Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 29 of 29

Thread: திரைப்படப் பாடல்களும் தமிழ் இலக்கியமும்

                  
   
   
  1. #25
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வாயின் சிவப்பு விழியிலே
    மலர்க்கண் வெளுப்பு இதழிலே
    வாயின் சிவப்பு விழியிலே
    மலர்க்கண் வெளுப்பு இதழிலே
    சாயும் நிலவின் மழையிலே
    காலம் நடக்கும் உறவிலே...

    மடி மீது தலை வைத்து
    விடியும் வரை தூங்குவோம்
    மறு நாள் எழுந்து பார்ப்போம்...


    திரைப்படம் எதுவென்று தெரியவில்லை.

    வரிகள் கண்ணதாசன்.

    எடுத்தாண்ட இலக்கியவரிகள்:

    வாயின் சிவப்பை விழிவாங்க
    மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
    தோயக் கலவி அமுதளிப்பீர்
    துங்கக் கபாடம் திறமினோ.


    (கலிங்கத்துப்பரணி )

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    ஆஹா

    திரையிசையில் இலக்கியம் அருமையான அலசல்கள்.ஒவ்வொருவர் பதிவும் ஆச்சரியம் தருகின்றது .

    நானும் என் கைவசம் சில பாடல்களில் தொகுப்பு வைத்திருந்தேன். நேரம் கிடைக்கும் போது தேடி பகிர்கிறேன்..

    கீதம் அக்கா,செல்வா, தயாளன் சார்,ஜெகதீசன் சார், சிவா அண்ணா அமரன் சார் என அனைவருக்கும் நன்றி... இன்னும் தொடருங்கள்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  3. #27
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அருமை கீதம் அக்கா

    அன்னை இல்லம் படத்தில்,கவிஞர் கண்ணதாசன் இயற்றி,கே.வி. மஹாதேவன் இசையமைத்து,டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பாடிய பாடல் இது.




    Quote Originally Posted by கீதம் View Post
    வாயின் சிவப்பு விழியிலே
    மலர்க்கண் வெளுப்பு இதழிலே
    வாயின் சிவப்பு விழியிலே
    மலர்க்கண் வெளுப்பு இதழிலே
    சாயும் நிலவின் மழையிலே
    காலம் நடக்கும் உறவிலே...

    மடி மீது தலை வைத்து
    விடியும் வரை தூங்குவோம்
    மறு நாள் எழுந்து பார்ப்போம்...


    திரைப்படம் எதுவென்று தெரியவில்லை.

    வரிகள் கண்ணதாசன்.

    எடுத்தாண்ட இலக்கியவரிகள்:

    வாயின் சிவப்பை விழிவாங்க
    மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
    தோயக் கலவி அமுதளிப்பீர்
    துங்கக் கபாடம் திறமினோ.


    (கலிங்கத்துப்பரணி )
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அருமை ஐயா.


    கண்ணதாசன் அவர்கள் வரிகளில் வாழ்க்கை படகு எனும்படத்தில் பாடபட்ட அழகிய அர்த்தம் தரும் பாடல் இது.



    நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
    இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
    காணும் வரை நீ எங்கே நான் எங்கே
    கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.

    உன்னை நான் பார்க்கும் போது
    மண்ணை நீ பார்க்கின்றாயே
    விண்ணை நான் பார்க்கும் போது
    என்னை நீ பார்க்கின்றாயே
    நேரிலே பார்த்தால் என்ன
    நிலவென்ன தேய்ந்தா போகும்
    புன்னகை புரிந்தால் என்ன
    பூ முகம் சிவந்தா போகும்

    பாவை உன் முகத்தைக் கண்டேன்
    தாமரை மலரைக் கண்டேன்
    கோவை போல் இதழைக் கண்டேன்
    குங்குமச் சிமிழைக் கண்டேன்
    வந்ததே கனவோ என்று
    வாடினேன் தனியே நின்று
    வண்டு போல் வந்தாய் இன்று
    மயங்கினேன் உன்னைக் கண்டு.


    இனம், மொழி, மதம் கடந்ததம காதல்.. போன நிமிடம் வரை யாரென்று அறியா ஒருவனை பார்த்த நொடியே இவன் என்னுடையவன் என உணரசெய்து அது வரை காலம் பெற்று வளர்த்து, சீராட்டி தாலாட்டிய உறவுகளையே மறக்க வைக்கும் காதல்..

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ் வழி அறிதும்,
    செம் புலப் பெயல் நீர் போல,
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
    -செம்புலப்பெயனீரார்

    என்றோ எழுதியதை நீயாரோ நான் யாரோ ஒருவரையொருவர் யாரென்றும் அறியோம் , ஆனாலும் உன்னை கண்டபின் நானும் நீயும் வேறல்ல என எளிமைபடுத்தி

    நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
    இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
    காணும் வரை நீ எங்கே நான் எங்கே
    கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.

    என்றும்


    "யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால்
    தான் நோக்கி மெல்ல நகும்.என திருவள்ளுவரின் குறளை

    உன்னை நான் பார்க்கும் போது
    மண்ணை நீ பார்க்கின்றாயே
    விண்ணை நான் பார்க்கும் போது
    என்னை நீ பார்க்கின்றாயே
    நேரிலே பார்த்தால் என்ன
    நிலவென்ன தேய்ந்தா போகும்
    புன்னகை புரிந்தால் என்ன
    பூ முகம் சிவந்தா போகும்

    இப்பாடலில் அழகாக புரியும் விதமாக கையாண்டிருப்பது கண்ணதாசன் அவர்களின் பாடல்களில் தெரியும் சிறப்புக்களில் ஒன்றாகும். .



    அருமையான் பாடலொன்றை நினைவூ கூர்ந்து அதன் இலக்கிய தாக்கம் தேடி சங்க கால இலக்கியங்களையும் , குறுந்தொகைபாடல்களையும், கவனித்து கேட்க செய்தமைக்காய் மீண்டும் என நன்றிகள் ஐயா.


    இன்னும் இன்னும் பகிருங்கள்




    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும். (காமத்துப்பால்-குறிப்பறிதல்-1094 )



    இக்கருத்தை உள்ளடக்கிய திரைப்படப் பாடல்


    உன்னை நான் பார்க்கும் போது
    மண்ணை நீ பார்க்கின் றாயே !
    விண்ணை நான் பார்க்கும் போது
    என்னை நீ பார்க்கின் றாயே!
    நேரிலே பார்த்தால் என்ன?
    நிலவென்ன தேய்ந்தா போகும்?
    புன்னகை புரிந்தால் என்ன
    பூமுகம் சிவந்தா போகும்?

    இது கவிஞர் கண்ணதாசன் இயற்றி , P.B. ஸ்ரீனிவாஸ் அவர்களால் பாடப்பட்டது. படம் தெரியவில்லை.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  5. Likes கீதம் liked this post
  6. #29
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
    மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
    நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
    நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
    காலம் மாறினால் காதலும் மாறுமோ...


    படம்: பட்டணத்தில் பூதம்
    வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
    பாடல்: அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

    எடுத்தாளப்பட்ட இலக்கியம்: கலித்தொகை - பாலைக்கலி
    பாடியவர்: புலவர் பெருங்கடுங்கோ.

    பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
    மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்?
    நினையுங்கால் நும்மகள் நுமக்குஆங்கு அனையளே.

  7. Likes kulakkottan liked this post
Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •