எனது இயற்பெயர் : குமார்.
நவீன கவிதைகளின் மீதான தாக்கமும், விளைவுகளும் என்னை இம்மாதிரியான ஒரு இயங்குதளத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. எனது வருகையின் நோக்கம் மாறியிருந்தாலும் அகத்தோற்றம் மாறுபடுமோ எனும் எண்ணத்தில் நிலைத்திருக்கிறேன். வெறும் வார்த்தைகளாக கவிதைகளை இரைப்பதில் உடன்பாடில்லைதான் என்றாலும் ஒரு வார்த்தை முடிந்து இன்னொரு வார்த்தை துவங்குதலிடையே கவிதை மொழி புழங்குவதாக எண்ணுகிறேன். சொற்களின் மீதான அபரிமிதமான வியப்பும் காமமும் மீமொழிமீதான ஆச்சரியமும் என்னை இங்கே கவிதை மொழி பேசவைக்கும் என்று பெருமிதத்துடன் கருதுகிறேன். கவிதைகள் மீதான என் பார்வையையும் தூசிபடர்ந்த மொழியில் கவிதைகளையும் ஒரு நோக்கத்துடன் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும்
அறிமுகம் என்பதே ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் (அல்லது சதுரம்) இயங்கவைக்கும் கோளாறு உள்ளது என்பதல் மேற்சொன்ன அனைத்தும் பொய் என்று உறுதிகூறுகிறேன்.
அளவில்லா அன்போடு
வெறுப்புவிஜய்.
Bookmarks