Results 1 to 6 of 6

Thread: பேயாகிப்போன என் கவிதை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    பேயாகிப்போன என் கவிதை

    திடுக்கிட்டு விழித்த பின்னிரவில்
    காகிதமொன்றை எடுத்து
    கவிதை எழுதுகிறேன்..
    இல்லை இல்லை
    கவிதை போல
    ஏதேதோ எழுதுகிறேன்..

    கனவுகள் நிறைந்த என்
    தூக்கமொன்று
    காணாமல் போனது பற்றி..

    நேற்றைய தோல்வியின்
    நெருடல்கள் பற்றி..

    நானும் நீங்களும்
    தொலைத்துவிட்ட
    வசந்த காலங்கள் பற்றி..

    கனவாகிவிட்ட
    அவளின் அருகாமை பற்றி..


    இன்னும்
    உங்களுக்கும் எனக்கும்
    புரியவே புரியாத சில
    பின்நவீன கருதுகோள்கள் பற்றி..

    நீண்ட இரவின் நிழலில் அமர்ந்து கொண்டு
    கவிதை போல ஏதேதோ எழுதுவது
    தற்கொலைக்கு ஒப்பானது

    உண்மையின் சுயம் முடிச்சவிழும்
    உண்மையான நேரம் அது..

    எழுதி முடிக்கும் தருணம்
    கிட்டத்தட்ட
    இறந்து போய்விட்டேன்..

    இனி பின்னிரவில் விழித்தெழுந்தால்
    எதுவுமே எழுதப்போவதில்லை

    என் கவிதையை தூக்கி
    இரவின் இடுக்குகளில் எறிகிறேன்..
    பல்லைக்காட்டி சிரிக்கிறது
    ஒரு பேயை போலவே...

    -நிந்தவூர் ஷிப்லி-
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் பதிவில்
    ஒரு தர்க்கிக்கும் உண்மை,

    -உணர்வுப் பேயை எழுப்பி
    வரிகளில் உசுப்பேத்தி
    உருவாக்கப்பட்ட படைப்பு
    பேயாய்ப் பயமுறுத்துதல் ,

    ஒரு நல்ல
    உளவியல் மேதாவித்தனம்..
    மேலும்,
    இது நன்றாக செதுக்கப்பட்டு,
    முடிவில் வெடித்துக் கிழம்பும்
    உண்மையின் சுயம்-
    பேயின் பல்லின்
    இடுக்கில் ஆணியடித்துச் சொருகப் பட்டுள்ளது. ..

    அது சிரிக்கின்றது!!!!!!!

    என் இதயத்தில் ஆயிரம் முறை கைதட்டிக் கொள்கின்றேன்:

    'சுயம் முடிச்சவிழும்'

    இந்த வரியின்/சொற்றொடர் மூலம் உங்கள் பதிவு உச்சத்தைத் தொட்டுவிடுகிறது......பாராட்டுக்கள்!

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0
    திடுக்கிட்டு விழித்த பின்னிரவில்
    காகிதமொன்றை எடுத்து
    கவிதை எழுதுகிறேன்..
    இல்லை இல்லை
    கவிதை போல
    ஏதேதோ எழுதுகிறேன்..

    இதை போன்று நிறையமுறை எனக்கு கூடஇரவில் நடந்து உள்ளது
    யாதர்த்தமான வரிகள் நண்பரே

  5. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நீண்ட இரவின் நிழலில் அமர்ந்து கொண்டு
    கவிதை போல ஏதேதோ எழுதுவது
    தற்கொலைக்கு ஒப்பானது


    ஒட்டுமொத்த கவிதையின் கனத்தையும் தன்னுள் தக்கவைத்துக்கொண்டிருக்கும் வரிகள்.

    பின்னிரவுக் கவிதையின் வடிவம் முழுமையுறாமல் சிதைந்துபோகும் உணர்வை அழுந்தச் சொன்ன வரிகள்.

    பேயைப் போலச் சிரிக்கும் கவிதையும் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் ஷிப்லி.

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    நினைப்பதை எழுதத் தெரியாததால்தான், கவிதையைப் பாராட்டவும் வார்த்தைகள் வரவில்லை.....நன்று

  7. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by shibly591 View Post
    திடுக்கிட்டு விழித்த பின்னிரவில்
    ---
    ----


    நானும் நீங்களும்
    தொலைத்துவிட்ட
    வசந்த காலங்கள் பற்றி..
    .............
    .............

    இன்னும்
    உங்களுக்கும் எனக்கும்
    புரியவே புரியாத சில
    பின்நவீன கருதுகோள்கள் பற்றி..

    நீண்ட இரவின் நிழலில் அமர்ந்து கொண்டு
    கவிதை போல ஏதேதோ எழுதுவது
    தற்கொலைக்கு ஒப்பானது

    உண்மையின் சுயம் முடிச்சவிழும்
    உண்மையான நேரம் அது..

    எழுதி முடிக்கும் தருணம்
    கிட்டத்தட்ட
    இறந்து போய்விட்டேன்..

    இனி பின்னிரவில் விழித்தெழுந்தால்
    எதுவுமே எழுதப்போவதில்லை

    என் கவிதையை தூக்கி
    இரவின் இடுக்குகளில் எறிகிறேன்..
    பல்லைக்காட்டி சிரிக்கிறது
    ஒரு பேயை போலவே...

    -நிந்தவூர் ஷிப்லி-
    பின்னிரவில்
    திடுக்கிட்டு எழுந்தும்
    எங்கள் நினைவு வரக்கண்டு
    சந்தோஷப்படுவதா??
    கவலைப்படுவதா???

    புரியாமல் விழிக்கிறேன்.
    திடுக்கிட்டு எழுந்து
    எழுதிய கவிதை
    இதுவோ இல்லை
    வேறும் எதுவோ..

    இதுவென்றிருந்தால்
    எறிந்த இடம்
    இரவின் இடுக்கென்றால்..
    இத்தனை கைவிளக்குகள்
    இங்கெப்படி?

    திடீரென கண்ட காட்சியில்
    இத்தனைக் கேள்விகள்
    என்னில்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •