இனியவர்களே!

மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி,
மன்ற மறவர்களுக்காக நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியின் முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

எதிர்பார்த்த அளவை விட அதிகமாகக் கவிதைகள் வந்தன.
எதிர்பார்த்த அளவில் வாக்காளர்கள் இல்லை.
கவிஞர்களே வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கவிதைபோட்டியில்,
வாக்களிக்கத் தவறிய போட்டிக் கவிஞரின் கவிதையை போட்டியிலிருந்து நீக்குவதைப் போட்டி ஒழுங்கில் சேர்க்கலாம் போல..

போட்டியில் சகல விதத்திலும் பங்குபற்றியவர்களின் கரங்களை மன்றம் நன்றியுடன் பற்றிக்கொள்கிறது..

போட்டி ஒழுங்கின் படி, ஒருவர் மூன்று வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்று கேட்டிருந்தோம். செலுத்தாத பட்சத்தில் அவருடைய வாக்கு செல்லாத வாக்காகக் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கவிதை எண் - 6 பெற்ற 19 மொத்த வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லாத வாக்குகள்.. எனவே அக்கவிதை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 17 ஆகும்.

அதே போல கவிதை எண் - 1 உம் ஒரு செல்லாத வாக்கினைப் பெற்றிருக்கிறது. எனவே அது பெற்ற வாக்குகளும் 2 ஆகக் குறைகின்றது..

வாக்குகளின் அடிப்படையில்,

புதுவை பிரபா அவர்களின் கவிதை அதிக வாக்குகளைப் பெற்று, அவருக்கு முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

கலைவேந்தன் அவர்களின் கவிதை அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

வெ.செந்தில்குமார் அவர்களின் கவிதை அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது..

மூவரையும் வாழ்த்தி மகிழும் மன்றம் பங்குபற்றிய ஏனைய கவிஞர்களைப் பாராட்டுகிறது.

நன்றி.

கவிதைபோட்டி அறிவிப்பு இங்கே..
http://www.tamilmantram.com/vb/showt...9F%E0%AE%BF-23

வாக்கு விபரங்களை முழுமையாக அறிய
http://www.tamilmantram.com/vb/showt...AE%AA%E0%AF%81