அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை


மன்ற உறவுகளுக்கு வணக்கம். சென்ற காலாண்டுகளில் நம் மனங்கவர் பதிவர்களாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவா.ஜி அண்ணா அவர்களுக்கும் கலைவேந்தன் அவர்களுக்கும் நம் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வதுடன் இந்த வருடத்தின் இறுதிக்காலாண்டுக்கான மனங்கவர் பதிவர் தெரிவை முன்மொழிவோம் வாருங்கள்…

தங்கள் பதிவுகளாலும், பின்னூட்டங்களாலும், மன்ற செயல்பாடுகளாலும் நம்மைக் கவர்ந்த பதிவர்கள் பலர் மன்றத்தில் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறிய முயற்சியே ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு பதிவரைத் தேர்ந்தெடுத்து, சுழற்சிமுறைப் பதக்கம் வழங்கிப் பெருமைப்படுத்துவது.

இந்தக் காலாண்டுக்கான பதிவர் யாரென்று அறிய முதலில் பரிந்துரைகளைத் துவங்குவோம். மன்ற உறவுகள் ஒவ்வொருவரும் உங்களுடைய மனங்கவர்ந்த பதிவரை இங்கு பரிந்துரை செய்யுங்கள். பரிந்துரை முற்றுப்பெற்றபின் வாக்கெடுப்பின் மூலம் உரிய பதிவர் தேர்ந்தெடுக்கப்படுவார். உறவுகள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை நல்கி இத்தேர்தலை சிறப்பிக்கவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பரிந்துரைக்கான விதிமுறைகள்;

1. ஒரு காலாண்டில் மனங்கவர் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அதன்மூலம் அந்த வருடத்தின் நட்சத்திரப் பதிவருக்கானப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுகிறார். எனவே அவரை அடுத்தடுத்தக் காலாண்டுகளில் பரிந்துரைப்பது அவசியமற்றதாகிறது. நட்சத்திரப் பதிவருக்கானப் பரிந்துரைக்கு இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் சிவா.ஜி அண்ணா அவர்களும் கலைவேந்தன் அவர்களும். இவர்களைத் தவிர்த்து, பிற உறுப்பினர்களை முன்மொழிவது நன்று.

2. ஒருவர் ஒரு பதிவரை மட்டுமே பரிந்துரை செய்யலாம். அவர்கள் நிர்வாகத்தைச் சாராதவராக இருத்தல் அவசியம். மேலும், பரிந்துரைகள், பதிவர்களின் மீதான விருப்பு,வெறுப்பு இவற்றின் அடிப்படையில் அல்லாது, அவர்கள் இட்டப் பதிவுகளின் தரத்தின் அடிப்படையில் அமைவது வரவேற்கத்தக்கது.

3. இன்றிலிருந்து வருகிற 28 ஆம் தேதிக்குள் உங்களுடைய மனங்கவர் பதிவரை முன்மொழிந்து தேர்தலுக்கான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நம் மன்றத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக்கட்டத்திலும் நம் பங்கை ஆற்றி மன்றத்தின் பெருமையை மேலும் உயர்த்துவோம். வாருங்கள், உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள்.