நல்ல கருத்துள்ள கதை ரிமா. எல்லோரும் கேட்கும், விடை தெரியாத கேள்வி.
இறந்தபின் இந்த ஆத்மா என்ன ஆகும் ? இந்த கதை கருத்தை, பகவத் கீதை இப்படி சொல்கிறது.
1. ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||
“வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”
2. ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.2-13
3.ஆத்மா, எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.||2-20|
4. அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை;
நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.
"பார்த² நைவேஹ நாமுத்ர விநாஸ²ஸ்தஸ்ய வித்³யதே|
ந ஹி கல்யாணக்ருத்கஸ்²சித்³து³ர்க³திம் தாத க³ச்ச²தி ||6-40||
மிக அழகான கருத்து. பதிவிற்கு நன்றி ரேமா ...
நன்றி கூகிள் :
http://www.sangatham.com/bhagavad_gita
Bookmarks