நிகழ்வை நேரில் கண்டது போல நிழற்படங்கள், மீண்டும் வாழ்த்துக்கள்
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. சிறப்பாக நடைந்தேறியமைக்கு வாழ்த்துக்கள். புத்தகம் எங்கே கிடைக்கும் கலைவேந்தரே..?!
நன்றி மனோ ஜி மற்றும் மதி ஜி..!
வருகின்ற ஜனவரி 4 முதல் இருவாரங்களுக்கு சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடக்க இருக்கிறது. அங்கே மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் தனி ஸ்டாலும் உண்டு. அங்கே எனது இந்த புத்தகமும் கிடைக்கும்.
மலர்க்கண்ணன் பதிப்பகத்தாரின் எண்ணுக்கு ( மேலே அழைப்பிதழில் உள்ளது. ) அழைத்தாலும் எங்கே கிடைக்கும் என்பதைச் சொல்லுவார்கள். முழுமையாய்த் தெரிந்துகொண்டபின் நானே இங்கே கிடைக்குமிடம் முகவரியைக் குறிக்கின்றேன்.
நன்றி நண்பர்களே..
இவ்விழாவுக்கு வருகை தந்து கலந்துகொண்ட நண்பர்கள் இராஜேஸ்வரன் மோகன் துரை மற்றும் கீழைநாடான் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் முழுமையான படங்கள் கிடைக்கவில்லை. எனது காமிராவில் எடுத்தவைகளில் முக்கியமானவற்றை இங்கே பதிந்துள்ளேன். முழுமையாய்க் கிடைத்த பின் முடிந்தால் இங்கேயும் எனது முகநூல் குறிப்பிலும் பதிகிறேன்.
நம் நண்பர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தேன்
நல்ல வேளையாக கீழைநாடனும், இராஜேஸ்வரனும் கலந்து கொண்டார்கள், மிக்க நன்றி நண்பர்களே
படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க ஐயா
அன்புடன் ஆதி
நண்பர் கலைவேந்தன் அவர்களின் 'கவிதை தொகுப்பு புத்தக' வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர்கள் ராஜேஸ்வரன், மோகன், துரை மற்றும் கீழைநாடான் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் சிறப்பே..!
நண்பருக்கு எனது பாராட்டுகள்..!
நேரில் வரவில்லையெனினும், புகைப்படங்கள் மூலம் பார்த்துக் கொண்டேன். சந்தோஷம் நண்பரே..!
Last edited by baseer; 24-12-2012 at 09:01 PM.
மிக மகிழ்சியான விஷயம் . தொடர்ந்து பல படைக்க வாழ்த்துகள்.
குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.
நிகழ்ச்சியை நேரில் பார்த்ததுபோல் இருந்தது
வாழ்த்தியமைக்கும் கருத்து பதிந்தமைக்கும் நண்பர்கள் ஆதி, பஷீர், ஜார்ஜ் மற்றும் வெங்கட் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இன்னும் இரு நாட்களில் இதே திரியில் இன்னுமொரு மகிழ்வான செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன். அதற்கான ஆயத்தங்களில் இருப்பதால் கொஞ்சம் காலதாமதம். அதன் காரணமாய் மன்ற வருகையும் தடைப்படுகிறது. அனைவரும் என்னை மன்னித்து அருள வேண்டும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks