சுமை என்னை சுருக்கும் போதெலாம் -உன் வார்த்தைகள்
சுக்கு சுக்காய் என் துயர் தொலைததடி
உன்னோடு வரும் தருணங்கள் -ரணமுற்ற
உள்ளம் உயிர் கொள்கிறதடி சகியே
என் பாத சுவடு அருகில் நீ வருகின்றாய் -ஆனாலும்
என் பாதையின் சுளியல்களை சரி செய்கிறாய்
சில நேரம் உன் சொற்கள் தீயாய் சுட்டாலும்
சிலநொடிகளில் - என்வலியை சொல்லாமல் நீ உணர்கிறாயே
கணப்பொழுதில் ஒரு குழப்பம் -அவ்வப்போது
கண்னசைகையில் ஒரு பதில் -உனக்கு நான் யாரென்று
Bookmarks