Results 1 to 6 of 6

Thread: தீராத பிரார்த்தனை ஒன்று...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0

    தீராத பிரார்த்தனை ஒன்று...



    தீராத பிரார்த்தனை தாங்கிய
    காகிதத்துண்டு ஒன்று எட்டியபோது
    கடவுள் மொழி புரியாதவராய்
    இருந்தார்...

    தீராத பிரார்த்தனையின்
    குரல் ஒன்று கதறிய போது
    கடவுள் காதுகளற்றவராய் இருந்தார்

    தீராத பிரார்த்தனையின்
    கண்ணீர்த் துளி ஒன்று
    சொட்டிய போது கடவுள்
    கண்களற்றவராய் இருந்தார்

    தீராத பிரார்த்தனையின்
    வலி ஒன்று அறைந்த போது
    கடவுள் உணர்வுகளற்றாவராய் இருந்தார்

    தீராத பிரார்த்தனை ஒன்று
    தன் உருச்சிதைந்து
    அழுகலின் நாற்றத்துடன் பரவியபோது
    கடவுள் உணர்ச்சியற்றவராய் இருந்தார்

    இப்படித் தீராத பிரார்த்தனைகள்
    சுமந்து பால்வெளியில்
    அலைந்து கொண்டிருக்கும்
    காகிதத் துண்டுகள் எத்தனையோ?..

    அவை என்றேனும் ஒருநாள்
    பொழியக் கூடும் அமில மழையாக
    கடவுளின் துகள்களையும் கரைத்துக் கொண்டு...

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் அசாத்திய நம்பிக்கையால் அனைத்தும் வெற்றிபெறும், இக்கவிதயைபோல.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தீராத பிரச்சனையாயிருந்த கடவுளின் துகள்கள் கூட இருப்பதாய்க் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட உலகில் தீராத பிரார்த்தனைகளைத் தீர்த்துவிடக்கூடிய கடவுளைக் கண்டுபிடிப்பது மட்டும் கைவசப்படவில்லையே....

    தீர்க்கப்பட்ட பிரார்த்தனைகளோடு தானும் மறக்கப்பட்டுவிடுவோமென்பது கடவுளுக்குத் தெரிந்துவிட்டதோ? அதனால்தான் தீராத பிரார்த்தனைகளோடு சுற்றித்திரியும் காகிதங்களைக் கண்டுகொள்ள மறுக்கிறார் போலும்.

    மனம் தொட்ட கவிதை. தம்மால் தீர்க்கவியலாத பிரச்சனைகளைக் கண்டு ஓடும் கடவுளின் கையாலாகாமையைக் கண்முன் உரித்துவைத்தக் கவிதைக்குப் பாராட்டுகள் ஹேமா.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    பின்னூட்டியதற்கு நன்றி தைனிஸ், கீதம் மற்றும் சுகந்தப்ரீதன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    தீராத பிரார்த்தணைகள் பல*
    அதை தீர்த்து வைக்க*
    பிரார்த்திகும் நிலையில்
    நாங்கள் - அதை
    தீர்க்க முடியா நிலையில்
    அவன்...

    அருமையான கவி
    அதனுள் எனக்குள்
    உதிர்த்தது ஒரு கரு
    அதனால் உண்டானது
    "இனிய போராட்டம்"

    அழகிய கவிதைக்கு
    என் அழகான வாழ்த்துக்கள்
    ஹேமா பாலாஜீ
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •