காணவில்லை அப்படியொரு
இரவையும்
அப்படியொரு நிலவையும்
அகமகிழ்ந்த அவளையும்
மீண்டும் ...
நீடித்த புன்னகையுடன்
நீண்ட இரவுகள் அவை...
விழிகளை தோய்க்கும் உறக்கம் உதறி
விரும்பி இதயம் தொலைத்த
இரவுகள் அவை...
காயும் நிலவின் நிழலும்..
நீடித்த நிசப்தமும்
வடிந்த தென்றலும்..
அலையடிக்கும் ஆசைகளும்
விழி துடைத்த ஆறுதலும்
உள்ளம் நெகிழ்ந்த பரிமாற்றங்களும்
வெம்பிய வேட்கைகளும்
இளமையின் வேகங்களும்
பொய் கோபங்களும்...
சின்ன சண்டைகளும்
மௌன இரவுகள் முழுதும்
மடை திறப்பதேல்லாம் இளம் இதயத்தின்
உணர்வு போராட்டங்களே..
அந்த இரவுகளில் நிலவோடும்
அவள் நினைவோடும்
பயணித்த களைப்பு
இன்றும் மயங்கி சரியும் சில
இரவுகளின்
கனவுகளில் மங்கிய ஒளிர்கிறது..
செயலிழந்து மூலையில் கிடக்கும்
அலைபேசியை பார்த்தாலும் மனதில்
மந்தகாசம் பரவுகிறது
உறக்கமற்ற சில இரவுகளில்
விழித்திருந்தாலும் விழி மடல்களில்
விழி நீரால் விறிகின்றது
Bookmarks