Results 1 to 6 of 6

Thread: ஆயிரம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0

    ஆயிரம்

    ஓரிரு நிமிட தேநீர் சந்திப்பு
    சொல்லி தந்த துயரங்கள் நூறல்ல -ஆயிரம்

    நான் பார்க்காத பக்கங்கள்
    சுமக்காத சுமைகள் சுமந்து கொண்டு -ஆயிரம் பேர்

    அவன் கூலியோ அவனைகூட
    அன்று பசியாற்றாது ஆனாலும் -ஆயிரம் கனவு

    விடிந்தது முதல் தேடுகிறான்
    விடியுமா என விரைகிறான் -ஆயிரம் நோட்டுக்காய்

    தீபங்கள் சுடர் பரவலாம்
    தீ மட்டுமே பரவும் இவன் குடிலில் -அரை வயிற்றில்

    நாளை அவன் கட்டை ஏறும்
    நான் தொடர்வேன் என அவன் மகன் துயர் தொடர்வானோ

  2. Likes jayanth liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    குலக்கல்வி திட்டம் என்பது போல் இது
    குலத்துயர் திட்டம்.
    ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாத் தலைமுறைக்கும் ஒரே போல் இருப்பதில்லை
    வாழ்க்கைச் சுழன்று கொண்டே இருக்கும். தலைமுறைகளில் அவர்கள் நிலை மாறும்.

    தொடர்ந்து எழுதுங்கள் குளக்கோட்டன்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  4. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பண்டிகையின் நெருக்கத்தில் கழுத்தில் சுருக்குவிழும் குடிசைவாசிகளின் துயரம் பறைசாற்றும் வரிகள். செல்வா குறிப்பிடுவது போல் மாறலாம் இந்நிலைமை அடுத்த தலைமுறைகளில். பாராட்டுகள் குளக்கோட்டன். தொடர்ந்து எழுதுங்கள்.

  5. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    'குலத்துயர் திட்டம்'
    மகன் மாற்றுவான்
    மடமையும்
    மாறாப் பசிப்பிணியும்
    தொற்றிக்கொல்லுமோ -தொடராது இனி...
    பற்றிக் கொள்ளும் தன்மான தீ......
    வற்றாது எம் செல்வம்
    கட்டை ஏறும் மூடத்தனம்
    கட்டை ஏறிப்போய் கனகாலமாச்சு.
    எழுச்சி மிக்க வாலிபா எழு...
    முதுகெலும்பு நீ
    முத்தமிழின் சொத்து நீ
    எந்நாளும் கொண்டாடு
    பஞ்சமும் பட்டினியும் ஓடட்டும்
    உன்னால் புது யுகம் பிறக்கட்டும்...

    நன்றி சத்தான பின்னூட்டத்திற்க்கும்...... குளக்கோட்டான் எழுச்சி மிக்க கவிதையாய் எழுங்கள், உங்கள் எண்ணப் பதிவின் வரிகள் மிக நன்று. நன்றி.

  6. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Aug 2012
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    10,279
    Downloads
    4
    Uploads
    0
    மாற்றம் அவசியம் ...

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    கனவுகளும் தேடல்களும் மட்டுமே தீராத துக்கங்களையும் தாளாத சுமைகளையும் தளர்த்தி ஆயிரமாயிரம் அனுபவங்களை அள்ளிதந்து மானிடவாழ்வை மகிழ்வுடன் முன்னெடுத்து செல்கின்றன... தோயாது தொடரும் தேடல்களில் தொலைந்து போகட்டும் எல்லோரது துயரங்களும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •