நிலா அபகரிப்பு வழக்கு !
சூரியமன்றதில்
அமாவாசையன்று ...
நில மகளுக்கும்
விவசாயிக்கும்
விவாகரத்து !
அடுக்குமாடி குடியிருப்பு
கட்டி முடிப்பு ..
பருவமழைக்காக
சிறப்பு வேண்டுதல் !
தலையை மழித்துக்கொண்ட
மரங்கள் ..
இலையுதிர்காலம் தொடக்கம்...
நிலா அபகரிப்பு வழக்கு !
சூரியமன்றதில்
அமாவாசையன்று ...
நில மகளுக்கும்
விவசாயிக்கும்
விவாகரத்து !
அடுக்குமாடி குடியிருப்பு
கட்டி முடிப்பு ..
பருவமழைக்காக
சிறப்பு வேண்டுதல் !
தலையை மழித்துக்கொண்ட
மரங்கள் ..
இலையுதிர்காலம் தொடக்கம்...
வசிகரன்
அடடே !
வா வா வசீகரா !
வசீகரிக்கும் வரிகள் !
தொடர்ந்து எழுதவும்!
வேண்டுதல் அதிகமாகி
வெள்ளப் பெருக்கெடுக்காத வரை
நன்று,...
அழகிய கவி வரிகள்
அழகாய் மனதை
கொள்ளை கொள்கின்றன...
வாழ்த்துக்கள் வசீகரன்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பிரமாதம் வசீகரா. வசீகரிக்கும் வரிகள். ரொம்ப நல்லாருக்கு. தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அடடே... இந்த பகுதி நல்லாயிருக்கும்போல இருக்கே..!!
தொடர்ந்து எழுத எமது வாழ்த்துக்கள் வசீகரன்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
நன்றி ஆசைஅஜித்.
வசிகரன்
நன்றி இனியவள் ..தண்ணியே இல்ல ,இதுல வெள்ளபெருக்கு எங்க வருது ..
வசிகரன்
நன்றி சிவாஜி
வசிகரன்
நன்றி சுங்கதிப்ரீதன்
வசிகரன்
மூன்று கவிதைகளும் அருமையா வந்திருக்குங்க வசீகரன்.
நிலா அபகரிப்பு வழக்கு !
சூரியமன்றதில்
அமாவாசையன்று ...
சூரியனே ஒளித்துவைத்துக் கொண்டு என்ன் நாடகம் இது???!!!
நில மகளுக்கும்
விவசாயிக்கும்
விவாகரத்து !
அடுக்குமாடி குடியிருப்பு
கட்டி முடிப்பு ..
விவாகரத்திற்குப் பின் என்னவொரு தற்கொலை!! இது செத்துத் தொலையாத கொலை.
பருவமழைக்காக
சிறப்பு வேண்டுதல் !
தலையை மழித்துக்கொண்ட
மரங்கள் ..
இலையுதிர்காலம் தொடக்கம்...
ஹாஹா.... நல்ல கற்பனை.
இவையனைத்துமே வித்தியாசமாக இருந்தது. சில ஹைக்கூவுக்கு நெருக்கமாகவும் இருந்தது. கொஞ்சம் வடிவம் மாற்றி உள்ளர்த்தம் சரிசெய்தால் ஹைக்கூவேதான்.
தொடருங்கள் வசீ... உங்கள் கவிதை வசீகரிக்கின்றன..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அடடே கவிதைகள் ஒவ்வொன்றும் அட, அடடா, அடஅடஅடா... போடவைத்தன.
கடைசிக் கவிதையை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் வசீகரன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks