Results 1 to 12 of 12

Thread: தனியாவாய்! எனக்குக் கனியாவாய்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    தனியாவாய்! எனக்குக் கனியாவாய்!

    உறவுகள் என்றும் உதவாது அந்த
    உறவினை உதறி வந்துவிடு- வந்தால் நீ
    தனியாவாய்! எனக்குக் கனியாவாய் !

    நோயால் வருந்தும் பிள்ளைக்குப் பாலூட்டும்
    தாய்போல் இருந்து காத்திடுவேன் -என்னை
    ஏற்றிடுவாய் துன்பம் மாற்றிடுவாய்!

    உன்மடியில் நான்தூங்க என்மடியில் நீதூங்க
    பொன்மயிலே!உந்தன் போகம் வேண்டுமடி!
    வந்திடுவாய் முத்தம் தந்திடுவாய்!

    அடுக்கடுக்காய் துன்பங்கள் வந்தாலும் உன்முகத்தை
    ஒருதடவை பார்த்தாலும் போதுமே! அவையெல்லாம்
    போகுமே என்நெஞ்சம் வேகுமே!

    ஈருடலும் ஒருயிராய் இருக்கும் நம்மைப்
    பிரித்திடவே எண்ணுகின்ற கயவர் தமக்குப்
    பிணியாவேன் ஏழரைச் சனியாவேன்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. Likes sarcharan liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காதலியின் வருகைக்காக இறைஞ்சும் வரிகள் அருமை. வந்தால் உன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்வேன் என்று விவரிப்பது அழகு. கடைசி வரிகள் சற்றே முறுவல் தந்தன. ரசிக்கவைத்த அழகுக் கவிதை. பாராட்டுகள் ஐயா.

    கடைசிப்பத்தியில் ஈருடலும் ஓருயிருமாய் என்றிருந்தால் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.

  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    காதலியின் வருகைக்காக இறைஞ்சும் வரிகள் அருமை. வந்தால் உன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்வேன் என்று விவரிப்பது அழகு. கடைசி வரிகள் சற்றே முறுவல் தந்தன. ரசிக்கவைத்த அழகுக் கவிதை. பாராட்டுகள் ஐயா.

    கடைசிப்பத்தியில் ஈருடலும் ஓருயிருமாய் என்றிருந்தால் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.

    ஓசை நயத்திற்காக ' ஓருயிராய் " என்று எழுதினேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஓசை நயத்திற்காக ' ஓருயிராய் " என்று எழுதினேன்.
    தங்கள் விளக்கத்திற்கு நன்றி ஐயா.

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    ஏக்கங்களின் வலி வரிகளை படிக்கும் போதே
    தொற்றி கொள்கிறது
    ஒருதடவை பார்த்தாலும் போதுமே! அவையெல்லாம்
    போகுமே என்நெஞ்சம் வேகுமே!
    ஏதோ முரண் தெரிகிறதல்லவா ?
    ஏன் ஒரு தடவை பார்த்தால் நெஞ்சம் (வேகுமே) துன்பப்பட வேண்டும் !

    தனியாவாய்! ______கனியாவாய்!
    சந்தமும் அர்த்தமும் ஒரு சேர பொருந்தி வருகிறது

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by kulakkottan View Post
    ஏக்கங்களின் வலி வரிகளை படிக்கும் போதே
    தொற்றி கொள்கிறது

    ஏதோ முரண் தெரிகிறதல்லவா ?
    ஏன் ஒரு தடவை பார்த்தால் நெஞ்சம் (வேகுமே) துன்பப்பட வேண்டும் !

    தனியாவாய்! ______கனியாவாய்!
    சந்தமும் அர்த்தமும் ஒரு சேர பொருந்தி வருகிறது
    இங்கு , " வேகுமே " என்ற சொல்லுக்கு " அமைதி அடையுமே " என்று பொருள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. Likes kulakkottan liked this post
  9. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    சந்தங்கள் மிகுந்த அருமையான எதிர்பார்ப்புக் கவிதை. எதிர்பார்க்கும் தன் இணைக்குத் தன்னால் என்ன இயலும் என்று மனம் திறந்து சொல்லும் வரிகள் அருமை.

    ஈருடலும் ஒருயிராய் இருக்கும் நம்மைப்
    பிரித்திடவே எண்ணுகின்ற கயவர் தமக்குப்
    பிணியாவேன் ஏழரைச் சனியாவேன்!
    இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. பாராட்டுகள் ஐயா.

  10. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    காதலுக்காக ஏங்குவதும் காதலுக்காக ஆயுதம் தாங்குவதும் நல்ல கவிதை.
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  11. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    குளக்கோட்டன், கலைவேந்தன், கோபாலன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    காதலியின் வருகையினை எதிர்நோக்கும் கவிதை வரிகள் அருமை..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  13. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நாஞ்சில் த.க. ஜெய் அவர்களின் பாராட்டுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  14. #12
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    உங்கள் தெளிவு படுத்தலுக்கு நன்றி M.Jagadeesan

    அர்த்தம் புரிந்த பின் இன்னும் கவி ரசனையை மாறி விட்டது

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •