கவிபாடும் தோழமை நெஞ்சங்களே
தமிழ் புகழ்பாடும் என் அன்பு சொந்தங்களே
தமிழ் மன்றத்தில் இணைந்த இதயங்களே
புதிய சிந்தனை வடித்து - அதை
தேன்தமிழில் தெவிட்டாமல் படைத்தது
பாரெங்கும் வழங்கிடும் வள்ளல்களே
அன்பு அமைதி மகிழ்ச்சியில் புத்துலகம்
அமைத்திட எழுத்தில் ஏற்றம் தரும் - என்
அன்பு நண்பர்களே கவிஞர் பெருமக்களே
உங்களில் ஒருவனாய் அடியேனும் இணைந்து
தமிழ் பணியாற்றிட தமிழ் கவி பாடிட
புது கவிஞனாய் பரிணாமம் எடுக்க
ஆயிரம் ஆசைகள் சிறகடிக்க - உங்கள் ஆ. தைனிஸ்
பாச உறவுகளின் கவி கூடுகள் தேடி வந்துள்ளேன்
கவி மழையில் நனைந்து அருந்தமிழ் அருவியாய் கொட்டி
பசுமை போர்த்திய ஆறாய் கவிச்சிந்தனை விரிந்து
ஆழ்கடல் செந்தமிழில் மூழ்கி நற்கவி முத்தெடுத்து
முத்தமிழ் சாற்றிடும் தாய்த்தமிழுக்கு முடிசூடிட
விரும்பி மகிழ்ந்து விழைகின்றேன் - என்றும்
தமிழ்புகழ் பாடிடவே துடிக்கின்றேன்.
சிறுவயது முதல் தமிழ் மீது தீராத பாசம், பக்தி, மதிப்பு, மரியாதை, ஆச்சரியம், பிரமிப்பு, அகன்ற நீண்ட நெடிய வரலாற்று தமிழ் இலக்கிய உலகில் நானும் சிறுபங்காற்றிட அளப்பரிய ஆசை.
எழுத்தின் மீது தாகம் கொண்டு சில நூறு கவிதைகளையும், சில பத்து கதைகளையும், கட்டுரைகளையும், இரண்டு நூற்களையும் படைத்துள்ளேன்.
ஆங்கில இலக்கியம், மெய்யியல், இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பயிற்சி பெற்றுள்ளேன்.
புதிதாக தமிழ் மன்றத்தில் உங்களோடு இணைந்ததில் மகிழ்ச்சி
தொடர்ந்து தமிழுக்கு தொன்றாற்றுவதில் நெகிழ்ச்சி
உங்களின் தோழமை எனக்கு என்றும் தரும் புத்துணர்ச்சி
தோழமையுடன்
ஆ. தைனிஸ் .
Bookmarks