சிலகாலங்களாக மன்றத்தில் உலவும் போது என்னுள் எழுந்த தோன்றிய எண்ணங்களின் தொகுப்பினை இங்கே பதிக்கிறேன் தவறெனில் மன்னிக்க
௧.செவ்வந்தி மன்றத்தில் கவிதைகள் ,பாடல்கள் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கிறது இதன் காரணமாக மன்ற உறுப்பினர் களின் கவிதைகள் கவனிக்க படாமல் பின் தங்கி விடுகின்றன.மேலும் காதல் களஞ்சியம் மற்றும் காதல் கவிதைகள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றினை ஒரு தனிபிரிவாக்கி இந்த தொகுப்புகள் ஒவ்வொன்றினையும் தனிதொகுப்பாக மாற்றலாமே ....
௨.இன்று மன்றத்தில் சொந்த படைப்புகளை விட நகலெடுக்கும் பதிப்புகள் அதிகம் உலவுவதாக எண்ண தோன்றுகிறது ..ஒவ்வொரு பிரிவிலும் சொந்த பதிப்புகள் மற்றும் நகல் பதிப்புகள் இரண்டிற்கும் தனித்தனியே ஒரு பிரிவினை உருவாக்குவது நல்லது என தோன்றுகிறது ...இந்த மாற்றம் மன்ற உறவுகளின் சொந்த படைப்புகளை ஊக்குவிப்பது போல் இருக்கும் .. இது நடைமுறையில் சாத்திய படுவது மிகவும் சிரமம் இருப்பினும் இதை தவிர்க்க விதியில் கூறிய படி தொகுப்புகள் பெறப்படும் தளத்திற்கு மற்றும் புத்தகங்களுக்கு நன்றி தெரிவிக்க படவேண்டும் இதனை சரிவர பின்பற்றாமல் தன சொந்த பதிப்புகள் போல் பதிவிடுவது கண்டறியபட்டால் அவ்வாறு பதிவிட படும் பதிவுகளை எச்சரித்து நீக்கலாமே ..
௩.இன்று பதிவுகள் வெளியிடுவது எளிது அதேநேரம் பதிவுகளை ஊக்குவிக்கும் பின்னூட்டங்கள் எங்கோ தொலைதூரத்தில் இருந்து கைதட்டுவது நின்று கைதட்டிவிட்டு காணாமல் செல்லும் நிலையினை கொஞ்சம் மாற்றலாமே .சொந்த படைப்புகளுக்கு இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகள் மூலம் ஊக்கமூட்டலாமே ...இதற்க்கேனும் இம்மாத மன்ற சுடர் என்று ஏதேனும் பட்டம் கொடுக்கலாம்..இதன் மூலம் ஊக்குவிப்பவர்கள் எண்ணிக்கை பெருகும் ..
௪.ஒவ்வொரு படைப்பிலும் விருப்ப தேர்வினை(like this post ) தவிர்த்து பின்னூட்டங்களின் மூலம் ஊக்குவிக்கலாமே...சொந்த பதிவுகள் வெளியிட படும் போது கவிதைகளோ கதைகளோ கட்டுரைகளோ படித்து பிடிக்க வில்லை என்றாலும் எதனால் பிடிக்கவில்லை என்ன தவறு என்று தவறினை திருத்தி தம்முள் மாற்ற ஒருவனாக நினைக்கும் எண்ணம் மாறி வருகிறது இதை மாற்றி பின்னூட்டங்கள் மூலம் தவறினை சுட்டி காட்டலாமே ...
௫.பணிப்பளுவில் இருந்து மீண்டு வந்து பதிவிடும் ஒரு சில உறவுகளை தவிர பல மன்ற முன்னோடிகளின் பின்னூட்டம் மூலம் அளிக்க படும் பின்னூட்ட பங்களிப்பு புதியவர்களின் படைப்புகளுக்கு கிடைப்பதில்லை இதனை மாற்றலாமே ..
௬..மனங்கவர் பதிவருக்கான ஒட்டெடுப்பினை அவர்களின் சொந்த படைப்புகளின் அடிப்படையில் தரப்படுத்தி மறைமுக ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கலாமே ..இதன் மூலம் மன்ற உறவுகளின் பகைப்பினை தவிர்க்கலாமே ...
Bookmarks