின்றனர்.
இந்நிகழ்ச்சி ஒரு பெரிய திருவிழா போல், ஒரு பெரிய திருமணம் போல் நடைபெறுகிறது.
அதன்பின்னர், பிராமணர்களை அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிதாக வேட்டி
துண்டு (வஸ்திரம்) வழங்கிச் சிறப்புச் செய்கின்றனர். பிராமணப் பெண்களுக்கு
ரவிக்கைத் துணி வழங்கிச் சிறப்புச் செய்கின்றனர். ஊரில் பலருக்கு
‘நெல்லியான்‘ என்ற பெயர் உண்டு.
கார்த்திகை மாசம் பிருந்தாவன துவாதசி என துளசி கல்யாணம் தான்
நடக்கும் என்பார்கள்.
வாழைமரத்துக்கு கல்யாணம் உண்டு தெரியுமா?
ஜாதகத்தில் களத்திர தோஷமுள்ளவர்களை முதலில் வாழை மரத்துக்கு தாலி கட்டச்
சொல்லிவிட்டு , அதன் பிறகு மணப்பெண்ணுக்கு தாலி கட்டச் சொல்லும் வழக்கம் உண்டு.
--
--
Bookmarks