Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: உயிர்முளை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0

    உயிர்முளை

    உயிர்முளை
    ஆக்கம் நடராஜா கண்ணப்பு

    சிசு.....
    மடக்கிய
    கும்பிட்ட கை
    உறங்கியபடி உயிர்முளை
    கருவில் விழித்த குழந்தை
    உயிர்முளை..

    கூர்ப்பில் நான்.........

    கேள்விக் குறி போல்
    கூனிக் கொண்டே
    தசைப் பெட்டியில்
    தண்ணீர் பலத்தில்
    உறைபோல் உலகில்
    கரையும் காலுமாய்
    மடங்கியபடி
    முடிக்கிடந்து உள்ளே விழித்து...

    முளையம் முளைக்கும்
    அணுவில் உயிர்முளை கொள்ள
    சவ்வு கவ்வி
    உணர்முளை பரப்பி
    செவிட்டு வாழ்வில்
    செதில் மூடி
    நீந்திக் கடல் குளித்து
    ஓட்டில் ஊர்ந்து
    புற்றில் அடங்கி
    செட்டை அடித்து
    குனிந்து இரை பொறுக்கி
    ஓட்டுக் கூட்டில்
    ஊர்ந்து ஒளிந்து
    முளைக்கல்
    முலைகள் முளைக்க
    நாலுகாலில்

    பிரசவம்
    தலை கீழாய்
    தரைப் பாயில்
    தாயோ குருதி கக்கிக் கொண்டு,
    கருப்பைச் சுவரில் கொழுவிய
    தசையும் நார்களும்
    பிய்த்துப் போட்ட பிண்டத் துகளாய்..
    நாயும் நரியும் தூக்கிச் செல்லும்
    அந்தப் பட்ட வெளியில் பிறந்தேன்,
    ஆலமர விழுது ஒன்றில் ஏனை
    காற்றில் அடிபட்ட துரும்பாய்
    கொழுத்தும் கோடையில் தோளில்
    போட்ட துண்டாய் கிடந்து நெளிந்தேன்.

    இரண்டாம் பருவம்

    சந்தைக் கூச்சலில்
    வாயைக் கட்டிய நாயாய்
    வலுவிழந்த எட்டி நின்றேன்
    தெரு கால்களுக்கு விலக முடியாமல்
    பள்ளிக்கூட
    மூலை ஒன்றில்
    மர பலகை இடுக்குகளில்
    கழுத்துப் பட்டியோடு பிணைக்கப்பட்டேன்..

    கொடுக்குப் பட்ட இரையாய்
    துவரம் பிரம்பில்
    தழும்பேறி ........
    இரவும் பகலும் இரை நிரப்பி
    கண்டதை கடித்துக் களிம்பேறிய பல்லோடு .....

    பனை ஓலை
    பாய் பதித்த
    முத்திரைத் தோல்
    பிஞ்சுத் தோலைப்
    பாம்புத்தோலாய்
    பயப் போர்வையோடு பள்ளி சென்றேன்...

    புத்தகக் கட்டு தோளில் அடித்த முத்திரை
    அடிமைத் தொழிலில்
    அத்திவாரம்..
    கணக்கு வாத்தியின்
    நகம் கடித்த காதுச் சோணையில்
    குருநாதரின் போதனையும்
    ஓம் என்ற மந்திரமும் ......
    பிரம்மக் குட்டுக்களும்
    பயத்தைப் படைக்கும்
    சிறைப்ப்ள்ளியில்
    கைதிக்காலம் கற்கும்காலம்
    தப்புக் கணக்கை வைப்புச் செய்தே ..

    சண்டித்தனம் செய்யும்
    குண்டனைச் சமாளிக்க
    நட்புச்
    சங்கீதம்
    இதயச் சுரப்பியில் ஊற
    பொட்டலமாய்
    சட்டைப்பையில் இனிப்புச் சரை..

    மெல்லிய முகங்கள்
    சொல்லும் புன்னகை
    பள்ளிகளில் பாடமாகும்
    கல்லும் முள்ளும்
    விதைத்த
    வீதிகள் கடந்த
    புழுதிப் பாதங்களில்
    கெந்திப் பிடிக்கும்
    இடைவேளை இராகங்கள்
    சின்ன பாட்டில் இசைக்க
    பசித்த மனம் படிக்கும்
    சுகங்கள் கேட்க நிறைய
    சிரித்துச் சிரித்துச்
    சத்தம் செய்து
    கரையும் காலத்தைச்
    சுத்தம் செய்தேன்..

    மூன்றாம் பருவம்

    சரசுவதி கைகள்
    கன்னம் அனணத்து முகத்தை ஏந்த
    தாமரை தூக்கியது
    தளிர் கொழுந்து வருடியது
    அன்பு போதிக்க
    சின்னவர்கள் உலகம் சிரித்தது

    தேவதை பாதம் பள்ளி மணலில்
    வளவும் பாதை வளைவும்
    சுண்ணாம்புச் சுவர் பாசியும்
    தமிழைத் தந்தன
    நெஞ்சம் நெகிழ நெட்டுருச் செய்த
    மலைக் குறத்தி பாடல்
    மந்தியும் தேனும்
    கோதிக் கிடக்கும் பலாவும்..

    கெந்திய மனத்தைக்
    கொம்பைக் கடந்து தாவும்
    குரங்காய் பாய்ந்து பாய்ந்து
    உண்ணத்
    தமிழைத் தந்தாள் ..

    மழலை பேசிய மூச்சில்
    இலக்கியப் பேராறு
    இரண்டாம் வகுப்பில்
    மர வாங்கு புதையும்
    மணல் மேடையில்
    அந்தக் குச்சுக் கல்விக்கூடம்
    கோடை மறந்து கொடும் பசிதுறந்து..

    குதித்தன குழந்தைகள்
    ஒல்லிக் கால்கள்
    அன்பு ஓடை நோக்கி ஓடின
    சளி சிந்தும் மூக்கில்
    கொசு விரட்டி
    தமிழ் கொலு ஏற்றிய
    அந்தப் புனித தாய்
    புகட்டிய தமிழ்
    பூட்டிய நட்புச் சங்கிலி
    புரிந்தன நண்பர்களின் மொழிகள்
    அன்பு வேதமானதனால்
    அக்னி ஆகின வெறும் பூச்சிகளும்....
    பூசிக்கும் தமிழ் தந்த தாயே
    விரண்ட எம்மை
    துயர் விரட்டி விண் எட்ட வைத்தாய்,
    பாலகர் பருவத்தின் பள்ளி வந்த சரசுவதியே
    எல்லா நாளும் எமக்கு விஜயதசமி....
    தாயே எம் கை விரல் பிடித்து
    அகரம் வளைத்தாய்
    உலகம் வளையம்
    அது உன் வலயம்..

    சுத்தமானவளே
    கண்ணில் கருணை ஈரம் எடுத்தவளே
    உன்னில் கற்றேன் உலகை உற்றேன்.....
    தொடரும்....... ...............

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நல்ல ஆரம்பம் கண்ணப்பு அவர்களே, தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம், விரிவாக பின்னூட்டம் இதே பதிவை எடிடிட் செய்து திருத்தி விடுகிறேன்
    அன்புடன் ஆதி



  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    நன்றியோடு -
    காத்திருக்கும் தமிழில் கண்ணப்பி
    சேர்ந்திருக்கும் எம் உறவில்
    பழம் தரும்
    பலம் கொள்
    அன்புக் கொடிகள் முளைக்கட்டும்..

  4. Likes ஆதி liked this post
  5. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அழகான ஆரம்பம் உள்ளுக்குள் விழித்திருக்கும் மனதின் கூர்ப்பில் இந்த உயிமுனையின் தமிழெனும் உணர்வுகளின் துடிப்பு ..தொடரங்கள் கண்ணப்பு...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி, ஆதி, த.க. ஜெய் அவர்களே.......

  7. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நல்ல கவி..
    தொடருங்கள்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அழகான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட கவிதையின் உணர்வோட்டத்தை ரசித்து மகிழ்கிறேன்.

    வித்திலிருந்து எழுந்த விருட்சமது, முளைவிட்டக் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து முகமலர, அகமலர எழுதுகிறது ஒரு தொடர்கவிதை.

    கொளுத்தும் வெயிலில் விழுதிலாடிய ஏணையும், மரப்பலகை இடுக்குகளில் கழுத்துப்பட்டியோடு பிணைக்கப்பட்ட காலமும் மனம் வருத்துகின்றன.

    முளைவிட்ட உயிரதன் வளர்ச்சி மூன்றாம் பருவத்தில் தளிர்விட்டுத் துளிர்த்த அழகு மனம் வசீகரிக்கிறது.

    சளிதுடைத்து கொசுவிரட்டிய அந்த புனிதத்தாய்க்கு வந்தனம். குற்றாலக்குறவஞ்சியை நினைவுறுத்திய காலத்துக்கும் வந்தனம்.

    இனிய துவக்கம். தொடரட்டும் உயிர்முளையின் கவி விருட்சம். பாராட்டுகள்.

  9. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    உற்சாகம் ஊட்டிய உன்னத வரிகளின் உத்தம நெஞ்சங்களுக்கு- அச்சசலா, கீதம் அவர்களுக்கு நன்றி........

  10. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    என் கண்ணப்பு... உங்கள் கவிதை என் மனதில் அப்பிக் கொண்டதப்பு...!!!


    பாராட்டுக்கள் நண்பரே...!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    ஆரம்பமே வித்தியாசமான அதிர்வுகளுடன்.... வாழ்த்துக்கள் சகோ.

  12. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    ஜெயந்த், ஹேமா அவர்களின் உற்சாக வரிகளுக்கு நன்றி.......

  13. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    கவிதை நன்றாக இருந்தது. மென்மேலும் தொடருங்கள்.
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •