வணக்கம் நண்பர்களே!
நான் மதுரைக்காரன். தாய்மொழி தெலுங்காக இருப்பினும், அதை எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது.
எனக்கு பேசவும், எழுதவும், படிக்கவும், ரசிக்கவும் தெரிந்த ஒரே மொழி தமிழ் தான்.
உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.
படிப்பினால் நான் ஒரு பல் மருத்துவன். எனக்கு பாம்புகள், பறவைகள், ஓடைகள், மலைகள், மனிதர்கள், குழந்தைகள் பிடிக்கும்.
பொறாமை, மதம், சாதி, தனித்தாக்குதல்கள் பிடிக்காது.
அனைவரும் சமம் என்னும் கோட்பாடு உள்ளுர புதைந்து வேர் விட்டு வளர்ந்து கிடக்கிறது. வாய்ப்புக்கு நன்றி.
அன்புடன்,
ராஜண்ணா.
Bookmarks