அனுப்பிய வாழ்த்து கிடைத்ததெனில் பதில் மொழிந்தால் நன்று..
அனுப்பிய வாழ்த்து கிடைத்ததெனில் பதில் மொழிந்தால் நன்று..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
கிடைத்தது
நன்றி ஜெய்
வணக்கம் உறவுகளே, வியாழக்கிழமைக்குள்(08/11/12) உங்கள் வாழ்த்தை அனுப்பி வைத்துவிடுங்கள் தோழர்களே, அப்போதுதான் நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய முடியும், அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கிறோம்
இது நமது பண்பலை, நாமே முன்னடித்திச் செல்வோம்
அன்புடன் ஆதி
தகவலுக்கு நன்றி தம்பி ஆதி
வானம்போல் விரிந்து பரந்திருக்கும் தமிழ் மன்ற வெளியில் மின்னிக் கொண்டிருக்கும் மன்றச் சுடர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , தீபாவளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்....இந்த நன்னாளிலே உலக மானிடர் அனைவருக்கும் அக இருளும் புற இருளும் அகன்று அருளெனும் ஒளி அன்பெனும் விளக்கினால் எங்கும் படர்ந்து சுடரிட ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்....அனைவருக்கும் இவ்வாய்ப்பினை வழங்கிய தமிழ் மன்ற நிர்வாகிகளுக்கு சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .....வாழ்த்துவது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ரேமா
LIVE WHEN YOU ARE ALIVE !
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பு எப்பொழுது...???
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
தீபாவளியன்று மாலை ஐந்துமணியளவில் துவங்கும். விரைவில் அறிவிப்பு வரும் ஜெயந்த் அண்ணா
தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்
பா.ரா.
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்து
உழைப்பே மத்தாப்பு....! உண்மையே பட்டாசு...!
அறவழி வாழ்வும்......அரவணைப்பும்....
அழகாய் சுழலும்.....தரச் சக்கரம்...!
கோபம் குறைப்பது புஸ் வானம்..!
குழந்தை போல் சிரிப்பது சீனி சரம்..!
அன்பாய் பேசினால் அது அல்வா...!
பாசமாய் நேசித்தால் பால்கோவா...!
ரசித்து வாழ்ந்தால் அது ரசகுல்லா...!
இனிக்க நடந்தால் இனிய பாதுசா..!
பூந்தி கேசரி நெய் முறுக்கு - அது
பக்தி சாந்தி மெய் உணர்வு...!- நாம்
கடமையை ஒழுங்காய் செய்வோம் - நம்
கவலைகள் புஸ்ஸாய்ப் போகும்- நாம்
கடவுளை வணங்கி வாழ்வோம் - வரும்
காலங்கள் சக்சஸ் ஆகும்... ! நம்
இதயம் என்பது திரு விளக்கு - நல்ல
நினைவுகள் அதிலே ஒளி தீபம்...! எனவே
நீங்கள் நினைத்தால் தினமும் தீபாவளி...!
நினைவில் ஏற்றுங்கள் நம்பிக்கை தீப ஒளி..!
அனைவருக்கும் எனது
இதயம் நிறைந்த இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..!
நன்றி /
நிலவு
தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks