Results 1 to 5 of 5

Thread: களவுக்காதல்..

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    களவுக்காதல்..

    களவுக் காதல்...



    கலைத்துப்போட்ட கார்மேகமாய்
    இடை வரையில் தவழ்ந்து கொஞ்சிய
    அவள் கூந்தலில் முகம் புதைத்தேன்...

    என் கரங்கள் அத்துமீறும் போது
    அந்த வெட்கக்கண்கள் வருடிய இடமெலாம்
    சிலிர்த்து உணர்ந்தேன்.

    காதலை எதிர்க்கும் துணிவு அவள் கைகளுக்கில்லை...
    முத்தம் தரத்துடித்த உதடுகள் வெட்கத்திலும் துடித்தன...

    கண்ணீர்த்துளிகள் சற்றே வெளிவர அனுமதிகேட்க
    உயர்ந்து தணிந்த மார்புக்கூட்டுக்குள்
    முக்கித்தவித்த வார்த்தைகள் வெளிவரத்தயங்கின...

    'மாலையிடுவாயா இல்லை காலையில் ஓடிடுவாயா?'

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    களவுக்காதலுக்கு மனம் துணிந்தபின் காதலில் கள்ளம் புகுந்திடுமோவென்று ஐயங்கொண்டு கலங்குவதும் முறையாகுமோ?

    கலங்கிடும் மனதையும் கருத்தால் அறியும் காதலர், அவள் கவலை போக்கி கண்ணீர் துடைப்பாரென்பதை கணித்தலும் வேண்டாமோ?

    களவுக்காதலுக்கே உண்டான கலக்கம் உரைத்தக் கவிதை அருமை கலைவேந்தன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    இது கள்ளக் காதல் போல் தெரியவில்லையே...!!!


    நல்ல காதல் போலன்றோ தெரிகின்றது...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    களவுக்காதலுக்கு மனம் துணிந்தபின் காதலில் கள்ளம் புகுந்திடுமோவென்று ஐயங்கொண்டு கலங்குவதும் முறையாகுமோ?

    கலங்கிடும் மனதையும் கருத்தால் அறியும் காதலர், அவள் கவலை போக்கி கண்ணீர் துடைப்பாரென்பதை கணித்தலும் வேண்டாமோ?

    களவுக்காதலுக்கே உண்டான கலக்கம் உரைத்தக் கவிதை அருமை கலைவேந்தன்.
    அருமையான தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம். இக்கவிதையின் பொருள் சரியில்லையோ அல்லது வேறெதுவும் குறையோ .. நிறையப்பேரை ஈர்க்கவில்லையே என யோசித்தேன். ஆயினும் கவிதை மிகச்சரியே என்பது தங்களின் பின்னூட்டத்தால் தெளிவுகொண்டுவிட்டேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    இது கள்ளக் காதல் போல் தெரியவில்லையே...!!!


    நல்ல காதல் போலன்றோ தெரிகின்றது...!!!
    சங்க இலக்கியத்தில் இந்த களவுக்காதல் பற்றிய பல பாடல்கள் உண்டு ஜெயந்த். இது நல்ல காதல் தான். பெற்றோர்க்கு அறியப்படாமல் நடைபெறும் காதல். கனிந்து பெற்றோர் சம்மதித்தபின் இது சிறந்த தாம்பத்யமாக உருவாகக்கூடியது.

    பாராட்டுக்கு நன்றி நண்பரே..!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •