அன்பார்ந்த மன்ற நண்பர்களே கவிஞர்களே ரசிகர்களே..
நம் மன்றத்தில் இதுவரை இல்லாத ஒரு கவியரங்கைத் தொடங்குவதில் உளம்மகிழ்கிறேன்.
கவியரங்கம்பற்றி கவிப்பெருமக்கள் அறிந்திருப்பர். ஒரு தலைப்பின் பல உபபிரிவுகளில் தலா ஒருவர் ஒரு தலைப்பில் கவிதைகள் அரங்கேற்றுவது.
நான் ஒரு தலைப்பும் உபதலைப்புகளும் தருகிறேன். யார் எந்த தலைப்பில் எழுதப்போகிறார்கள் என்பதை இங்கே வருகைதரும் கவிஞர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவசியப்பட்ட அவகாசத்தின் பின்னர் குறிப்பிட்ட நாளில் அனைவரும் ஒரே சமயத்தில் இங்கே பதிதல் வேண்டும்.
இது போட்டியல்ல. வெற்றி தோல்வி என்னும் கேள்விக்கே இடம் இல்லை.
ஐயம் எழுமாயின் அதற்கு தீர்வையும் இங்கே சேர்த்துக் கொள்வேன்.
தலைப்பையும் உபதலைப்புகளையும் இன்னும் பிற விவரங்களையும் அடுத்து பதிவில் தருகிறேன்.
கவிஞர்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறும் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
Bookmarks