Results 1 to 3 of 3

Thread: என் சாவிலும் எரியும் தமிழ்ச்சோதி....!

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jul 2012
    Location
    VELLORE
    Age
    37
    Posts
    89
    Post Thanks / Like
    iCash Credits
    12,662
    Downloads
    12
    Uploads
    0

    என் சாவிலும் எரியும் தமிழ்ச்சோதி....!

    வயிறொடு சேர்ந்து
    உயிரது தேயுமோர்
    துயரெனைத் தொடர்கின்ற பொழுதும்-நெஞ்சம்
    நயமொடு கவிதைகள் எழுதும்!


    பந்தங்களால்; சூழும்
    சொந்தங்களால்; நாளும்
    வெந்துநான் சாகவும் நேரும் - அப்போதும்
    செந்தமிழ் உயிருக்குள் ஊறும்!


    சுற்றிநான்கு சுவர்களன்றி
    சுற்றமில்லை என்றபோதும்
    கற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே
    முற்றுமொரு இணையில்லா சொர்க்கம்!


    திசைகளொரு எட்டும்
    வசைகளையே கொட்டும்
    பசையற்ற வாழ்க்கைகொண்ட போதும் - நெஞ்சில்
    இசைத்தமிழ் இடைவிடாமல் மோதும்!


    மெய்யிருக்கும் பலமும்
    கையிருக்கும் பணமும்
    மெய்யல்ல ஒருநாள் பிரியும் - ஆனால்
    மலைபோலத் தமிழ்மட்டும் விரியும்!


    ஓடியுழைக்கச் சக்தியின்றி
    கூடுகாக்கக் கையிரண்டில்
    ஓடெடுக்கும் நிலைபெற்ற பின்னும் - கவி
    பாடிடுவேன் இதுமட்டும் திண்ணம்!



    சூரிய வெப்பத்தின்
    வீரியம் கூடஇங்கு
    வருஷமொன்று சொல்லக் குன்றும் - அதுவும்
    வாராதென் கற்பனைக்கு என்றும்!


    அணைக்கவொரு ஆளுமின்றி
    துணைக்குவரக் கோலுமின்றி
    தனிமைக்குள் என்னுடலின் தகனம் - நடந்தாலும்
    தமிழ்க்கவிதை நெஞ்சோடு ஜனனம்!


    கட்டையிது தூக்கவொரு
    எட்டுக்கால் களில்லாமல்
    வெட்டவெளிப் பிணமென்றும் வீழட்டும் - நான்
    கொட்டுகின்ற தமிழ்மட்டும் வாழட்டும்!


    பத்துமாதச் சிறைகடந்து
    பலவருஷச் சிறைநடந்து
    சத்தமின்றி சாகின்ற வரைக்கும் - அடி
    முத்தமிழ் மூச்சோடு நுரைக்கும்!


    நோவென்ற ஒன்றும்
    சாவென்ற ஒன்றும்
    கேவலம் உடம்புக்குத் தானடா - அதையெலாம்
    கடந்தது கவியென்பது மானிடா!


    காற்றை ஒத்தது
    கூற்றைக் குடிப்பது
    ஊற்றெடுக்கும் உள்ளத்துக் கவியே - அதற்கொரு
    மாற்றில்லை மயங்குமிந்தப் புவியே!


    திரையிட்டால் மறையாது
    சிறையிட்டால் மரிக்காது
    தரைமுட்டும் விதையின் தன்மை - என்னுள்
    தகிக்கின்ற தமிழுணர்வு உண்மை!


    உதிரத்தின் அணுவெங்கும்
    சதிராடும் கவியுணர்வை
    எதுவந்து மாய்த்திடக் கூடும்? - தமிழ்
    நதியெந்த நாளுமெனில் ஓடும்!


    காலத்தின் கோடோ
    ஞாலத்தின் கேடோயென்
    நாளத்தின் கவிதைத் துடிப்பு - அடக்க
    நினைக்குமெனில் முறியுமதன் இடுப்பு!
    பேனாக்கள் உறங்கிவிட்ட தேசத்தில்
    போர்வாள்கள் விழித்துக்கொள்கின்றன-------ரெளத்திரன்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தமிழ் மீதான காதல் ரசமாலிகாவாக..

    பாராட்டுகள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    பொறாமையா இருக்குங்க... உங்களை பார்த்தா... பின்ன என்னவாம் இப்படியெல்லாம் என்னால எழுத முடியலியே..

    சாவிலும் தமிழ்படித்து சாகவேண்டும்; என் சாம்பலிலும் தமிழ் மணந்து வீசவேண்டும்; என்ற பாவேந்தனின் பா வீச்சை உங்கள் கவிகளிலும் கண்டேன்.. களித்தேன்...!!

    தொடர்ந்து சுடர்விட்டு ஜோதியாய் ஒளிரட்டும் உம் விரல்விட்டு வெளியேறும் தமிழெனும் அக்னிகுஞ்சு..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •