உறவுகளே யார் யார் பண்பலை கேட்டீங்க, குறைகளை சொல்லுங்க அடுத்தடுத்த ஒலிபரப்பில் சரி செய்ய முயலலாம்
உறவுகளே யார் யார் பண்பலை கேட்டீங்க, குறைகளை சொல்லுங்க அடுத்தடுத்த ஒலிபரப்பில் சரி செய்ய முயலலாம்
அன்புடன் ஆதி
எங்களுக்கு இரவு நேரம் என்பதால் என்னால் முழுவதுமாய்க் கேட்கமுடியவில்லை. மறு ஒளிபரப்பு எப்போது ஆதி?
பண்பலை சோதனை ஒலிபரப்பைக் கேட்டேன். மிகவும் அற்புதமாக உள்ளது. மன்ற மக்களின் படைப்புகளை ஒலி வடிவில் கேட்க ஆவலாக உள்ளேன். இமாலய முயற்சி வெற்றி பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
பண்பலை சோதனை ஒலிபரப்பைக் கேட்டு பரவசம் அடைந்தேன். உழைத்த உள்ளங்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
வாழ்த்துக்கள் மன்ற உறவுகளே நமது மன்றம் இன்னுமோர் படிகல் நோக்கி பயணிக்கும் இவ்வேளை என்னில் இனம் புரியாத உணர்வு இன்று ஒலிக்கும் இசையினை கெட்டுகொண்டே பதிவிடும் இன்னாள் ஒரு பொன்னாள்..ஒவ்வொரு முறையும் நான் இணையத்தில் உலவும் போது பாட்டினை கேட்டு கொண்டு உலவுவது என் பழக்கம் ..இன்று ஒரு மாறுதல் இன்று நம் மன்ற எப் எம்..ப்ணிபளு அதிகம் இருந்ததால் நான் நேற்றைய வாய்ப்பினை இழந்து விட்டேன்..வரும் ஞாயிறு கேட்டு விடுகிறேன் .. எனக்குள் தோன்றும் சில சிந்தனைகள்
1.தலையங்கம் எனும் தலைப்பில் தினமும் ஒரு தலைப்பில் நம்முள் தோன்றும் ஒரு தலைப்பில் தொகுத்து ஒலிபரப்பலாம்..
2.விவாத மேடை எனும் தலைப்பில் தோழர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு தலைப்பில் விவாதிக்கலாம்.
3.கவிதை தொகுப்பில் ஒவ்வரும் வடிக்கும் கவிதைகளை அவரவரர் உணர்வுகளின் தொகுப்பில் கவிஞர்களே வடிக்கலாம்..
4.தொழில்நுட்பம் எனும் தொகுப்பில் கேள்வி பதில் எனும் தொகுப்பில் தோன்றும் சந்தேகங்களின் தேர்வினை அளிக்கலாம்...
5.கதைகளை சிவா.ஜி அவர்கள் கூறுவது போல் நாடகம் மூலம் ஒலிபரப்புவது இன்னும் கனம் சேர்க்கும்...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
இப்பொழுது இரண்டு பாடல்கள் ஒன்றின் மேல் ஒன்று (ஒவர் லாப்) இணைந்து வருகின்றதே...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
நண்பர்களே, எனது உடல்நிலை சற்று சரிந்ததாலும் தேர்வுகள் விடைத்தாட்கள் திருத்தும் பணிகள் நெருக்கியதாலும் அதிக நேரம் மன்றத்தில் இருக்க இயலாததால் இந்த அறிவிப்பை வாசித்தும் நேற்று சோதனை ஒலிபரப்பைக் கேட்க இயலவில்லை. வரும் சனி ஞாயிறுகளில் கேட்டு எனது கருத்துகளைப் பதிகின்றேன்.
தமிழ்மன்றப்பயணத்தின் அடுத்த மைல்கல்லுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளும் நல்லாசிகளும் என்றும் உரித்தாகட்டும்..!
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks