Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: நானும் ஐஸ்கிரீமும் நீயும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    நானும் ஐஸ்கிரீமும் நீயும்

    வெளிச்சத்தை இழக்க ஆரம்பித்த*
    சாயுங்கால பொழுதொன்றில்
    உனக்காக காத்திருந்தேன்

    இருட்செறிந்த ஒரு வனாந்தரத்தில்
    திசை தவறியவர்களை
    சரியான பாதையில் சேர்க்கும்
    தேவதையின் கருணையோடு
    வந்தாய்

    குழும துவங்கியிருந்த*
    இருளின் அடர்த்தியில்
    விழிகளை அகல விரித்து
    உனை பார்க்க முயன்ற*
    மெழுகுவர்த்திகள் ஒளி மங்கின*

    உனது வெளிச்சம்
    அவற்றின் கண்களை
    கூசியிருக்க வேண்டும்

    என் எதிரே
    ஒரு இளவரசியின் தோரணையோடு
    ரம்மியமாய் அமர்ந்தாய்

    மங்கிய வெளிச்சத்தில்
    உன் பூ வதனத்தை
    நெருக்கமாய் அமர்ந்து ரசித்தலின்
    சுகம் அலாதியானதுதான்

    இனி இந்த நிமிடங்கள்
    என்னுடையவை

    இனி உன் ஒவ்வொரு
    பாவனையும் என்னுடையவை

    இனி உன் ஒவ்வொரு
    புன்னகையும் எனக்கானவை

    பாதார்த்த பட்டியலை எடுத்து
    ஆளுக்கொரு ஐஸ்கிரீம்
    ஆடர் செய்துவிட்டு
    மீண்டும் என்னை பார்த்தாய்
    அடி!
    எப்படி கற்றாய்
    அப்படியொரு பார்வை பார்க்க ?
    நுண்மீதமுமின்றி தொலைந்துவிட்டேன்

    நான் உருகி கொண்டிருந்த போதே
    உன் கன்னங்கள் போன்ற*
    கண்ணாடி கோப்பைகளில்
    உன் மேனியின் மென்மை கொண்ட*
    ஐஸ்கிரீம் வந்தது

    நீ உண்ண ஆரம்பித்தாய்

    உன் பார்வையின் லாவகத்தை
    கைகளில் உள்ள ஸ்பூனுக்கும்
    கற்று கொடுத்துவிட்டாய் போலும்
    எப்படி எனக்கு வலிக்காமல்
    என் மனதை மெல்ல தின்கிறாயோ
    அப்படி ஐஸ்கிரீமையும்
    நளினமாய் தீர்த்துக் கொண்டிருக்கிறாய்
    அன்புடன் ஆதி



  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    ஆதி ஐஸ்கிரீமாய் உருகியிருக்கும் கவிதை ரசிக்க வைத்தது !

    நுண்மீதமுமின்றி தொலைந்துவிட்டேன்

    வெகுவாய் கவர்ந்த வரிகள் !

    சரி, எனக்கொரு டவுட் ! நீங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டது புனேயிலா இல்லை லண்டனிலா ?
    LIVE WHEN YOU ARE ALIVE !

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பனிக்குழைவை விடவும் குழைவான கவி வரிகள். ஒரு தேவதையின் கருணையை விவரித்த வரிகள் அலாதி அழகு. அந்த தேவதையின் நளினத்திலும் நாசுக்கிலும் நுண்மீதமுமின்றி நீங்கள் தொலைந்துபோன கணங்களை ரேமாவைப்போலவே நானும் ரசித்தேன். புத்தனிடம் பித்தாயிருந்தவனை தன்பக்கம் திருப்பிய தேவதைக்கும் தேவதைக்கவிதைக்கும் வாழ்த்துக்கள்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல பனிப்பொழுதில் தொண்டையில் ஜில்லென்று ஐஸ்க்ரீம் இறங்கிய மாதிரி இருக்கு கவித... சூப்பர்.

  5. #5
    புதியவர் பண்பட்டவர் maniajith007's Avatar
    Join Date
    16 Dec 2009
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    25,705
    Downloads
    0
    Uploads
    0
    http://www.tamilmantram.com/vb/showt...AE%AE%E0%AF%8D


    எனது கவிதையும் உங்களின் இந்த கவிதையும் கிட்டத்தட்ட தொடரை போல அமைந்துள்ளது என தோன்றுகிறது

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    என்னவள் என்ன அவ்வளவு
    குளிர்ச்சியா என்ன..?

    அவளின் நுனிநாக்கு பட்டதும்
    ஐஸ்க்ரீமுக்கும் குளிர்கிறதே!!”

    காதல்னா சும்மாவா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    2009???

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஆதி..


    ஊருகும் முன் சாப்பிடது நல்லதே... ஐஸ்கிரீமோடு இதயத்தையும்...


    ஆமா.. இது எப்போ..??
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    கிண்ணத்தில் ஐஸ்க்ரீமை ஆதியின் அவளும்
    கவிதையில் நளினத்தை ஆதியும்
    எதுவுமே வைக்கவில்லை மீதி !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  10. #10
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    ஆதி அவர் ஆளுக்கு
    ஜஸ் (கிரீம்) வைத்தாரலும் வைத்தார்
    அவர் மட்டுமா உருகினார்
    நம்மையும் உருக்கிவிட்டார்!
    என்றென்றும் நட்புடன்!

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    ஆதி கவிதை எழுதினாலும் எழுதினார், ஐஸ்க்ரீம் சாப்பிடும்போதெல்லாம் அது நினைவுக்கு வருகிறது.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  12. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by மும்பை நாதன் View Post
    ஆதி கவிதை எழுதினாலும் எழுதினார், ஐஸ்க்ரீம் சாப்பிடும்போதெல்லாம் அது நினைவுக்கு வருகிறது.
    அதற்குக் காரணம் ஐஸ்கிரீம் அல்ல...சூடும் குளிரும் இதமுமாய் உருகிவழியும் வார்த்தைகள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •