நான் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவம் இது. நாங்கள் கோவையிலிருந்து பெங்களூருக்கு வார விடுமுறையில் சுற்றுலா சென்று இருந்தோம். நடந்து ஊர் சுற்றிக் கொண்டு இருந்த போது ஒரு சிக்னலில் நாங்கள் கடக்க நின்று இருந்த போது, என் நண்பர்களின் ஒருவன் "டேய்! இவனை பாருங்காடா! நம்ம எஞ்சினியரிங் எகானமிக்ஸ் வாத்தியாரு மாதிரியே இருக்கான்டா!" என்றான். அதைப் பார்த்து விட்டு நான் சும்மா தமாசுக்காக சத்தமாக "என்னடா மாதிரி.... இவன் அவனே தான்டா..!" என்று சொல்ல எல்லோரும் சொல்லி சிரித்து ஒரே "ரவுஸ்" விட்டு கொண்டு மீண்டும் கோவை திரும்பினோம்.
மறுநாள் காலையில் கல்லுரியில் 2-ம் பீரியட் "எஞ்சினியரிங் எகானமிக்ஸ்". லக்ச்சுரர் வந்தார். வகுப்பு முடிந்து போகும் போது வருகை பதிவேடு கொடுக்கும் போது, "96BP09 யெஸ் சார்" என்றேன். என்னைப் பார்த்து "என்ன! நேத்தைக்கு பேங்களூர்லே பாத்த மாதிரி இருக்கா?" என்றாரே பார்க்கலாம்.
உண்மையிலே இவர் தான் அது. பெங்களூரில் எங்கே தமிழ் புரியப் போகிறது என்று நினைத்ததும், இவர் எங்கே அங்கே வந்திருக்க்கப் போகிறார் என்று நினைத்ததும் - இரண்டுமே தவறு என்று புரிந்த போது வியர்த்துக் கொட்டியது.(அவரிடம் 25 மதிப்பெண் போடும் அதிகாரம் இருந்ததால், நான் பயந்தே போனேன். நல்ல வேளை மனுசன் அப்படியெல்லம் பழி வாங்கவில்லை)
Bookmarks