அடுத்த பகுதியை வெகுசீக்கிரத்தில் பதியுங்கள்.
அடுத்த பகுதியை வெகுசீக்கிரத்தில் பதியுங்கள்.
Last edited by sarcharan; 26-10-2012 at 09:07 AM.
நகைச்சுவையும் யதார்த்தமும் இணைந்து 'பார்கை''பார்கிங்கை' நகராட்ட்சியின் பாராமுகத்தைப் பார்க்க வைத்தீர்கள். பாராட்டுக்கள்.
இயல்பான நகைச்சுவை கதையெங்கும் காண முடிகிறது .. பாராட்டுக்கள்
சர்சரண் அவர்களே , தவறை மிக அழகாக சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி கொண்டேன். இப்போது மீண்டும் கதையின் இரண்டாம் பாகம் சென்று பாருங்கள், பல்ப் எரிந்து எனக்கு சொன்ன அறிவுரை என்ன என்று. முற்றும் கூட வைத்து விட்டேன்.
மிக இயல்பான நடையில் அழகான கதை. வாசிப்பவரைக் கூர்ந்து நோக்கச் சொல்லிய கதாசிரியர்...தன்னைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து நோக்கியிருப்பது கதயின் எல்லா வரிகளிலும் தெரிகிறது. ஒரு நல்ல கதாசிரியருக்கான முதல் தகுதியே...இந்த கூர் நோக்குதான். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் முரளி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சிவா.ஜி. மிக்க நன்றி. இந்த 'கூர்'ந்து 'பார்க்'கவும் என தலைப்பில் இணைக்க இன்னொரு காரணம் உண்டு. இந்த கதை நாயகன் 'ஆமை' என்ற நாமம் சூட்டப்பட்டவன். வடமொழியில் (சமஸ்கிருதம்) கூர்ம என்றால் ஆமை என பொருள். 'பார்க்'கில் 'ஆமை 'என்றே 'கூர்'ந்து 'பார்க்'கவும் தலைப்புக்கு பொருள் கொள்ளலாம். இது எப்படி இருக்கு ?
Last edited by முரளி; 30-10-2012 at 03:55 AM.
முரளி தெளிந்த நீரோட்டம் போல கதை செல்கிறது. முடிவு மட்டும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களால் இன்னும் சிறப்பாக மிளிர முடியும் என்று நம்புகிறேன் .வாழ்த்துககள்
குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.
நன்றி ஜார்ஜ். உங்களது கண்ணோட்டம் சரியானது. பிரச்னைகளை சொல்லும் கதாசிரியர் அதற்கு ஒரு தீர்வையும் வைக்க வேண்டும். எனக்கு தோன்றிய சிறு தீர்வை "வன்முறை வழியல்ல , இன்முறை தான் வழி". ஆனால் இது போதாது.
பார்க்கில் பார்கிங் பிரச்னை ஒரு தீராத பிரச்னை இல்லை. மிக மிக சிறிய பிரச்சினை கூட . அன்றாட எரிச்சல். ஆனால், மக்கள், நகராட்சி, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் சம்பந்தப்பட்டது. ஒன்று கூடியே ஒரு அமைப்பிற்கு வரவேண்டும். தன்னலம் குறைய வேண்டும். பொது நல எண்ணங்கள் கூட வேண்டும். நான் நினைப்பது சரிஎனில், இது போன்ற கதைகள் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும். படிக்கும் அன்பர்கள் வேறு நல்ல முடிவு காணக்கூடும். ஒரு சிறிய சமூக பிரச்னைக்கு இந்த மன்றத்தில் சமூக ஆர்வலர்கள், படித்தவர்கள் ஊக்கத்துடன் பங்கு கொள்வது மனதிற்கு நிறைவை கொடுக்கிறது.
வேறு ஏதேனும் வழி நிச்சயம் கிடைக்கும்.
Last edited by முரளி; 30-10-2012 at 05:12 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks