இந்த உலகத்தைபே புரட்டிப்போட வந்த மாகவிஞன் இல்லை நான். என்னைத்தாக்கிய எனக்குத் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வுகளை நான் எழுத்தில் வடிக்க நினைக்கும் போது கவிதை வடிவம் எனக்கு எளிதாகக் கைவருகிறது. எனவே நான் எழுதுகிறேன்.
கும்பகோணம் நகரில் பிறந்து முதுகலை தமிழிலக்கியம் படித்து கல்விப்பட்டமும் பெற்று தமிழகம் என்னை வேலை இல்லை போ என்று துரத்தியதால் புதுதில்லிக்குப் புறப்பட்டுச் சென்ற இராமசாமி ஆகிய ரமேஷ் அங்கே ஆங்கிலம் முதுகலை முடித்து ஆங்கில ஆசிரியனாக பணியாற்றி வருகிறேன்.
பனிரெண்டாம் வகுப்பில் பதினேழு வயதில் கவிதை என்னும் பெயரில் எழுதத்தொடங்கி இன்று வரை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதிகம் எழுதியதில்லை. ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை என சுமார் 300 கவிதைகள் எழுதியுள்ளேன்.
இதுவரை கவிதையை நூற்களாக வெளியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விரைவில் மூன்று தொகுப்புகளும் கதைத்தொகுப்பு ஒன்றுமாக பதிப்பிக்க எண்ணி இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நிறைவேறட்டும்.
கலைவேந்தன் என்னும் பெயரில் எழுதி வரும் நான் சில கதைகளும் தொடர்கதைகளும் எழுதியுள்ளேன்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் முழு நேர எழுத்தாளனாக மாறும் எண்ணமுண்டு.வாய்ப்பினை ஒட்டி திரைப்படத்திற்கும் பாடல்கள் எழுதும் எண்ணமுண்டு.
இவ்வள்வே என்னைப்பற்றிப் பகிர்ந்துகொள்ள என்னிடம் இருக்கின்றன.
இனி என் படைப்புகளைக் காண்போம்.
Bookmarks