Results 1 to 4 of 4

Thread: செஞ்சுடர்த் தீ

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர் jayaprakash's Avatar
    Join Date
    28 Jul 2012
    Age
    33
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    10,217
    Downloads
    0
    Uploads
    0

    செஞ்சுடர்த் தீ

    தெரியாமல் கைப்பிடித்து
    இழுத்ததில் உடைந்த*
    வளையல் சொல்லுதடி
    ஆயிரம் கதை

    தூரத்தில் நனவாய்த்
    தெரிந்தது எல்லாம்
    பக்கத்தில் கனவாய்த்
    தெரியுதடி.

    காதலைச் சொல்லவே
    உன்பக்கம் நான் வந்தால்
    கைகாலைக் கட்டிக்
    கழுத்தைப் பிடித்துத்
    தண்ணீரில் முக்கினால்
    திணறும் மூச்சைப்
    போலிருக்குதடி

    தெரியாத் தனமாய்
    என்பக்கம் நீவந்தால்
    செஞ்சுடர்த் தீயும்
    குளிர்வாடைக் காற்றும்
    ஒருசேர முட்டுதடி.

    விளையாட்டுப் பிள்ளையாய்த்
    திரிந்தேனடி
    என்ன வசியம் வைத்தாயோ
    இப்படி உன்
    விளையாட்டுப் பொம்மையாய்
    ஆக்கிவிட்டாய்.

    உனைக் காணும் போதெல்லாம்
    என்னுயிர் என்னுடல் விட்டு
    நடமாட்டம் செய்வதாய்த்
    தோன்றுதடி.

    ஒருவாழ்நாள் அவஸ்தையைத்
    தந்துவிட்டு நீமட்டும்
    மகிழ்ச்சியில் திளைப்பதன்
    பொருளென்ன சொல்லடி.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    காதல் ஜூரம் வந்தால் இந்த ரணங்களும் அவஸ்தைகளும் சகஜம் தானே.. கொஞ்ச காலம் தான் இந்த அவஸ்தையெல்லாம். கவலைப்படாதீங்க.

    அப்புறம் பழகிவிடும்..

    நல்லாருக்குங்க உங்க அவஸ்தை.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. கவிதை.!

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காதலைச் சொல்வதில் துவங்கி வெல்வது வரைக்கும் எத்தனை எத்தனை அவதிகள்!

    வளைக்கரம் உடைத்ததால் உருவான உளைச்சல், வளைக்கரம் பற்றும்வரை தொடரும்.

    காதல் அவஸ்தை சொன்னாலும் கவிதை அழகு. பாராட்டுகள் ஜெயப்ரகாஷ்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    கவிதை எழுதுவதற்க்கு மறுபடியும் காதல் கொள்ளவேண்டும் போல (வீட்டிற்குத் தெரியாமல்தான்!!! )
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •