உன் காலை சுற்றி ஒரு ஜீவன்
போகுமிடமெல்லாம் உன் பின்னே
உந்தன் முகத்தில் தேடி தேடி
பொழுது முழுக்க பார்த்து கிடக்குது
ஊரடங்கிய இந்த வேளை - கட்டாந்தரை
முற்றத்து நிலவு பார்வையில்
முடிக்காத பாடங்கள் படிக்க -நீ வருவாய் என
பசியோடும் கரி படிந்த கையோடும்
காய்ந்து போன ரொட்டி துண்டு -ஒரு
கடி கடித்து கனிவோடு கொடுக்கிறாய்
அவசரம் என்பதால் அதற்கு பசியால்
உனக்கு படிப்பாசையால் பசியை அணைத்து
யாருமில்லை கூடவிருக்க -காலடி
நாயை தவிர என அதையும் பார்க்கிறாய்
நானும் பார்க்க தான் முடியுது உன்னை -எந்தன்
வயிறும் பையும் காலியாய் இருப்பதால் .
Bookmarks