மதி. உங்கள் பாராட்டிற்கும் பண முடிப்பிற்கும் மிக நன்றி. நீங்கள் சொல்வது சரியே.
மதி. உங்கள் பாராட்டிற்கும் பண முடிப்பிற்கும் மிக நன்றி. நீங்கள் சொல்வது சரியே.
இராஜேஸ்வரன் : அழகாக அலசியிருக்கிறீர்கள். மிக்க நன்றி
நிம்மதி வெளியில் இல்லை, அது நமக்குள் தான் இருக்கிறது என பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். அதை நிரூபிக்கும் விதமான கதை. பாராட்டுக்கள்.
கீழை நாடான்
மிக அழகாக சொன்னீர்கள் கீழை நாடான்.
கண்ணதாசன் சொன்னது, சுமை தாங்கி படத்தில் (நன்றி கூகிள்).
உங்களது கருத்தை இதை விட எளிமையாக யார் சொல்ல முடியும்?
"மயக்கமா கலக்கமா ? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
என்ன அர்த்தம் பொதிந்த , தத்துவ வரிகள். எவ்வளவு எளிமை?
Last edited by முரளி; 15-01-2013 at 10:04 AM. Reason: எழுத்து பிழை
பிறரது பிரச்சினகளை அலசித் தீர்வு கூறப்போக அது தன் பிரச்சினைக்கும் தீர்வாக அமைந்தது என்று காட்டியிருப்பது கதைக்கு வலுவூட்டுகிறது.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ரமணி.
கதையில் மட்டும் இல்லாமல் தொடர்ந்த பின்னூட்டங்களிலும் மிக நல்ல கருத்துகள் பொதிந்து இருக்கின்றன.
பெரும்பான்மையான விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தால் கூட ஒரு பிரச்சனையில், கஷ்டத்தில் இருக்கும் போது நல்ல கருத்துகளை நினைவூட்ட ஒரு கருவி தேவை.
அப்படி ஒரு கருவியாக மற்றவர்களுக்காக இருந்த போது தனாகவே தனது சொந்த பிரச்சனைகளுக்கும் தீர்வை கண்டு கொண்டு விட்டார் பெரியவர்.
கதைக்கும் மற்றும் பின்னூட்டங்கள் பதிவு செய்தவர்களுக்கும் நன்றி.
மும்பை நாதன்
நன்றி மும்பை நாதன் ! காலம் தாழ்த்திவிட்டேன் ! உங்கள் பின்னூட்டமே காணவில்லையே ஏன்?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks