Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 51

Thread: வெறுப்பு விஜய் கவிதைகள்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0

    வெறுப்பு விஜய் கவிதைகள்

    புள்ளியாகத் தெரிந்து
    வளர்ந்து பின்னோக்கி நகர்ந்தன
    மரங்கள்
    கடிகாரத்தின் நகர்த்துதலில்
    இடைநின்று கொண்டிருக்கிறேன் நான்

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு புகை ஊதி முடித்தபிறகு
    அருகேயிருப்பவரின் நாசியில்
    வாசம் கமழ்ந்து உள்ளிழுக்கிறது
    ஊர்நாயின் ஈரல்துளையில்
    ஸ்வாசங்களின் தழுவல்களாய்
    படிந்துகொள்ளுகிறது
    நிகோடின் கலந்த மொட்லியை
    உருவாக்கி ஊதுகிறாள் சிறுமி
    காயாத கங்கினைச் சுவைக்கிறது
    முத்தமிடாத இளம் உதடு
    தட்கல் முறையில் பெர்த் கன்ஃபர்ம்
    செய்கிறது புற்று

    மேலும்
    ஒரு புகை ஊதி முடித்தபிறகு
    அங்கே அமைதி நிலவுகிறது.

  3. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    அந்த கோபம்
    தன்னைக் கடிந்து கொள்ளுகிறது
    நாணிச் சிவந்து
    வெட்குகிறது
    தனது உடலத்தின் நிறத்தினை
    மாற்றியமைக்க முயலுகிறது
    ஒரு பெண்ணைப் போலவே
    இருக்கவேண்டுமென நினைக்கிறது
    சிதறியோடும் சிரிப்பைப் போல
    தனது உடைமையை மாற்றிக் கொள்ளுகிறது
    ஒருமுறையேனும் கவிழ்ந்திசைய
    முயற்சி பண்ணுகிறது.
    தூய்மையான லக்கினத்தை
    அடைய முற்படுகிறது.
    ஒரு மழைநாளில்
    கரைந்து போய்
    தனது இருப்பைக் காட்டி
    உதட்டைக் கடித்துக் கொள்கிறது
    மேற்சொன்ன
    அந்த கோபம்

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு நீண்ட PVC குழாயின் முனையில்
    கண் வைத்துக் காண்கிறாள்
    Syntex தொட்டிக்குப் பின்
    நெடிது வளர்ந்து நிற்கும்
    இளமரம்
    பின்னே ஒரு புது மின்சார கம்பமும்
    கழன்றுவிழக் காத்திருக்கும் கலசகோபுரமும்
    தெரிவதாகச் சொல்லுகிறாள்
    மேலும் என்றேன்
    ”இரண்டு புகையூதி அண்ணாக்கள்
    புத்தகப்பை பெண்
    Share autoக்களின் காத்திருப்பு
    இவையாவும்” - அவள்
    மேலும் மேலும் என்றேன்
    சாலை முழுக்க
    புகை கக்கிகள் படுத்துருள
    சவத்தின் மேலே மிதித்துச் செல்லும்
    கால்கள் தெரிகின்றன என்று
    புதிதாய் ஏதோ சொன்னாள்
    குழாயின் விட்டத்தில்
    சுருங்கிக் கிடக்கிறது அவளின் உலகம்.

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0

    சிவந்த பங்களாவில் கதவுகளைத் திறந்து
    ஓடிவருகிறார் கமலஹாசன்
    பா...ப்பப்..பாபாப் பபப் பா..........
    ஸ்ரீதேவியின் முத்திய மூக்கு
    காலிழந்த கொக்கின் வாயில் மீன்
    துடிக்கத் துடிக்க ஸ்பரிஷம் இழந்து
    இறுதிச் சொட்டு குளத்து நீர்
    வடிய தொண்டையின் வழுவழுப்பில்
    எக்கி எக்கி
    கொக்கின் இரைக்கான போராட்டத்தில்
    தந்தன.. தந்தன... தான தந்தன... தன்னானா...
    சிப்பியிருக்குது முத்துமிருக்குது
    திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
    குரல் கம்மி பாடல் முடியவிருக்கும் தருவாயில்
    எப்படியோ தப்பி குளத்திலறங்கி
    வாய்திறந்து நீர்குடிக்கும்
    ஐபேட் கிழவனின் தூண்டிலில்
    எதுவும் சிக்காமல் போகிறது
    ஒரு Photographer
    காத்துக் கொண்டிருக்கிறார்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கவிதைகள் ஒவ்வொன்றும் அருமைஅதிலும் புற்றுநோய் மற்றும் கோபம் கூறும் வரிகள் ..ஒரு வேண்டுகோள் தமிழில் கவிதை படைக்கும் போது ஆங்கில கலப்பு வேண்டாமே..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #7
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    கவிதைகள் ஒவ்வொன்றும் அருமைஅதிலும் புற்றுநோய் மற்றும் கோபம் கூறும் வரிகள் ..ஒரு வேண்டுகோள் தமிழில் கவிதை படைக்கும் போது ஆங்கில கலப்பு வேண்டாமே..
    மிக்க நன்றி நாஞ்சில்.த.க.ஜெய்

    PVC, Syntex போன்றவற்றிகு தமிழ்படுத்துவதைவிடவும் ஆங்கிலமே சாலச்சிறந்தது என கருதுகிறேன்.

    மேலும் உங்கள் கருத்தின்படி கூடுமானவரையில்ம் ஆங்கிலம் தவிர்க்க முயலுவேன்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    புரிதலுக்கு நன்றி விஜய் அவர்களே..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  9. #9
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    முருங்கை மர உச்சிக்கூடு
    தலைதொங்கி இறந்து கிடக்கிறது
    கருங்குஞ்சு
    பறக்குமெனக் காத்திருக்கிறது
    காகம்.


    வீட்டு மரத்தில்....

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இந்த தாய் காகத்தின் இறக்கை கொய்யபட்டு விட்டதா என்ன?
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  11. #11
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    எனக்கு உங்கள் கேள்வி விளங்கவில்லை திரு.ஜெய். அவர்களே. கொஞ்சம் விளக்கமாகக் கேட்கமுடியுமா?

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    எனக்கும் புரியவில்லை ..காகத்தின் கூட்டில் இருக்கும் இறந்த குஞ்சினை கண்ணீர் உகுக்காமல் வீட்டுமரத்தில்(இது என்ன வீட்டு மரம்) இருந்து என்ன செய்கிரது என்பதுதான் என் கேள்வி..அதைதான் அவ்வாறு கூறி உள்ளேன்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •