பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. [91:07]
பொருள்: ஆண்மகன் இயற்கையாகவே நாணுந்தன்மை இல்லாதவன். மேலும் பெண்ணை அடக்கித் தன்வழி நடத்துபவன். ஆனால் தன் தன்மையிழந்து பெண்ணைக் கண்டு அஞ்சி , அவள் ஆணையை மேற்கொண்டு நடத்துபவன் மிகவும் இழிவான நிலையை அடைந்து விடுகிறான். எனவே ஆணாகப் பிறந்தும் , ஆண்தன்மை பெறவில்லை. இத்தகு ஆண்கள் ஆணாகப் பிறப்பதைக் காட்டிலும், பெண்ணாகப் பிறப்பதே சிறப்பானது.
பட உதவி: குறளும் காட்சியும்.
Bookmarks