Internet Explorer-ல் கேட்க முடியவில்லை. Firefox-ல் கேட்க முடிகிறது.
சில சமயம் மட்டும் இரண்டு வானொலி பாடுவது போல் ஒவ்வொரு வரியும் இரண்டு முறை ஒலிபரப்பாகிறது. (எதிரொலி கேட்பது போல)
கீழை நாடான்
முதலில் ஆதிக்கு நன்றி,
என்னாலும் விரைவில் பழையதை மறக்க முடிவதில்லை அதனால் இன்னும் I E தான் பாவிக்கிறேன் கேட்க முடியவில்லை
ஆனால் கூகிளாண்டவனில் கேட்க முடிகிறது.
இந்த உளைப்பை வளங்கும் நண்பர்களுக்கு நன்றி.
அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.
மதன்
திரியில் உள்நுழையும்போது பாடல் நின்றுவிடுகிறது முடியுமானால் எங்கு உலாவினாலும் பின்னனியில் பண்பலை கேட்க ஏற்பாடு செய்யுங்கள்.
'ழ' வை தட்டச்சு செய்ய பழகவில்லை போலிருக்கிறது?!
பாமினியில் ஆங்கில எழுத்தில் 'ஓ' வைத்தட்டினால் 'ழ' பதியும்.
எனக்கும் 'கமா' வை தட்டத்தெரியவில்லை? என்ன செய்ய?
என்றென்றும் நட்புடன்!
பண்பலை ஒலிபரப்பு பற்றி பூமகளின் சிந்தனை யோசிக்கத்தக்கது. தமிழ்மன்றம் சொந்தப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் என்று சொல்கிறோம்.
இரண்டு வாரத்துக்கு ஒரு முறைதான் நம்மால் ஒரு நிகழ்ச்சி புதிதாக ஒரு நிகழ்ச்சி செய்ய முடிகிறது. அதுவும் ஒண்ணரை மணி நேரம். இதை ஒரே ஒரு முறை மறு ஒலிபரப்பு செய்கிறோம்.
14 x 24 = 336 மணி நேரம்.. இதில் 3 மணி நேரம் என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லை. ஆனால் நிகழ்ச்சியைக் நேரப் பிரச்சனையால் கேட்க முடியவில்லை என பல நண்பர்கள் சொல்கிறார்கள்.
தோராயமாக எடுத்துக் கொண்டால் இரண்டு மணி நேரம் வரையே ஒரு நாளிற்கு மன்றத்தில் செலவிட முடியும் என்பது என் கருத்து. அது எந்த இரண்டு மணி நேரம் என்பதை நாம் முடிவு செய்ய இயலாது.
அதனால் என் கருத்து இப்படியானது.
1. சிறப்பு நிகழ்ச்சி செய்யும் பொழுது 24 மணி நேரம் அதையே சுழல் மறு ஒலிபரப்பு செய்யலாம்.
2. அந்த நாளில் கேட்க முடியாதவர்களுக்கு என்ன செய்வது? ஒரு ஒலிப்பெட்டகம் இருந்தால் அதில் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிந்தால் வசதியாக இருக்கும்.
கார்த்திகை தீப சிறப்பு நிகழ்ச்சி : தாமரையின் "தீப ஞானம்"
அதே போல் தற்போது உள்ள கோப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பாட்டுக்கும் இடையில் மன்றப்படைப்புகளில் நுழைத்தால் மக்களும் நிறைய படைப்புகளை அனுப்புவார்கள் என்பது என் கருத்து.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஆஹா அற்புதமான யோசனைப்பா.... செயல்படுத்தினால் எல்லோருக்குமே நிகழ்ச்சியை கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும்பா....
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
தாமரை அவர்களது அரிய முயற்சியால், இன்று அவரது ' தீப ஞானம் ' தொகுப்பினைக் கேட்டு ரசிக்கிறேன்.
கார்த்திகை நட்சத்திரத்துடன் உலகமே சுற்றிவருவது போன்ற பிரமையும் பிரமிப்பும் ஏற்படுகிறது....
பாடல்களின் தொகுப்பும் ஏற்றமுடையதாக இருக்கிறது...உழைத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....தொடரட்டும் பணி...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks