உறவுகள் என்றும் உதவாது அந்த
உறவினை உதறி வந்துவிடு- வந்தால் நீ
தனியாவாய்! எனக்குக் கனியாவாய் !
நோயால் வருந்தும் பிள்ளைக்குப் பாலூட்டும்
தாய்போல் இருந்து காத்திடுவேன் -என்னை
ஏற்றிடுவாய் துன்பம் மாற்றிடுவாய்!
உன்மடியில் நான்தூங்க என்மடியில் நீதூங்க
பொன்மயிலே!உந்தன் போகம் வேண்டுமடி!
வந்திடுவாய் முத்தம் தந்திடுவாய்!
அடுக்கடுக்காய் துன்பங்கள் வந்தாலும் உன்முகத்தை
ஒருதடவை பார்த்தாலும் போதுமே! அவையெல்லாம்
போகுமே என்நெஞ்சம் வேகுமே!
ஈருடலும் ஒருயிராய் இருக்கும் நம்மைப்
பிரித்திடவே எண்ணுகின்ற கயவர் தமக்குப்
பிணியாவேன் ஏழரைச் சனியாவேன்!
Bookmarks