தமிழ் மன்றத்தில் நான் இணைந்து ஒரு மாத காலம் ஆகிறது !ஆனாலும் நான் என்னை அறிமுகபடுத்தி கொள்ள வில்லை !ஆகவே தற்போது என்னை இந்த மன்றத்தில் அறிமுகம் செய்து கொள்கிறேன் !
எனது பெயர் தர்சாந் .ஈழதேசத்தில் மீன்பாடும் மட்டகளப்பை பிறப்பிடமாயும் சிறு பிராயம் முதல் வந்தாரை வாழவைக்கும் பூமியான தலை நகர் எனத் தானை தமிழர்களால் கூறப்படும் திருகோணமலையில் வளர்ந்தவனும் ஆனா ஒரு 21 வயது சாதாரண மனிதன் ,தமிழன்.
திருகோணமலையை மையமாய் கொண்டு பல குளமும் கோட்டமும் கட்டி ஈழத்தினை ஆண்ட மன்னர் தான் "குளக்கோட்டன் "..இவரை அறியாதவர் அறியவும் ,மறந்தோர் மண்டைகளில் ஏற்றவுமே என் படைப்புகள் போன்ற சந்தர்பத்தில் இந்த பெயரை பயன்படுத்தி வருகிறேன் .
சிறுவதில் அறிவியலின் பார் அளவில்லா தேடலும் ,இலக்கியங்களில் ஒரு தாகமும் கொண்டே என் வாழ்கை நகர்வில் வளர்ந்தேன் !இலத்திரனியல் தொலை தொடர்பு என்ற துறைகளை ஏதும் சாதிக்க வேண்டும் .ஒரு கண்டுபிடிபாளனாய் ஆக வேண்டும் என்ற வெறி கொண்டு வளர்ந்தேன்.ஆனாலும் என் பல்கலைகழக
நுழைவு தேர்வு என் இலட்சியங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு திருப்பத்தை தந்தது !
நிதியியல் -புள்ளிவிவரவியல் துறையை தற்போது ஸ்ரீலங்கா கொழும்பு பல்கலை கழகத்தில் கற்று வருகிறேன் .
கூடவே என்னோடும் என் துயரத்தோடும் வளர்கிறது என் எழுத்துகளும் !
தமிழ் மன்றத்தின் என் நுழைவு என் எழுத்துகளுக்கு பாரிய ஒரு அங்கீகாரத்தை தந்து இருக்கிறது !
என் திரி களுக்கு கருத்தும் ,வாழ்த்தும் தந்த அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் !
என் தவறுகளை திருத்திய அங்கத்தவர்களுக்கு -என் வழிகாட்டிகள் -மிக்க நன்றிய கூறி கொள்கிறேன் !
Bookmarks