Originally Posted by
shibly591
திடுக்கிட்டு விழித்த பின்னிரவில்
---
----
நானும் நீங்களும்
தொலைத்துவிட்ட
வசந்த காலங்கள் பற்றி..
.............
.............
இன்னும்
உங்களுக்கும் எனக்கும்
புரியவே புரியாத சில
பின்நவீன கருதுகோள்கள் பற்றி..
நீண்ட இரவின் நிழலில் அமர்ந்து கொண்டு
கவிதை போல ஏதேதோ எழுதுவது
தற்கொலைக்கு ஒப்பானது
உண்மையின் சுயம் முடிச்சவிழும்
உண்மையான நேரம் அது..
எழுதி முடிக்கும் தருணம்
கிட்டத்தட்ட
இறந்து போய்விட்டேன்..
இனி பின்னிரவில் விழித்தெழுந்தால்
எதுவுமே எழுதப்போவதில்லை
என் கவிதையை தூக்கி
இரவின் இடுக்குகளில் எறிகிறேன்..
பல்லைக்காட்டி சிரிக்கிறது
ஒரு பேயை போலவே...
-நிந்தவூர் ஷிப்லி-
Bookmarks