வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
சாயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே...
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்...
திரைப்படம் எதுவென்று தெரியவில்லை.
வரிகள் கண்ணதாசன்.
எடுத்தாண்ட இலக்கியவரிகள்:
வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ.
(கலிங்கத்துப்பரணி )
Bookmarks