பாட்டியின் பெருமை சொல்லும் கவி வரிகள் அவளின்று இல்லையே என ஏங்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ஜகதீசன் ஐயா.
பாட்டியின் பெருமை சொல்லும் கவி வரிகள் அவளின்று இல்லையே என ஏங்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ஜகதீசன் ஐயா.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஜானகி , சிவா.ஜி ஆகியோரின் பாராட்டுரைக்கு நன்றி!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
பாட்டி புகழ் பாடிய ஜகதீசன் ஐயாவுக்கும், தங்கை புகழ் பாடிய ரௌத்திரன் அவர்களுக்கும் நன்றிகள். சற்று பணிப் பளு அதிகம் உள்ளதால் உங்கள் கவிதைகள் நலம் பாராட்ட இருநாள் பொழுதளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
பேணியே உனைத்தொழுகிறேன் தமிழே ! கலை
வாணியே ! கவிபடைக்க உதவிடுந் கைவிடாநல்
தோணியே ! என்னை ஏற்றத்துக்கு கொண்டுசெலும்
ஏணியே ! சிறியவள் பிழைகளை பொறுத்திடுவாயே !
துமிழ் மன்றமே போற்றி !
கவியரங்கம் வளர்க ! தங்கமான அவையில்..
தாமரையாய் வீற்றிருக்கும் நடுவருக்கு நல்வணக்கம் !
தாயென்ற தலைப்பை சேயிவள் எடுத்துவிட்டேன்!
தாய்மையின் மாட்சியை கவியாக்கத் திணறிவிட்டேன் !
தாய் மனதோடு தவறுகளை பொறுத்தருள்வீர் !
என் தாயை வணங்கி சமர்ப்பிக்கிறேன் கவிதையை !
தாய்மை என்ப தூய்மை !
நிசந்தனை ! எதிர்பார்க்கும் உறல்கள் முன்
நிபந்தனை கலப்படமற்ற நேயமவளது !
முதியோர் இல்லத் தணிப்பிலும்
நதிபோல் செழிக்க வாழ்த்துமவள் நேசம் !
தாய்மை…வாய்மை !
கூனன் ஊனன் நசனையும் ஈன்றவளுக் கழகே !
அண்டங் காக்கை சேயை சுவர்ண மெனினும்
கீசகங் பிள்ளையை அழகே யெனினும்;
எள்ளளவும் அதிலில்லை பொய்மை…!
தாய்மை என்பது கருணை !
கருணை வடிவம் தாய்மையின் தகை
பெறாமலேயே எல்லையற்ற பரிவால் தெரஸாள்
பெற்றனள் அன்னையெனும் பெருமை !
தாய்மை என்ப அன்புடைமை. !
அன்பு மயமானவரை அன்னை என்பர்
தாய்மையின் பண்புகளைத் தரித்தால்,
ஆணையும் மேன்மகனாக்கும்.. தாயுமானவனென !
தாய்மை என்றால் மறம் !
சித்திர மென்மையுஞ் சாந்தமுமாய் இனிப்பவள்
புத்திர ருக்கோர் பாதகமெனில் வீறுடன்
பத்திர காளியாய் மாறுவாள் !
தாய்மை…. உற்சாகத்தில் இளமை !
ஞானத்தில் முதுமை !
தன் மழலை சிட்டுகளுடன் உலகையே அளப்பாள் !
ஞானப்பால் ஊட்டும் இனிய ஆசானுமாவாள் !
தாய்மை….அவாவின்மை !
நஞ்சறுத்ததும் நெஞ்சோடுப் பிணைத்திட்டவள்
அன்றே தான் தனக்கு என்ப தறுத்தாள் !
தன்னலம் தாய்மையின் அகராதியிலில்லை
தாய்மை வண்மை !
அது அழகு. ஈகை.வலிமை
தாய்மை மேன்மை !
தாயைப் போல் காப்பாயென
இறைவனையே இறைவதால் !
தாய்மை இறைஅன்பின் சால்பு
நாத்திகரும் போற்றும் நடமாடும் தெய்வம்
குற்றம் பார்க்கின் சுற்றமெலாம் பொய்த்திட
தெய்வத்தின் தெரிவு தாயெனும் நண்பே !
நிழலும் தொடர்வது வெயில் வரை யாமே
சுழலிலும் பகையிலும் தீயிலும் பனியிலும்
சுழலும் புவியில் அவளன்பே திண்மையாய் தொடர்ந்திடும்
உழலும் மனமே உணர்ந்து போற்றிடு உன்(னத) தா (ய்மை)யை !
;
Last edited by rema; 23-08-2012 at 05:19 AM.
LIVE WHEN YOU ARE ALIVE !
அருமையான கவியரங்கிற்கு அமர்த்தலாக வந்துவிட்டேன்.
முதலில் இதை முன் மொழிந்த கலை ஐயாவிற்கும்
கலந்து கொண்ட யாவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
சில யோசனைகள்..
ஒவ்வொரு கவியரங்கக் கவிதைகளைத் தனித்திரியாகவும் - அவற்றுக்கான பிறர் விமர்சனங்களைத் தனித்திரியாகவும் கொள்ளலாம்.
கவியரங்கக்களுக்கான அறிவிப்புகள் மற்றும் கவிஞர்கள் சேர்தல் பிறவற்றை இந்தத் தாய்திரியிலேயேத் தொடரலாம்...
என்ன சொல்கிறீர்கள்...?
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
தகைசால் தாய்மையை , வகையாய் எடுத்துரைத்த மின்மினி 11 அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தோழிக்காக நான் எழுதலாமா???
கவிதை எழுததெரியவிடிலும் எழுதும் ஆர்வம் முன் நோக்கி தள்ளிட எனக்கு தமையன் எனும் தலைப்பு பொருந்தும் என்றே எண்ணி வாய்ப்புண்டோ(?) என்று தெரியாவிடிலும் நானும் கலந்து கொள்ள விழைகிறேன் ..
Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 23-08-2012 at 03:39 PM.
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
தாமரை அண்ணா ரொம்ப பிஸியாக இருக்கிறார் போல, கவியரங்கம் தொய்வுறாமல் செல்ல என்ன செய்யலாம் உறவுகளே
அன்புடன் ஆதி
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks