எதுவாயிருந்தாலும்
நீண்ட வரிசையில்
நீண்ட நேரம்...
இப்படித்தான்
கழிந்தது என் ஆயூளில்
பத்து வருடம்..
பேருந்திற்காக,
மற்றும்
பேருந்தில் அவள்
வருவாள்
என்பதற்காகவும்
கழிந்தது என் ஆயூளில்
மற்றுமொரு பத்து வருடம்..
என் முகத்தில்
கரி பூசப்படும்
என்றே தெரிந்து
ஐந்து வருடங்களுக்கொருமுறை
என
கழிந்தது
சில வருடம்...
மரணமடைந்த பின்னும்
வெட்டியானுக்காக
காத்திருந்து
எரிந்ததில்
கழிந்தது
இரண்டு நாள்...
இது புத்தன் தேசமோ
காந்தி தேசமோ
அல்ல..
காத்திருத்தல் தேசம்...
Bookmarks