Results 1 to 12 of 12

Thread: களவு!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    களவு!

    இரண்டு நாள் விடுமுறையில், சரவணன் மீனாட்சி தம்பதியினர் திருப்பதிக்கு சென்றனர், ஏழுமலையானைக் கண்குளிர, மனம்குளிர தரிசனம் செய்தனர். திருப்பதியிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தம்பதியினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! அவர்களுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுத் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

    " அய்யய்யோ! எல்லாம் போச்சே! என்று அலறி அடித்துக்கொண்டு மீனாட்சி வீட்டிற்குள்ளே ஓடினாள். அங்கே பொருட்கள் எல்லாம் வைத்த இடத்தில், வைத்தபடி இருந்தன. பீரோவைத் திறந்து பார்த்தாள். நகைகள், பணம் எல்லாம் பத்திரமாக இருந்தது கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். கணவனிடத்தில் ஓடிவந்து, " அந்த ஏழுமலையான் அருளாலே எதுவுமே திருடு போகலீங்க! " என்று சந்தோஷமாகச் சொன்னாள் மீனாட்சி.

    ஆனால் சரவணன் முகத்தில் கவலை தெரிந்தது. அவன் தழுதழுத்த குரலில்," மீனாட்சி! நகைநட்டு, காசுபணம், பண்ட பாத்திரம் எது போயிருந்தாலும் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன்; ஏன்னா அத நாம மறுபடியும் சம்பாதிச்சிடலாம், ஆனா என்னுடைய தாத்தா காலத்திலிருந்து நம்ம வீட்டுப் பொக்கிஷமா இருந்த பூட்டு திருடு போயிடிச்சே! அந்த விலை மதிப்பில்லாத பூட்டை, என் தாத்தா லண்டனுக்குப் போயிருந்தபோது வாங்கி வந்ததா , என்னோட அப்பா அடிக்கடி சொல்லுவாரு! பத்திரமா வச்சிக்கோடா! ன்னு சொல்லி அப்பா என்கிட்டே கொடுத்தாரு! இப்ப நான் என்ன பண்ணுவேன்? லட்ச ரூபா கொடுத்தாலும் அந்த மாதிரி பூட்டுக் கிடைக்குமா? " என்று சொல்லி சரவணன் கதறி அழுதான்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    செண்டிமென்டான பூட்டு,
    இதிலெருந்து என்ன தெரியுதுண்ணா
    பணம் காசவிட செண்டிமென்டான பொருளுக்கு
    மதிப்பு அதிகம்
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  3. Likes sarcharan liked this post
  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by Mano.G. View Post
    செண்டிமென்டான பூட்டு,
    இதிலெருந்து என்ன தெரியுதுண்ணா
    பணம் காசவிட செண்டிமென்டான பொருளுக்கு
    மதிப்பு அதிகம்
    உண்மைதான் மனோ அவர்களே! தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #4
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    சுருக்கமான அழகான கதை. கவிதையை போலவே கதையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி..

    ஒரு சிறிய குறை. நகை பணம் போனாலும் பரவாயில்லை எனும் சரவணன், ஓர் கபட வெளி வேஷக்காரனோ?. பூட்டுக்கு ஒரு லட்சம் என ஒரு விலை சொல்கிறான். பூட்டும் ஒரு பொக்கிஷம் என கதறி அழுகிறானே? இது ஏன்? அவன் ஒரு சென்டிமென்டல் மாதிரி தெரியவில்லை, மெண்டல் மாதிரி தெரிகிறது.
    Last edited by முரளி; 08-11-2012 at 04:48 AM.

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by murali12 View Post
    சுருக்கமான அழகான கதை. கவிதையை போலவே கதையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி..

    ஒரு சிறிய குறை. நகை பணம் போனாலும் பரவாயில்லை எனும் சரவணன், ஓர் கபட வெளி வேஷக்காரனோ?. பூட்டுக்கு ஒரு லட்சம் என ஒரு விலை சொல்கிறான். பூட்டும் ஒரு பொக்கிஷம் என கதறி அழுகிறானே? இது ஏன்? அவன் ஒரு சென்டிமென்டல் மாதிரி தெரியவில்லை, மெண்டல் மாதிரி தெரிகிறது.
    சரவணன் மெண்டல் இல்லை; களவுபோன பூட்டு, அவனுடைய அப்பாவின் கைபட்ட பூட்டு; அவன் தாத்தாவின் கைபட்ட பூட்டு. எனவேதான் அது களவுபோனது அறிந்து கதறி அழுகிறான். நாம் பயன்படுத்தும் பேனாவுக்கும், காந்தி பயன்படுத்திய பேனாவுக்கும் வேறுபாடு உண்டல்லவா? அதுபோலத்தான் இதுவும்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. Likes sarcharan liked this post
  8. #6
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    உண்மையே! எனது தவறுக்கு வருந்துகிறேன். உங்களது பதிலுக்கு நன்றி.

  9. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஹ்ம்ம்! சரவணன் என்னும் பேருக்கு பதிலாக மயூரேசன் என்று வைத்திருக்கலாம்.

  10. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    சில விஷயங்கள் என்றும் பொக்கிஷங்கள் தான். விலைமதிக்க முடியாதவை. சரி. உண்மையிலேயே திருடன் எதுக்கு பூட்ட உடைச்சிருப்பாங்கற கேள்வியும் எழாமல் இல்லை.

  11. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    பூட்டுக்கு அப்படி மதிப்பு கொடுக்கிறவர் பூட்டை தனியா லாக்கர்ல லாக் பண்ணி வைக்காம, ஏன் அசால்ட்டா அதெ வெளிய தொங்க விட்டுட்டு போனார்னு கேள்வி வருதே..

    எதை நாம மதிக்கறமோ அதை பாதுகாக்கணும் இல்லையா? ( நம்ம பண்பாடு மாதிரி )
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    தாமரை அவர்களின் வினா அறிவு பூர்வமானது .

  13. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    என் பாட்டன் காலத்துப் பூட்டு, லட்சரூபாய் கொடுத்தாலும் இன்று இதுபோல் கிடைக்காது என்று சரவணன் பெருமை பேசுவதை எந்த திருடனாவது கேட்டிருக்கவேண்டும். அதன்காரணமாகவே பூட்டு திருடப்பட்டிருக்கவேண்டும். ரசிக்கவைத்ததொரு அருமையானக் கதைக்குப் பாராட்டுகள் ஐயா.

  14. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    இந்தச் சம்பவத்தைப் பின்னணியை வைத்து-இந்த சம்பவம் முடிவில் தொடங்கும் ஒரு நகைச்சுவை நாடகம் தயார் பண்ணிவிட்டேன், சிறு கதை வடிவம் கொடுத்துள்ளேன்-அது லண்டனில் மேடையேறும், அதற்காக வாழ்த்துக்களையும் நன்றியையும் திரு ஜெகதீசன் அவர்களுக்குத் தெரிவிக்கின்றேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •