Results 1 to 5 of 5

Thread: தெருவில் எரிந்த கற்பூரம்

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jul 2012
    Location
    VELLORE
    Age
    37
    Posts
    89
    Post Thanks / Like
    iCash Credits
    12,662
    Downloads
    12
    Uploads
    0

    தெருவில் எரிந்த கற்பூரம்

    இனம்படு பாட்டை எண்ணி
    =====இமைபடு உறக்கம் கெட்டு
    தினம்படு பாட்டி னாலே
    =====தன்னையே எரித்துக் கொண்டான்!
    வனம்படு முல்லை யொன்று
    =====வீழ்ந்தது மரணக் காட்டில்!
    மனம்படு பாட்டை எந்த
    =====மொழியினால் உரைப்பேன் அம்மா!

    ஈழமே சாக்கா டாகி
    =====இனமுமே அழிவிற் பட்ட
    ஓலமே எடுத்து வந்து
    =====உரைத்திடக் கடல லைகள்
    நாளமே துடிது டித்து
    =====நல்"முத்துக் குமரன்" என்பான்
    நாளுமே பட்ட துன்போர்
    =====நாளிலே முடித்துக் கொண்டான்!

    தன்னுடல் கருக்கும் தீயைத்
    =====தமிழர்க்கோர் தீபம் என்றான்!
    தன்னுடல் கொரிக்கும் தீயைத்
    =====தமிழர்க்கோர் விடியல் என்றான்!
    தன்னுடல் எரிக்கும் தீயைப்
    =====புரட்சியின் தீபம் என்றான்!
    என்னுடல் நடுங்கு தம்மா
    =====எவனவன் இவனுக் கீடு?

    உரிமைகள் இருந்தும் கூட
    =====உவப்புறு தமிழர் என்றும்
    பிரிவினை பேச வில்லை
    =====பிரிக்குமோர் நினைப்பும் இல்லை!
    ஒருமையில் நெஞ்சம் வைத்து
    =====ஒற்றுமை காக்க நின்றும்
    சிறுமையில் பிறந்து வந்த
    =====சிங்களர் மறுத்தார்; ஏனும்

    சிங்கள இனத்தை நாங்கள்
    =====சிதைத்திட நினைத்தோ மில்லை!
    "எங்களுக் கென்றோர் தேசம்"
    =====அதையுமே ஏற்றா ரில்லை!
    பங்கிடா உரிமை யாலே
    =====புரட்சிகள் வெடிக்கும் என்ற
    மங்கிடா உண்மை தன்னை
    =====மடையர்க்குப் புரிய வைப்போம்!

    எரிந்தவா "முத்து"! உன்போல்
    =====எவருமே எரிதல் வேண்டாம்!
    எரிந்தது போதும்; ஆமாம்
    =====வாழ்வொடு வயிறும் இங்கே!
    புரிந்துமே தியாகம் கோடி
    =====புன்மதி அசையா தென்றால்
    எரிவதில் லாப மில்லை
    =====எரிப்பது ஒன்றே நீதி!


    (தமிழினத்திற்காக தீக்குளித்த தோழர் முத்துக்குமாருக்கு ஈது சமர்ப்பணம்)

    ------------ரௌத்திரன்
    பேனாக்கள் உறங்கிவிட்ட தேசத்தில்
    போர்வாள்கள் விழித்துக்கொள்கின்றன-------ரெளத்திரன்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    உணர்வு மேலீட்டிலும் தமிழின் வளத்தை வாரியிறைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    கவிதை வாசிக்கும்போதே தேகம் சிலிர்க்கிறது.

    பேனாவால் புரட்சி செய்யும் போர்வீரனுக்கு வாழ்த்துக்கள்.

  3. #3
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jul 2012
    Location
    VELLORE
    Age
    37
    Posts
    89
    Post Thanks / Like
    iCash Credits
    12,662
    Downloads
    12
    Uploads
    0
    அன்பு அக்காவுக்கு நன்றி-------ரெளத்திரன்
    பேனாக்கள் உறங்கிவிட்ட தேசத்தில்
    போர்வாள்கள் விழித்துக்கொள்கின்றன-------ரெளத்திரன்

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் வரிகளில் நெருப்பு எரிகிறது.

  5. #5
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jul 2012
    Location
    VELLORE
    Age
    37
    Posts
    89
    Post Thanks / Like
    iCash Credits
    12,662
    Downloads
    12
    Uploads
    0
    நன்றி தோழா!----ரெளத்திரன்
    பேனாக்கள் உறங்கிவிட்ட தேசத்தில்
    போர்வாள்கள் விழித்துக்கொள்கின்றன-------ரெளத்திரன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •