தமிழ்மன்றம் நடத்தும் கதைப்போட்டி 06
அன்பு உறவுகளுக்கு,
தமிழ்மன்றம் தனது பத்தாவது ஆண்டில் வெற்றிநடை போடுவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. மன்ற உறவுகள் உற்சாகத்தோடு பங்குகொள்ள பல போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது கவிதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அடுத்தாக இதோ இப்போது கதைப்போட்டி.
மன்றத்தின் கதாசிரியர்கள் அனைவரும் வீறுகொண்டு தயாராகுங்கள். வெற்றி வாகை சூடுபவருக்கு தக்க சன்மானங்கள் வழங்கப்படும்.
விதிமுறைகள்:
1. போட்டிக்கு அனுப்பப்படும் கதைகள் "சிறுகதை"யாக இருத்தல் நலம்.
2. கதைக்காக கரு மற்றும் தலைப்பு கதாசிரியர் விருப்பத்திற்கு
3. கதைகள் வேறெங்கும் பதியப்படாததாக இருக்க வேண்டும். அப்படி இருப்பின் போட்டியிலிருந்து நீக்கப்படும்
4. கண்டிப்பாக ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.
5. மன்றத்தின் உறுப்பினர் மட்டுமே பங்கேற்க முடியும்.
கதை வந்து சேர வேண்டிய இறுதி நாள் - 20.10.2012
எப்போதும் போல் மன்ற உறவுகளே இப்போட்டிக்கும் நடுவர்கள். வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் வாகையாளர்களுக்கு பணப்பரிசோ அல்லது பெறுமதிமிக்க புத்தகங்களோ வழங்கப்படும்
போட்டிக்கான கதையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tmantrampottigal@gmail.com . MS-Word கோப்பாகவோ, pdf கோப்பாகவோ இணைத்து அனுப்புங்கள்.
கதைகளை அனுப்பும் போது, தமிழ்மன்றத்தின் கதைப்போட்டி 06 - (உங்கள் பெயர்) எனத் தலைப்பிட்டு அனுப்புங்கள்.
பரிசுகள்
முதற்பரிசு - இந்தியரூபாய்கள் 2500
இரண்டாம் பரிசு - இந்தியரூபாய்கள் 1500
மூன்றாம் பரிசு - இந்தியரூபாய்கள் 500
பரிசுகள் மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் வழங்கப்பட்டும்.
Bookmarks