Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: நான்காம் கண் - உறவுகளின் விமர்சனங்களுக்காக...

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0

    நான்காம் கண் - உறவுகளின் விமர்சனங்களுக்காக...

    நம் மன்றம் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை...
    பரிசைவிட உயர்வான உறவுகளின் விமர்சனங்களுக்காக...


    நான்காம் கண்


    எரியூட்டப்பட தயாராய்
    கிடத்தப்பட்டிருக்கும்
    என்னைச்சுற்றிவர-
    தண்ணீர் பானையை
    என் தோளில் சுமத்தி
    கத்தியால் கொத்தி
    முதல் கண்ணை திறந்து
    சுற்றிவரச் சொல்கிறான்
    ஈமச்சடங்கு செய்பவன்

    என் பிடியிலிருக்கும்
    வாழ்க்கைப் பானையிலிருந்து
    பீச்சி அடிக்கிறது
    மண்ணாசை.

    இரண்டாம் சுற்றின் தொடக்கத்தில்
    இன்னொரு கண்ணை திறக்கிறான்.
    கொட்டி தீர்கிறது
    பொன்னாசை

    கடைசி சுற்றிலும்
    ஒரு கண் திறந்துவிடுகிறான்
    வடிந்து அடங்குகிறது
    பெண்ணாசை

    பின்-
    பானையை போட்டுடைக்கச்சொல்கிறான்
    ஓங்கி தரையில் அடிக்கிறேன்
    வெறும் காற்றடைத்திருந்த பானை
    சிதறி தெறிக்கிறது

    அதில் ஒரு சில்
    என் மேல் பட்டதும்
    கலைகிறது கனவு

    மெல்ல திறக்கிறது
    என் நான்காம் கண்

    புதுவைப்பிரபா

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    வித்தியாசமான கனவு....சிந்தனை...நான்காம் கண் திறந்ததாலோ ?
    பாராட்டுக்கள் !

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    முதல்பரிசு பெறத் தகுதியான கவிதைதான்! வாழ்த்துக்கள் புதுவை பிரபா.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    புதியவர்
    Join Date
    06 Jun 2012
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    10,170
    Downloads
    0
    Uploads
    0
    அற்புதமான சிந்தனை... வாக்களிக்க படிக்கும் போதே மி்கவும் பிடித்துபோயிற்று...
    இதற்கு பரிசு கிடைக்கவில்லையென்றாலும் இது சிறந்த கவிதை தான்...
    பரிசு கிடைத்ததால் இது மிகச்சிறந்த கவிதையாயிற்று......வாழ்த்துக்கள் அண்ணா...

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    பாராட்டுக்களை பரிசாய் அளித்திருக்கும் மன்றத்தின் உறவுகள் ஜானகி, ஜெகதீசன் நண்பர் முத்துக்குமரன் ஆகியோருக்கு நன்றி! நன்றி!! நன்றி !!!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    நாலாம் கண் தத்துவக் கண். இந்த வரிகளின் கட்டுக்குள், கட்டைகள் அடுக்குகளில் கடைசிக் காட்சியின் கனவு விரிகிறது. நன்றி.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    முடிவுற்ற வாழ்க்கையின் இறுதியில் விழித்தெழும் நான்காவது கண் ...வாழ்த்துக்கள் புதுவை பிரபா அவர்களே...
    Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 06-11-2012 at 02:32 PM.
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கவிதையின் துவக்க வரிகளே ஒருவித விநோதம் காட்டி நிற்கின்றன. கிடத்தப்பட்டிருப்பவனும் நானே... தண்ணீர்ப்பானையைத் தோள்களில் சுமப்பவனும் நானே... நான் என்னும் என்னை எரியூட்ட நானே சடங்குகள் செய்கிறேன்.. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போக வெற்றுப்பானையைப் போட்டுடைத்தபின் திறக்கிறது நான்காம் கண். மிகவும் அழகான சிந்தனை... வியப்போடு பாராட்டுகிறேன். முதல் பரிசு பெற்றமைக்கு சிறப்புப் பாராட்டுகள் புதுவை பிரபா.

  9. #9
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    முடிவற்ற வாழ்க்கையின் இறுதியில் விழித்தெழும் நான்காவது கண் ...வாழ்த்துக்கள் ஹெமாபாலாஜி அவர்களே...
    --நாஞ்சில் த.க.ஜெய்--
    அன்பு -நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே...
    எதற்கு என்னை குழப்புறீங்க?
    ஆமாம் சார்... இந்த கவிதைக்கு" ஹெமாபாலாஜி அவர்களே..."ன்னு எதுக்கு வாழ்த்தறீங்க???

  10. #10
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    கவிதையின் துவக்க வரிகளே ஒருவித விநோதம் காட்டி நிற்கின்றன. கிடத்தப்பட்டிருப்பவனும் நானே... தண்ணீர்ப்பானையைத் தோள்களில் சுமப்பவனும் நானே... நான் என்னும் என்னை எரியூட்ட நானே சடங்குகள் செய்கிறேன்.. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போக வெற்றுப்பானையைப் போட்டுடைத்தபின் திறக்கிறது நான்காம் கண். மிகவும் அழகான சிந்தனை... வியப்போடு பாராட்டுகிறேன். முதல் பரிசு பெற்றமைக்கு சிறப்புப் பாராட்டுகள் புதுவை பிரபா.
    கீதம்
    உங்களது பாராட்டு வரிகள் உண்மையிலேயே எனக்கு ஒருவித உற்சாகத்தை தருகின்றது. மகிழ்கிறேன்.தங்களது அன்பான பாராட்டுகளுக்கு நன்றி!நன்றி!நன்றி!

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by PUTHUVAI PRABA View Post
    அன்பு -நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே...
    எதற்கு என்னை குழப்புறீங்க?
    ஆமாம் சார்... இந்த கவிதைக்கு" ஹெமாபாலாஜி அவர்களே..."ன்னு எதுக்கு வாழ்த்தறீங்க???
    மாற்றி விட்டேன் பெயரினை .இந்த குழப்பதிற்கு மன்னிக்க புதுவை பிரபா ...மின் தடை ஏற்பட்ட நேரத்தில் என்னால் பெயர் மாற்றத்தை கவனிக்க முடியவில்லை ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    மிக நல்ல கவிதை. இதைக்காண கண்கோடி வேண்டும்.
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •