Results 1 to 12 of 65

Thread: தமிழ்மன்றப் பண்பலை..

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    தமிழ்மன்றப் பண்பலை..



    அன்பு மன்ற சொந்தங்களே..!!

    மன்றத்தின் சொத்துகளாகிய சொந்தங்களின் படைப்பாற்றலுக்கு களங்களை அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமை மன்றத்துக்கு உண்டு. அமைத்துக் கொடுக்கும் களங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பு மன்ற மக்களுக்கு உண்டு.

    அந்த வகையில், மன்ற மக்களுக்காக, ஒலிபரப்புக் களம் ஒன்றை அமைக்கும் முயற்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. மன்ற செயற்குழுவினதும், மன்ற நிர்வாகக் குழுவினதும் ஆலோசனைகளும் உழைப்புகளும் கொண்டு அடித்தள வேலைகள் நிறைவு பெற்று விட்டன. சோதனை ஒலிபரப்பும் ஓரளவுக்கு திருப்தியானதாக உள்ளது. இப்போது பொதுவில் சோதனை ஒலிபரப்பை அறிமுகப்படுத்தும் காலம் கனிந்துள்ளது.

    ஒக்டோபர் 2 ஆம் நாள் இந்திய நேரப்படி மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை சோதனை ஒலிபரப்பை அன்பர்கள் கேட்கலாம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

    இந்தப் பண்பலையின் நோக்கம் மன்ற மணிகளால் படைக்கப்பட்டவற்றை ஒலிப்பதிவில் கொண்டுவருதலே. அதை நோக்கிய பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற உறுதிப்பாட்டுடன் இனிதே அனைவரும் பண்பலையில் சங்கமிப்போம்.

    உங்கள் ஆலோசனைகள், உதவிகள் நிச்சயம் தேவை. நீங்கள் எந்த மாதிரிப் பங்களிக்க இருக்கின்றீர்கள் என்பதுவும் முக்கியமான தேவை. உங்கள் மனவோசைகள் இங்கே எழுத்தோட்டங்களாகட்டும். எழுத்தோட்டமான மன ஓசைகள் குரலோசைகளாகட்டும்.

    உங்கள் உழைப்புடன் பண்பலை உற்சாகபாகப் பாயும் என்ற நம்பிக்கை மன்றத்துக்கு உண்டு.

    அன்புடன்,

    நிர்வாகக் குழு

    செயற்குழு

    பின்னர் சேர்த்தது. 02.10.2012
    ஆர்வத்துடன் கருத்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..

    மன்றப் பண்பலையில் அனைத்து மன்ற உறுப்பினரும் பங்காளர்கள் என்பதை பறைசாற்றும் வண்ணம் கருத்துகள் வந்திருக்கிப்பது மகிழ்வைத் தருகிறது. அதே மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் அடுத்த கட்டத்தையும் அரிவிப்பதில் மகிழ்ச்சி.

    அனைத்து உறுப்பினரும் பண்பலையின் பங்காளராக இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைத்து, தலைமை தாங்கிப் பண்பலையை நடத்திச் செல்ல ஒரு குழு அவசியம். அந்த வகையில் சிவா.ஜி, மதி, ஆதி ஆகிய மூவரையும் இணைத்து பண்பலை ஒருங்கிணைப்புக் குழுஉருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மன்ற உறவுகளை ஒருங்கிணைத்து பண்பலையை நடத்திச்செல்லும்.

    பண்பலையின் வீச்சு பிரமாண்டமானதாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாரிடத்திலும் இருக்கும். அதை நோக்கிய பயணத்தின் துவக்கமே இன்று.. எளிமையாகத் துவங்கும் பண்பலை நிதானமாக நகர்ந்து ஆழக் கால் பதித்து, நிலையெடுத்த பின்பு முழு வீச்சில் தன் பாய்ச்சலைக் காட்டும் என்பதை உறுதிபட உரைக்கலாம். அது வரை மனங்களும் மன்றமும் சோர்ந்து போகாமல் இணைந்து செயல்படுவோம்.

    இனி... பண்பலைக் குழு முழுவீச்சில் தன் வேலையைத் துவங்கும்.

    சோதனை ஒலிபரப்பைக் கேட்க இந்த இணைப்பை கிளிக்குங்கள்.

    http://www.tamilmantram.com/fm

    விரைவில் மன்றத்திலிருந்தே கேட்கும் வசதியை உருவாக்க முயல்வோம்.

    நன்றி.

    செயற்குழு.
    Last edited by அமரன்; 11-11-2012 at 09:14 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •