ஏகாந்தம்
நீளும் மின்வெட்டால்
மின்னொளியை மறந்து
மெழுகுவர்த்தியின் ஒளியில்
ஏகாந்திருந்த வேளையில்...
திடுக்கென எரிந்து
எரிச்சலூட்டியது மின்விளக்கு
ஏகாந்தம்
நீளும் மின்வெட்டால்
மின்னொளியை மறந்து
மெழுகுவர்த்தியின் ஒளியில்
ஏகாந்திருந்த வேளையில்...
திடுக்கென எரிந்து
எரிச்சலூட்டியது மின்விளக்கு
Last edited by rema; 24-03-2013 at 04:00 AM.
LIVE WHEN YOU ARE ALIVE !
இக்காலத்திலிருந்து கற்காலத்திற்கு போய்விட்டீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது.
கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய கொடுங்கள்.
ஏகாந்தம் கவிதையில் எதார்த்தம் அருமை..
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
திடுக்கென எரிந்து
எரிச்சலூட்டிய மின்விளக்கு
கண்களைப் பழுதாக்கவில்லையே...!!!
கவிதை நன்றாக இருக்கின்றது...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
மின்சாரத்தால் நாம் பெற்றவை அதிகம், இழந்தவையும் அதிகம். முக்கியமாய் குடும்ப நேரங்களை இழந்துவிட்டோம். அத்தகு அற்புதத் தருணங்களை மீண்டும் உருவாக்கித்தரும் முன்னிரவு மின்வெட்டுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்திருக்கும்வேளையில் திடுமென மின்சாரம் வந்துவிட்டால் எரிச்சல்தானே வரும்! தொலைக்காட்சியையும், கணினியையும் நாடிக் கலைந்துவிடும் குடும்பம்! மறுபடி ஆளுக்கொரு தீவாய் வாழ்க்கை!
மின்வெட்டு என்னும் எதிர்மறையில் ஏகாந்த மகிழ்வெனும் நேர்மறை சிந்தனை. அழகிய அனுபவத்துக்கும் அசத்தல் கவிதைக்கும் பாராட்டுகள் ரேமா.
பல செய்திகளை மக்கள் துன்பங்களை நகைச்சுவை சிலேடையில் கவிதந்த கவிக்கு வாழ்த்துக்கள்
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
எரிச்சலூட்டும் மின்சாரம்.. ரேமாவின் குறும்பு கொஞ்சம் அதிகம் தான்.. நல்லா இருக்கு ரேமா..
நகைக்க என்ன இருக்கு?
நல்லா தானே இருக்கு! :-)
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks