அறத்துப்பால் – துறவற இயல்– செல்வம் நிலையாமை
நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள், செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.


நிலைபெற்றன நிலைபெற்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள் நிலைத்திராது அழியும் என்று உணர்ந்து உங்களால் செய்யக்கூடிய அறங்களைச் செய்ய நினைத்தால் விரைந்து செய்க! (ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டேயிருக்கின்றன. எமன் கோபித்து வந்துகொண்டே யிருக்கிறான்.

உங்களுக்குத் தெரியுமா?
ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ் மருத்துவ சுவடித் தொகுப்பே ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் முன்னெடுத்த உலகின் நினைவகம் திட்டத்திற்கு (Memory of the World Programme) இந்தியாவில் இருந்து முதலாவதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுதி.


nandri;அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா