Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: பனைமரத்திடலும், பேய்களும்

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    பனைமரத்திடலும், பேய்களும்

    பள்ளிக்கூடு விடுத்துப் பறக்கும்
    பால்யநாட்களின் பகற்பொழுதுகளில்
    பட்டாம்பூச்சிச் சிறகுகள் யாவும்
    பயத்தால் பின்னிக்கொள்ளும்
    பனைமரத்திடல் பார்த்தமாத்திரத்தில்!

    உச்சிப்பனையில் உட்கார்ந்திருக்கும் பேய்களுக்கு
    உச்சிப்பொழுதே உகந்ததென்றும்
    அச்சமயம் ஆங்கு நடமாடுவோரை,
    கொடுங்கரங்களால் பாய்ந்து பற்றி,
    கோரைப்பல்லால் கவ்விக்கொல்லுமென்றும்
    பலியானவரில் ஒருவர்
    தன் பக்கத்து வீட்டு மாமாவென்றும்
    விழிவிரிய பாக்கியலட்சுமி சொன்னதெல்லாம்
    வழித்துணையாய் வந்து பாடாய்ப்படுத்தும்.

    சடசடவென்று சத்தமிட்டபடி,
    படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி
    வா வாவென்று பேய்கள் யாவும்
    வரவேற்பதுபோல் தோன்ற....

    தோளில் தொத்திக்கொண்டு
    உடல் அழுத்தும் பயத்தை
    எந்தக் கடவுள் பெயரால் விரட்டுவது
    என்று புரியாமல் நொடிப்பொழுது குழம்பி,

    அம்மா அறிமுகப்படுத்திய அம்மனைக் கொஞ்சமும்,
    பள்ளியில் பரிட்சயமான
    பரலோகத்திலிருக்கும் பரமபிதாவைக் கொஞ்சமும்
    எதற்கும் இருக்கட்டுமென்று அல்லாவையும் கொஞ்சம்
    அவசரமாய்த் துணைக்கழைத்தபடி
    கண் இறுக்கி, காது பொத்தி,
    கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம்
    காற்றுக்கு வந்துவிடும் உற்சாகம்!

    புழுதிகிளப்பியபடி, குப்பைகளால் கும்மியடிக்க,
    வெக்கை தணிக்கும் வேகம் கொண்டதுபோல்
    பனைமரம் யாவும் பக்கமிருக்கும் பழுத்த ஓலைகளால்
    பலத்த சத்தத்துடன் விசிறிக்கொள்ள,

    விழுந்தடித்துக்கொண்டு ஓடும் வேகத்தில்
    கருவேலமோ, நெருஞ்சியோ
    பாதம் கிழிக்கும் சுரணையுமற்று
    வீடு வந்து சேர்ந்து,
    விட்டிருந்த மூச்சைத் திரும்பப் பெற்றதொரு காலம்.

    வாழ்க்கைப்பட்டு வேற்றூர் புகுந்து,
    வாழ்க்கைப்பள்ளியில் வருடம் சில கழிந்து,
    அச்சங்களின் ஆணிவேர்
    அசைக்கப்பட்டுவிட்டிருந்தத் தருணமொன்றில்...
    பரவசம் எதிர்நோக்க,
    பனைமரத்திடல் கடந்தபோது பகீரென்றது!

    மரங்களற்ற திடல் மயான அமைதி கொண்டிருக்க,
    தகரப் பலகையொன்று தனித்து நின்றிருந்தது,
    அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்
    அவசர வருகை சுட்டி!

    மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
    பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    கீதம் நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்கு இந்த கவிதை ஒரு மேலான உதாரணம். கவிதையின் வரிகள் அமைப்பு பிரமாதம், இக்கவிதையில் நான் கண்டேன் ஒரு பிரமிப்பு, பரபரப்பு, படபடப்பு, திகைப்பு, விறுவிறுப்பு,ஆர்பரிப்பு. உங்களுக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள், இதுபோன்ற அரிய படைப்பை தொடர்ந்து தாருங்கள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வேற வழியில்லை... நாம்தான் பேயை உருவாக்கவேண்டும்!! நம் வீட்டருகே. (வீட்டிலேயே இருந்தால் தேவையில்லை )
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    அடுக்குமாடி கட்டிடத்தில் குடிபுகுந்த அந்தப் பேய்கள் மனிதர்களைப் பார்த்து அலறுமோ....? பொறுத்திருந்து பார்க்கலாம் !

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மொட்டை வெயிலில் உச்சிப்பனையில்
    பெட்டை பெடிகளை பயங்காட்டிய பேய்கள்
    அகத்துக்கு இடம் மாற்றப்பட்டன
    பற்பல பெயர்கள் சூட்டப்பட்டு..

    அதனால் தான்,
    பனைமரங்கள் காணாமல் போய் விட்டன.
    சீமெந்துக் காடுகள் பெருகிவிட்டன..

    வளம் பற்றிச் சொல்லும் கவி
    வளம் குன்றா மணி.

  6. #6
    புதியவர்
    Join Date
    26 Sep 2012
    Location
    மதுரை
    Age
    42
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    9,849
    Downloads
    6
    Uploads
    0
    //பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ? //

    அட்டகாசமான கேள்வி.

    குருவிகளும் காடைகளும் மயில்களும் கீச்சான்களும் இருவாசிகளும் பறந்து திரிந்த அகண்ட தமிழ் நிலத்தில், இன்று காக்கைகளும் பேரிரைச்சல் எழுப்பும் புறாக்கூட்டங்களுமே காணக் கிடைக்கின்றன. பேய்களைக் கூட பார்க்க முடியும். பறவைகளை காண முடிவதில்லை.

    மரக்கொலை உயிர்க்கொலை. இனியாவது மாற வேண்டும் நம் எண்ணமும் செயல்களும்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கவிதைக்கு கருவும், வடிவமும் மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் நீங்கள் எடுத்துக்கொண்ட கருவும் நன்று; அந்தக் கருவை வார்த்தைகளால் வடித்த விதமும் நன்று. பாராட்டுக்கள்.
    இதுபோன்று பேய் நடமாடும் இடங்களைக் கடக்கும்போது துணையுடன் செல்வது நன்று; அந்தத் துணை மனைவியாக இருந்தால் எந்தப் பேயும் அருகில் அண்டாது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by A Thainis View Post
    கீதம் நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்கு இந்த கவிதை ஒரு மேலான உதாரணம். கவிதையின் வரிகள் அமைப்பு பிரமாதம், இக்கவிதையில் நான் கண்டேன் ஒரு பிரமிப்பு, பரபரப்பு, படபடப்பு, திகைப்பு, விறுவிறுப்பு,ஆர்பரிப்பு. உங்களுக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள், இதுபோன்ற அரிய படைப்பை தொடர்ந்து தாருங்கள்.
    ஊக்கமளிக்கும் பாராட்டுக்கு மிகுந்த நன்றி தைனிஸ்.

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    வேற வழியில்லை... நாம்தான் பேயை உருவாக்கவேண்டும்!! நம் வீட்டருகே. (வீட்டிலேயே இருந்தால் தேவையில்லை )
    ஜகதீசன் ஐயா சொல்லியிருப்பதைப் பாருங்கள். விரைவில் உங்கள் வீட்டிலும் ஒரு பேய் குடிபுக என் வாழ்த்துக்கள்.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஜானகி View Post
    அடுக்குமாடி கட்டிடத்தில் குடிபுகுந்த அந்தப் பேய்கள் மனிதர்களைப் பார்த்து அலறுமோ....? பொறுத்திருந்து பார்க்கலாம் !
    ரசனையானப் பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அம்மா.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    மொட்டை வெயிலில் உச்சிப்பனையில்
    பெட்டை பெடிகளை பயங்காட்டிய பேய்கள்
    அகத்துக்கு இடம் மாற்றப்பட்டன
    பற்பல பெயர்கள் சூட்டப்பட்டு..

    அதனால் தான்,
    பனைமரங்கள் காணாமல் போய் விட்டன.
    சீமெந்துக் காடுகள் பெருகிவிட்டன..

    வளம் பற்றிச் சொல்லும் கவி
    வளம் குன்றா மணி.
    அமரப் பின்னூட்டம் கண்டு அகத்தில் மின்னோட்டம். நன்றி அமரன்.

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ராஜண்ணா View Post
    //பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ? //

    அட்டகாசமான கேள்வி.

    குருவிகளும் காடைகளும் மயில்களும் கீச்சான்களும் இருவாசிகளும் பறந்து திரிந்த அகண்ட தமிழ் நிலத்தில், இன்று காக்கைகளும் பேரிரைச்சல் எழுப்பும் புறாக்கூட்டங்களுமே காணக் கிடைக்கின்றன. பேய்களைக் கூட பார்க்க முடியும். பறவைகளை காண முடிவதில்லை.

    மரக்கொலை உயிர்க்கொலை. இனியாவது மாற வேண்டும் நம் எண்ணமும் செயல்களும்.
    இயற்கைப் பிரியரான தங்கள் கருத்தாழமிக்கப் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். மனமார்ந்த நன்றி ராஜண்ணா.

  13. Likes ராஜண்ணா liked this post
Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •