ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை
மன்ற உறவுகளுக்கு வணக்கம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சென்ற ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மன்றத்தின் மனங்கவர் பதிவராக சிவா.ஜி அண்ணா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நம் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்வோம்.
ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மனங்கவர் பதிவருக்கான பரிந்துரையை வரவேற்கிறோம்.
போட்டி என்றாலே வெற்றி தோல்வி பிரதானமாகிவிடுகிறது. அதனால் மனங்கவர் பதிவர் போட்டி என்பதை இனி மனங்கவர் பதிவர் தேர்தல் என்றே குறிப்பிடுவோம். இத்தேர்தல் பற்றியக் கருத்துக்களை முன்வைத்த உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இம்முறை விதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆலோசனை வழங்கிய உறவுகளுக்கு நன்றி.
ஒவ்வொரு காலாண்டுக்கும், அதாவது மூன்று மாதங்களுக்கொருமுறை நடைபெறும் மனங்கவர் பதிவர் வாக்களிப்பில் பெரும்பான்மை வாக்குகள் பெறும் ஒவ்வொரு பதிவருக்கும் மனங்கவர் பதிவர் என்னும் சுழல்முறைப் பதக்கம் வழங்கப்படுவதை அறிவீர்கள். அவ்வாறு ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பதிவர்களையும் தெரிவு செய்து அந்த வருட இறுதியில் மற்றுமொரு வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். அதில் பெரும்பான்மை பெறுபவர்க்கு அந்த வருடத்தின் நட்சத்திரம் என்ற நிரந்தரப் பதக்கம் வழங்கப்படும்.
பரிந்துரைக்கான விதிமுறைகள்;
1. ஒரு காலாண்டில் மனங்கவர் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அதன்மூலம் நட்சத்திரப் பதிவருக்கானப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுகிறார். எனவே அவரை அடுத்தக் காலாண்டுகளில் பரிந்துரைப்பது அவசியமற்றதாகிறது. அதனால் அவரைத் தவிர்த்துப் பிற உறுப்பினர்களைப் பரிந்துரைப்பது நல்லது.
2. ஒருவர் ஒரு பதிவரை மட்டுமே பரிந்துரை செய்யலாம். அவர்கள் நிர்வாகத்தைச் சாராதவராக இருத்தல் அவசியம். மேலும், பரிந்துரைகள், பதிவர்களின் மீதான விருப்பு,வெறுப்பு இவற்றின் அடிப்படையில் அல்லாது, அவர்கள் இட்டப் பதிவுகளின் தரத்தின் அடிப்படையில் அமைவது வரவேற்கத்தக்கது.
3. இன்றிலிருந்து வருகிற 26 ஆம் தேதிக்குள் உங்களுடைய மனங்கவர் பதிவரை முன்மொழிந்து தேர்தலுக்கான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Bookmarks