Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: பகவத்கீதை அநுபவம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0

    பகவத்கீதை அநுபவம்

    சமீபத்தில் நான் படித்த ' திருக்கண்ணனமுது ' என்ற புத்தகம்திரு. எஸ். ரகுவீரன் அவர்களது பகவத் கீதை அநுபவமாக உள்ளது.
    பகவத் கீதை என்றாலே ஏதோ புரியாத புதிர் என்று நினைத்திருந்த எனக்கு இவரது புத்தகம், மிகவும் எளிய முறையில் கீதையில் புதைந்து கிடக்கும் வாழ்வியல் உண்மைகளை எடுத்துரைத்தது.
    நான் படித்து அநுபவித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன்....நீங்கள் விரும்பினால்..
    .
    எண்ணங்களுக்கு எட்டாதவன் இறைவன். ஆனந்தமானவன், அறிவொளியானவன், அவனது விளையாட்டினை அறிவது கடினம்.அன்பால், அரவணைப்பால், கண்ணன் நமக்குத் தந்த ஞானப்பால் தான் கீதை.

    விஷாதயோகம்
    ...... 1.கலக்க இருள்

    இருபுறமும் சேனைகள் அணிவகுத்துத் தயாராய் இருக்கும் போர்க்களம்...அதில் தேரோட்டியாக கண்ணன் அமர்ந்திருக்க, கம்பீரமான தேரில் அர்ச்சுனன்...சண்டை தொடங்கவேண்டிய நேரத்தில் அர்ச்சுனன், கலக்கமடைகிறான் !

    பெரிய வீரன், தீரன், உள்ளத்திண்மையன், போர்த்திண்மை கொண்டவன்....கலங்குகிறான்...மனம் தளர்ந்து, உடல் சோர்ந்து, காண்டீபம் விழ, கண்ணன் காலடியில் வீழ்கிறான் ! உலகமே அவன் காலடியில் இருக்க, அவன் ஏன் கலங்குகிறான் ?...இப்படித்தான் தொடங்குகிறது 'பகவத் கீதை '

    இருகைகளாலும் வில்லாற்றல் காட்டவல்ல வல்லவன், வெள்ளை மனத்தவன், அநுமனைத் தேர்க்கொடியில் அணியாகக் கொண்டவன்...அர்ச்சுனன், போர்க்களத்தில் இருபுறமும் அணிவகுத்து நின்றவர்களை வீரர்களாகப் பார்க்காமல், உறவினர்களாகப் பார்க்கிறான்....
    கற்பனைக் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிக் கொண்டான்...கண்ணனை மறந்தான்..போரில் உற்றார், உறவினர்களைக் கொன்றபின் ஏற்படும் துயரத்தை மிகைப் படுத்திக் கொள்கிறான்..பெருந்துன்பம் கொண்டு, மாவீரன் பெருங்கோழையாகி கண்ணன் காலடியில் வீழ்ந்து புலம்புகிறான்.

    ' என் இனிய உறவுகளை அழித்தபின் வரும் இன்பத்தைவிட துறவே இனியது..எதிரிகள் வென்றாலும் கவலையில்லை..' என மோகவலையில் ஆழ்ந்து தன்னையே இழந்தான் விசயன் !
    அர்ச்சுனனுக்கு கலக்கம் உண்டாகக் காரணம் என்ன ? தளர்ச்சி, சோர்வு, அறியாமை, சோகம்...இவைகளால் அவனது அறிவு தெளிவில்லாமல் போகிறது !

    அவனது துயரம் அவனது தன்முனைப்பை அழித்துவிட்டது.யோகம் பெறுவதற்குரிய பக்குவத்தை அளித்துவிட்டது. குழந்தை போலானான்.

    அப்போது, தாயைப் போல கீதையெனும் ஞானப் பாலூட்ட வருகிறான் கண்ணன்.
    ஞானப்பால்...கீதை
    ஞானாசிரியன்...கண்ணன்
    ஞானகுரு...வியாசன்.
    ஞானக்கண்ணால் காண்கிறான் சஞ்சயன்...அஞ்ஞானம் தொலைகிறது.நமக்கும் தான்..

    நன்றி : ரகுவீரபட்டாச்சாரியர்
    Last edited by ஜானகி; 12-09-2012 at 05:46 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அருமையான விடயம், தொடருங்கள் அம்மா பிந்தொடர காத்திருக்கிறோம்
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    எனக்கு பிடித்த பகிர்வு..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    கீதையின் இரண்டாவது அத்தியாயம் ஸாங்கிய யோகம்....... 2. ஞான ஒளி

    மிகவும் கலங்கி, வேறு வழியின்றித் தவிக்கும் அர்ச்சுனனுக்கு கீதாசார்யன் வழங்கும் அற்புதமான அறிவுரை.

    ' ஓ ! அர்ஜுனா, உன் துயரம் நியாயம் அற்றது.போர்க்களத்தில் வெற்றி, தோல்வி சகஜம்.மரணம் என்பது ஒரு நியதி...உடல் தான் மரணமடையும், ஆன்மா அழியாதது.'..என்கிறான் கண்ணன்.

    இல்வாழ்க்கையில், வினைப் பயன்களுக்கு ஏற்ப மக்கள் வாழ்ந்து மடிகிறார்கள்.இளமை, மூப்பு போல, இறப்பும் நிச்சயமானது.

    மரணம் என்பது உடலை விடுதலே...ஆன்மா என்றும் இருப்பது! மரணத்திற்குப்பின் ஆன்மா புதிய உடலைப் பெறுகிறது.

    உடலும் ஆன்மாவும் இணைந்திருக்கும்போது, அதற்கென ஒரு தர்மம், கடமை இருக்கிறது.

    உடலே ஆன்மா எனவும் உடலே உண்மை எனவும் எண்ணுவதே நம் வீழ்ச்சிக்குக் காரணம்.

    இயல்பாக அமையும் செயற்பாடே...சுதர்மமே.. இன்பமானது.

    மோகமெனும் ஆசைத்திரைக்குள் இயல்பான அற உணர்வு மறந்துள்ளது. மோகத்தைக் கொன்றுவிடவேண்டும்.

    நிலையற்ற உடலுக்காகவும், நிலையான ஆன்மாவிற்காகவும் கவலைப்பட்டு அழக்கூடாது...பணி செய்வதுதான்..செயல் ஒன்றுதான் நமக்கு முன் உள்ள கடமை.

    அந்த செயல்கூட, எதையும் எதிர்பாரததாக, பயன் கருதாததாக இருக்கவேண்டும்.

    சூரியன் ஒளிர்கிறான், சந்திரன் குளிர்விக்கிறான், செடிகள் பூக்கின்றன, மரங்கள் கனி கொடுக்கின்றன...அவ்வாறே என் கடன் பணி செய்து கிடப்பதே...

    இதில் கிடப்பது என்பது முக்கியம்! பலன் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கடமையைத் தொடரவேண்டும்.

    முயற்சியும், ஞானமும் கூடினால் இன்பம்தான் !

    உடல் ஆன்மாவிற்காக என எண்ணும் வரை வாழ்வு சிறக்கும், உடலுக்காகவே வாழும்போது இழிநிலையே மிஞ்சும்.

    இக்கரையிலிருந்து அக்கரை செல்ல உதவும் படகு போல, ஆன்ம யாத்திரைக்கூடல் உதவுகிறது என உணர்ந்தால், மரண பயம் அகலும்.

    நிச்சயமற்ற பலனுக்காக, நித்தியமான கடமையைத் தவிர்க்காதே என்பது கன்ணன் உபதேசம்.

    நன்றி : ரகுவீரபட்டாச்சாரியர்
    Last edited by ஜானகி; 12-09-2012 at 05:47 AM.

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
    எது நடக்க இருக்கிறதோ,
    அதுவும் நன்றாகவே நடக்கும்
    உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
    எதை நீ எடுத்து கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ
    அது நாளை மற்றொருவருடையதாகிறது
    மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.


    கீதை என்றாலே மேலே குறிப்பிட்டுள்ள கீதாசாரம்தான் நினைவுக்கு வரும். அதைத் தவிர கீதை பற்றி வேறேதும் தெரியாது. கீதை பற்றிய தெளிவான சிந்தனையைப் பகிர முன்வந்துள்ள தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகளும் நன்றியும். இனிதே தொடருங்கள். அறிந்துகொள்கிறோம்.

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நிச்சயமற்ற பலனுக்காக, நித்தியமான கடமையைத் தவிர்க்காதே என்பது கன்ணன் உபதேசம்
    சத்தியமான உண்மை. கீதை பற்றி அறிய தருவதற்கு நன்றிம்மா. தொடருங்கள்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    பகவத் கீதையைப்பற்றி அறிந்துகொள்ள மேலும் ஒரு வாய்ப்பு. நன்றி ஜானகி அவர்களே.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ஸாங்கிய யோகம் -

    கண்ணன் கீதையை எடுத்தவுடன் உபதேசித்துவிடவில்லை

    அர்ஜுனனுக்கு உபதேசிக்கும் முன் தன் மாமனாகிய கம்ஸனை கண்ணன் கொல்கிறான், அதாவது ஒரு உபதேசத்தை செய்யும் முன் இறைவனாகவே இருந்தாலும், அவன் முதலில் தன்னை அந்த உபதேசத்தை உரைக்கும் நிலைக்கு தகுதிப்படுத்திக் கொள்கிறான்

    பகவத் கீதையில் இன்னொரு அழகான விடயம் என்ன வென்றால், கண்ணன் ஒவ்வொரு உபதேசத்தயும் சொல்லி முடித்தப் பின், நான் சொல்லவது சரியா என்று நீயே ஆராய்ந்து அதற்குபின் முடிவெடு என்பான்

    நான் சொல்வதை நீ செய் என்று அவன் கட்டளையிடவே இல்லை

    நாம் முதலில் அந்த மேன்மையை அவனிடம் இருந்து கற்க வேண்டும், அது மிகக்கடினமான ஒன்று

    இந்த கருத்தை நினைக்கும் போதெல்லாம், இறைவன் ஆங்காரமற்றவனாகவே இருக்கிறான் என்பது மனதில் நிற்கும்

    பகிர்வுக்கு நன்றிங்க அம்மா

    Last edited by ஆதி; 10-09-2012 at 12:04 PM.
    அன்புடன் ஆதி



  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    3. செயல் ஒளி

    ஞானத்தைக் கர்மத்தினால்தான் அடையமுடியும்.கர்மம் யோகமாவதுதான் சிறப்பு.

    இயக்கமே வாழ்வு.செடி கொடிகள், கடலலைகள்,காற்று,சூரியன்,சந்திரன், விண்மீன்கள்...என எல்லாமே ஓயாமல் இயங்குகின்றன.

    இரத்தஓட்டம், இதயத்துடிப்பு, சீரணம்...என எல்லாம் தடையில்லாது நடைபெறவேண்டும்.

    மழைக்காலம், குளிர்காலம், கோடைக்காலம்...எனக் காலச் சுழற்சி தொடரவேண்டும்.

    மனித மனமும் இடைவிடாது இயங்கிக்கொண்டே இருக்கிறது.கர்மமே உலக இரகசியம்.

    மனிதனே ! நீ தொழில் செய்...பற்றற்றுத் தொழில் செய் !

    ஒரு பெண், வீட்டிலே தன் குடும்பத்திற்காகச் சமைக்கிறாள்...அது வேலை.

    ஒரு பெண் ஒரு உணவு விடுதியில் வருமானத்திற்காக சமைக்கிறாள்....அது தொழில்.

    ஒரு பெண் சத்திரத்தில், அன்னதானத்திற்காக சமைக்கிறாள்..வருமானம் எதிர்பார்க்காமல்...அதுசேவை.

    மூன்றாவது பெண்ணின் செயல் கர்மயோகமாகிறது.

    அவ்வாறு சமுதாயத்திலும் ஒரு மனிதன், பலனை நினைக்காமல் செயலைச் செய்தால் அவன் கர்மயோகியாவான்.

    கூலியாள் பாரம் சுமக்கிறான்...இயாசுவும் சிலுவை சுமந்தார்!

    ஏழை தாக்கப்படுகிறான்...நபிகள் கல்லடி பட்டார்...ஆனால் இவைகளின் பிண்ணனி என்ன? ஆராய்ந்து தெளியவேண்டும்.

    தொழில் தெய்வீகமாகவேண்டும்..ஜனகர் காட்டிய கர்மயோகம் அதுதான்.

    அழுகை இசையாவது திரைப்படங்களிலே...சிலை தெய்வமாவது கோவில்களிலே...கர்மம் யோகமாகவேண்டும் அன்றாட வாழ்விலே.

    கர்மயோகிக்கு எல்லா செயல்களுமே இறை அநுபவமாகும்..பக்தியுடன் பயன் எதிர்பாராத கடமையாகும்.

    எல்லா செயல்களுக்கும் அடிப்படைவெறுப்பினாலோ, அச்சத்தினாலோ ஒருவன் தன் தொழிலை விட்டுவிடக்கூடாது. செய்யும் தொழிலால் கிடைக்கப்போகும் பலனைப் பற்றிய சிந்தனையுடனேயே தொழில் செய்யக்கூடாது.

    மனதைப் பக்குவப்படுத்துவதே வாழ்வின் பயன்.புலனடக்கம், தூய மனம், தேர்ந்த நல்லறிவு...இவைகளால் கர்மயோகம் கைகூடும்.

    சத்வகுண ஆசை...தீயை மூடிய புகை...சிறிது விவேகம் வந்தால் புகை விலகும்

    ரஜோகுணாஅசை...கண்ணாடி மேலுள்ள அழுக்கு...சிறிது முயற்சி செய்யவேண்டும்.

    தமோகுண ஆசை...சிசுவை மூடியிருக்கும் கருப்பை....காலமும், ஆயத்தமும் தேவை...சிசுவை வெளிக்கொணர.

    வாழ்க்கை வேள்வியாகவேண்டும், செயல்கள் அனைத்தும் மேன்மையாகவேண்டும்.

    காரியம் வெறும் செயல்...கர்மம் அதனுடன் ஒட்டப்படும் பசை.

    நைப்பு, மனோபாவம், கனிவு ஆகியவை செயலை...கர்மத்தை யோகமாக்கும்.

    தாயின் செயல்கள் கர்மயோகமாகும்.

    ஞானத் தேரை இழுக்க, கர்மயோகம் எனும் கயிறு தேவை !
    Last edited by ஜானகி; 12-09-2012 at 05:48 AM.

  10. Likes மதி liked this post
  11. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நல்லதொரு பகிர்வு... தொடருங்கள் அம்மா..!!

    பாரதியின் நினைவுதினமான இன்று கர்மயோகத்தை பற்றிய தங்கள் பதிவு எமக்கு அவரது இந்த வரிகளை நினைவூட்டுகின்றன..!!

    ஊருக்குழைத்திடல் யோகம், நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
    போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இலாத அமைதி மெய்ஞானம்
    பக்கத்திருப்பவர் துன்பம் தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
    ஒக்கத் திருந்தி உலகோர் நலம் ஊற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    4. செயலும் செயலின்மையும்

    இவ்வத்தியாயம் ஞானத் திறவுகோல்.

    கண்ணன் அர்ச்சுனனுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.நல்லவர்களைக் காக்க, கொடியவர்களை அழிக்க, அறநெறியைக் காக்க, தான் காலங்கள் தோறும் அவதரிப்பதாகக் கூறுகிறான்.

    கர்மம் என்பது சுதர்மம் ஆகும், அதாவது ஒருவன் ஏற்றுக்கொண்ட இயல்பான தொழில் ஆகும்.

    விகர்மம் என்பது அத்தொழிலுக்கிணந்த மன உணர்வு.

    கர்மமும் விகர்மமும் இணையும்போது அகர்மமாகிறது...செயலில் செயலின்மையும், செயலின்மையில் செயலும் அமையவேண்டும்.

    கீதா ரதத்தைக் கவனியுங்கள்.....கண்ணன் ஒருகையில் குதிரைகளின் கடிவாளம், மறுகையால் அர்ச்சுனனுக்கு உபதேசம்.

    செயல் செய்வதாகக் காட்டப்படும் கண்ணன் செயலற்று அமைதியாக இருக்கிறான்....செயலிழந்து, வில்லிழந்து காணப்படும் அர்ச்சுனன் குழப்பமைந்து புயல்வீசும் மனதுடன் இருக்கிறான்...

    இதுதான் கீதை தத்துவம்...செயலிலே செயலின்மை, செயலின்மையில் செயல்!


    கர்மம் எனும் இயல்பான செயல் மன இணக்கத்துடன் இணைந்து விகர்மமாகியபின் அகர்மமாகும்...அதுவே ஞானநிலை. கர்மத்தின் பயன் ஞானமாதல்.

    பலகாலமாக ஒரு செயலைச் செய்யும்போது அது பழக்கமாகிவிடுகிறது, செயல் திறன் வருகிறது. செயல்திறன் அதிகமாக, மன உணர்வு மிக வேண்டும்.

    உடலும் உள்ளமும் ஒருங்கே செயலாற்றவேண்டும். உடலுக்குத் தவம், உள்ளத்திற்கு ஜபம்...இரண்டும் இணையும்போது செயல்பளு லேசாகும்...செயலின்மை தோன்றும்.

    விளக்கு ஒளிர, திரியுடன் தீயும் வேண்டும்..பலன் கருதாமை எனும் சுடர்பெற, கர்மம், விகர்மம் இணந்து அகர்மம் ஆகவேண்டும்.

    பல்பிடுங்கப்பட்ட பாம்புடன் பாம்பாட்டி பயமின்றிப் பழகுவதுபோல, செயலின்மையில் செயலையும், செயலில் செயலின்மையும் காணப் பழகிக் கொண்டால், வாழ்க்கை இனிக்கும்.

    எனவே, செயலைச் செய்யவேண்டும்..செயலின் விளைவினை மறக்கவேண்டும்.
    செயல் இயல்பானதாக வேண்டும், செயலிலேயே லயிக்கவேண்டும்.

    புறச் செயல் அக உணர்வோடு இணையும்போது, செயலின்மை தோன்றும்.
    செயலுக்காகச் செயல் எனும் நிலை கைகூடும்போது வாழ்க்கை ஞான வேள்வியாகும்.

    சகாதேவன் கண்ணனிடம், " கண்ணா, நீ தூது போனால் என்ன, போகாவிட்டால் என்ன, திரௌபதி கூந்தல் முடித்தாலென்ன, அவிழ்த்தாலென்ன, உன் கருத்து எதுவோ அதுவே என் கருத்து " என்று கூறுவான்.

    இதுவே நம் நிலையாக அமையவேண்டும். பயனற்றுப் பணி செய்வதிலும், பற்றற்றுப் பணி செய்யும்போது அது ஞான வாழ்வாகும்.

    வாழ்க்கையில் செயல் என்பதைவிட, செயலே வாழ்க்கையாக வேண்டும்.

    நன்றி : ரகுவீரபட்டாச்சாரியர்
    Last edited by ஜானகி; 12-09-2012 at 05:50 AM.

  13. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    எதிர்பாராதவிதமாக, நேற்று நண்பகலில், கொலுபொம்மை வாங்க என்று திருவல்லிக்கேணி செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.
    பகல் மணி 12.40...கோவிலில் அநேகமாக நடைசாத்திவிடுவார்கள்...என் புண்ணியம்...ஒருநொடி இடைவெளியில் பார்த்தசாரதியின் தரிசனம் கிடைத்தது ! மெய்சிலிர்த்துப்போனேன் !
    பகவத்கீதை பற்றி எழுத முயல்வதற்குக் கிடைத்த பரிசு...என்னுடன் சேர்ந்து அநுபவிப்பவர்களையும் நினைத்துக்கொண்டேன்.
    பாரதியின் நினைவுநாளான நேற்று அவரது நினைவு இல்லாம் வழிசெல்லும் பாக்கியமும் கிடைத்தது...உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

  14. Likes மதி liked this post
Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •